Skip to main content

எச்.ராஜா தூண்டுதலே காரணம்: அய்யாக்கண்ணு பேட்டி

Published on 10/03/2018 | Edited on 10/03/2018

 

ayyakkannu


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணுவுக்கும், திருச்செந்தூர் வீரராகவபுரம் தெருவை சேர்ந்த பாரதிய ஜனதா மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர் நெல்லையம்மாள் என்பருக்கும் வாக்குவாதம் நடந்ததில், அய்யாக்கண்ணு தகாத வார்த்தை பேசியதாகவும், இதனால் அய்யாக்கண்ணுவை நெல்லையம்மாள் கன்னத்தில் அறைந்ததாகவும் வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியானது.
 

நடந்தது என்ன என்று அய்யாக்கண்ணுவை தொடர்பு கொண்டோம். அப்போது அவர் கூறியதாவது,
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், மரபணு மாற்றப்பட்ட விதைகளின் மூலம் விவசாயம் செய்வதை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி முதல் சென்னை வரை 100 நாள் பணத்தை தொடங்கி நடத்தி வருகிறோம். திருச்செந்தூருக்கு சென்றோம். அங்கு முருகன் கோவிலுக்கு சென்று, மோடி அய்யா நல்லவர்தான், அவருக்கு நல்ல எண்ணத்தை கொடு முருகா என வேண்டிக்கொண்டு வெளியே வந்து பயணத்திற்கான துண்டு பிரசுரங்களை கடற்கரையோரம் நின்றிருந்தவர்களிடம் விநியோகித்தோம்.
 

அப்போது திடீரென ஒரு பெண் ஓடி வந்து, அய்யாக்கண்ணு ஒரு ப்ரோடு, அவன்கிட்ட நோட்டீஸ் வாங்காதீங்கன்னு தடுத்தார். நான் உடனே, எதுக்கும்மா என்னை ப்ராடுன்னு சொல்றேன்னு கேட்டேன். உடனே என் கன்னத்தில் அந்த பெண் அறைந்தார். உடனே கூட இருந்தவர்கள் கத்தினார்கள். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களும் ஏன் என்ன என்று கூடினர். வயதானவரை அடிக்கலாமா என அந்த பெண்ணை அனைவரும் திட்டினர். வேண்டுமென்றால் போலீசில் புகார் கொடுங்கள். எங்கள் பயணத்தை தடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு புறப்பட்டுவிட்டோம்.

 

ayyakkannu



சம்பவம் நடந்த இடத்தில் நீங்கள் தகாத வார்த்தையால் திட்டியதாக வீடியோ ஒன்று வாட்ஸ் அப்களில் பரவுகிறதே? எச்.ராஜா உங்களை கைது செய்ய வேண்டும் என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளாரே?
 

அந்தப் பெண்ணை நான் திட்டவில்லை. வீடியோவை நன்றாக பாருங்கள். அது என்னுடைய குரல் அல்ல. அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் திட்டுகின்றனர். இந்த வீடியோ வெளியானதில் இருந்து எனக்கு நிறைய பேர் போன் செய்து தகாத வார்த்தையில் என்னை திட்டுகின்றனர். பிரச்சனை வேண்டாம் என்று எங்களை அந்த இடத்தில் இருந்தவர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் புகார் அளித்துள்ளனர். நாங்களும் புகார் அளிக்க உள்ளோம்.

எச்.ராஜா என்ன வார்த்தையை பயன்படுத்தினாரோ அதே வார்த்தையைத்தான் இந்தப் பெண்ணும், அய்யாக்கண்ணு ப்ராடு என பயன்படுத்தினார். எச்.ராஜா, நாராயணன் ஆகியோருக்கு விவசாயிகள் என்றாலே பிடிக்காது. அவர்களின் தூண்டுதலில்தான் இந்த பெண் எங்களை தடுத்தார். இந்த பெண் ஒரு கருவி. அவ்வளவுதான். சாதாரண விவசாயிகளான எங்களை தடுக்கிறார்களே, இதேபோல் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய கட்சிகள் செய்தால் அவர்களை இவர்களால் தடுக்க முடியுமா என்றார்.

 

Nellaiyammal


இதனிடையே விவசாயிகள் தள்ளி விட்டு தாக்கியதில் காயம் அடைந்ததாக நெல்லையம்மாள் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கோயிலில் நோட்டீஸ் விநியோகிக்கக்கூடாது என்று சொன்ன தன்னை அய்யாக்கண்ணு தகாத வார்த்தையில் திட்டியதாகவும், விவசாயிகள் தாக்கியதாகவும், அய்யாக்கண்ணு மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வும் தெரிவித்துள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

கைவிரித்த பா.ஜ.க.! எதிர்த்து களம் இறங்கும் வேட்பாளர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
BJP leader is contesting against Radhika in Virudhunagar

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், தமிழ்நாட்டிற்கு முதல்கட்டமான ஏப்ரல் 19ம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வேலைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள், வேட்பாளர்கள், தேர்தல் அறிக்கை எல்லாம் முடிந்து கட்சியின் தலைவர்கள் தங்கள் கட்சியின் வேட்பாளர்களையும், கூட்டணி கட்சியின் வேட்பாளர்களையும் ஆதரித்து வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டிவருகின்றனர்.

இந்த தேர்தலில் அதிமுகவில் இருந்து விலகிய பாஜக, தன்னுடைய தலைமையில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், தமாக, அமமுக, பாமக, சமத்துவ மக்கள் கட்சி,  புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளை சேர்த்து கூட்டணி அமைத்துள்ளது.

BJP leader is contesting against Radhika in Virudhunagar

காமராஜர் போல மோடி ஆட்சி செய்வதாக கூறிய சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பாஜக கூட்டணியில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி ராதிகா சரத்குமாருக்கு ஒதுக்கப்பட்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்த ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் பாஜகவை சேர்ந்த மருத்துவர் வேதா என்பவர் விருதுநகர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ம.வீரப்பட்டியைச் சேர்ந்தவர் டாக்டர் வேதா. இவர் மதுரை மேற்கு மாவட்ட விவசாயி அணி மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு பாஜக சார்பாக போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், பாஜக தலைமை விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு நடிகர் சரத்குமாரின் மனைவி நடிகை ராதிகாவை விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவித்தது. இதனால் விரக்தியடைந்த பாஜகவைச் சேர்ந்த டாக்டர் வேதா  சுயேட்சையாக தனது வேட்புமனுவை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் தாக்கல் செய்தார்.