Skip to main content

“ஆணவம் தான் அண்ணாமலையை இப்படி பேச வைக்கிறது” - எம்.பி. ஜோதிமணி காட்டம்

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

'Arrogance is what makes Annamalai talk like this'-M.P. jothimani

 

'அண்ணாமலையின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்படுகின்ற ஆள் நான் கிடையாது' என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

 

காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சொல்கிறார் 'பெண் என்பதால் பிழைச்சிப்போ என விட்டிருக்கிறேன்' என சொல்கிறார். இதை சொல்வதற்கு அண்ணாமலை யார்? மக்களிடம் கொள்ளை அடித்து தமிழ்நாட்டில் வசூல் ராஜாவாகி, பணம் சம்பாதித்து வைத்திருக்கும் திமிர்; மத்திய அரசாங்கத்தில் அதிகாரத்தில் இருக்கின்ற ஆணவம் தான் அண்ணாமலையை இப்படி பேச வைக்கிறது.

 

அண்ணாமலையால் என்னை என்ன பண்ண முடியும். அதிகபட்சம் அண்ணாமலை கையிலும், பிரதமர் மோடி கையிலும் உள்ள அமலாக்கத்துறை எனும் வேட்டை நாய்களைத்தான் எதிர்க்கட்சிகள் இருக்கின்ற எல்லா மாநிலங்களிலும் ஏவிக் கொண்டிருக்கிறார்கள். அண்ணாமலை முடிந்தால் அந்த அமலாக்கத்துறையை எங்கள் வீட்டுக்கு அனுப்பட்டும். அங்கு கஞ்சி போட்ட காட்டன் சேலையை தவிர எடுப்பதற்கு ஒன்றும் கிடையாது. அண்ணாமலை மணல் மாஃபியாக்களிடம் மாதம் 60 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார். வீட்டுக்கு மூன்று லட்சம் ரூபாய் வாடகை என்று சொன்னார்கள். அதற்கு இதுவரை பதில் சொல்லவில்லை.

 

அண்ணாமலையின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் பயப்படுகின்ற ஆள் நான் கிடையாது. நேற்று பெய்த மழையில் இன்னைக்கு முளைச்ச காளான் கிடையாது. நான் ஒரு சாதாரண பெண்ணாக இருந்தேன். என் அப்பா இறந்துட்டாரு. ஒரு ஊராட்சி ஒன்றிய தேர்தலில் போட்டியிட்டு படிப்படியாக காங்கிரஸ் கட்சியிலும் பொதுமக்களுக்காகவும் உழைத்து அர்ப்பணிப்போடு செயல்பட்டு, உறுதியுடன் இருந்து 25 ஆண்டு காலம் கழித்து இந்த இடத்தில் நான் இங்கு வந்து உட்கார்ந்திருக்கிறேன். இந்த மாதிரி நான் மட்டுமல்ல அரசியலில் நேர்மையுடன் உறுதியோடும், நெஞ்சுரத்தோடும் இருந்து அரசியல் உலகில் வெற்றிபெற்ற பெண்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் அவர்கள் மீது தனி நபர் தாக்குதல் நடத்துகின்ற கழிசடை அரசியல்வாதி தான் அண்ணாமலை'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.