Published on 07/08/2018 | Edited on 07/08/2018

ஆட்டோ சங்கர் தம்பி சிட்டி பாபு மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை அடையாறு பாலத்தின் கீழ் மது அருந்திக்கொண்டிருந்த சிட்டி பாபு மற்றும் அவரது கூட்டாளிகளை ரோந்து சென்ற கோட்டூர்புரம் காவல்நிலைய போலீசார், அவர்களை அங்கிருந்து போக சொல்லி எச்சரித்துள்ளனர். அப்போது அவர்கள் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.