Skip to main content

“எங்களையும் முன்களப்பணியாளராக அறிவியுங்கள்” - அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை!!

Published on 22/05/2021 | Edited on 22/05/2021

 

Announce us as frontline workers too - Anganwadi staff request

 

மாவட்டங்கள் தோறும் கரோனா தடுப்புகுழு போடப்பட்டு, அதில் வட்டாரங்கள் வாரியாக அங்கன்வாடி ஊழியர்களையும் இணைத்து செயலாற்றிவருகிறது சமூக நலத்துறை. “கரோனா தடுப்புப் பணியினால் இதுவரை மாநிலம் முழுவதும் 32 பேர் இறந்துள்ளனர். அதையும் பொருட்படுத்தாமல் மகத்தான மக்கள் பணியினை ஆற்றிவருகிறோம். எனவே எங்களையும் கரோனா களப்பணியாளர் அமைப்பு குழுவில் இணைத்து பணி செய்துவருவதால் எங்களையும் முன்களப்பணியாளராக அறிவிக்கவும்” என முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளனர் அங்கன்வாடி ஊழியர்கள்.

 

இது தொடர்பாக, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கமோ, “கரோனா தொற்று எந்த இடத்தில் அதிகம் கண்டறியப்படுகிறதோ அந்த இடங்களுக்குச் சென்று, காய்ச்சலைக் கண்டறிவது, வெளியூரிலிருந்து வந்தவர்கள் குறித்து தகவல் தருவது, கபசுரக் குடிநீர் காயச்சி வழங்குவது, முகாம்களில் உள்ள நோயாளிகளுக்கு, மருந்து மாத்திரை மற்றும் சமையல் செய்து கொடுப்பது, தினமும் சென்று பார்த்து அவர்களின் நிலைகுறித்து அறிக்கை அறிவித்தல், குடும்ப வன்முறை, பணிசெய்தல், அறிக்கை அறிவிப்பது, கரோனா கேம்ப்களுக்கு மக்களை அழைத்து வருவது, அவர்களை தினமும் கண்கானிப்பது, சீட்டு எழுதி கொடுப்பது, கரோனா தடுப்பூசி போடுவதற்கு ஒத்துழைப்பு தருவது என ஊழியர்கள் அனைத்து பணிகளையும் தாய்மை உணர்வோடு, தான் மேற்கொண்டுள்ள பணியின் மீது உள்ள அக்கறையோடும், எங்களுடைய சொந்த செலவிலேயே அனைத்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்கி பணி செய்துவருகிறோம்.

 

சமூகநலத்துறையின் கீழ் உள்ள இத்திட்டத்தில் குறைந்த ஊதியத்தில் இந்தப் பணிகளை செய்துவருகிறோம். இதில் பெரும்பான்மையானவர்கள் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் என மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள பணியாளர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இந்தப் பணிக்கு அழைக்கும்போது நீங்கள் முன்களப்பணியாளர்கள் என்று சொல்லித்தான் பணி செய்ய அழைத்தார்கள். தமிழகம் முழுவதும் இந்தக் கரோனா பணிசெய்து இறந்த ஊழியர், உதவியாளர்களில் இதுவரை ஒருவருக்கு கூட அரசு அறிவித்த கரோனா இறப்பு நிதி வழங்கப்படவில்லை. எந்த ஒரு பயனும் இன்றி தற்போதுவரை அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். எனினும், அதற்கான எந்த விதமான ஊதியமும் வழங்கப்படவில்லை, அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. அதையும் பொருட்படுத்தாமல் வீடுவீடாகச் சென்று உணவு பொருள் வழங்கி, மகத்தான மக்கள் பணியினை ஆற்றிவருகிறோம். ஆகவே, இந்த மக்கள் நல அரசு அங்கன்வாடி ஊழியர்களின் தன்னலமற்ற இந்தப் பணிகளை எல்லாம் கணக்கில்கொண்டு அவர்களையும், அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களையும் பாதுகாக்கும் பொருட்டு உடனடியாக அவர்களைக் கரோனா முன்களப்பணியாளர் என அறிவித்து, அவர்களின் பணியை அரசு அங்கீகரிக்க வேண்டும்” என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

1857 கி.மீ. சைக்கிள் ஓட்டும் போட்டியில் வென்ற கொரியத் தமிழர்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Korean Tamil wins cycling competition

உலகம் முழுவதும் தமிழர்கள் வேலைக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், பணிபுரியும் நாட்டில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்து, சாதனை புரிபவர்கள் மிகவும் சிலரே இருக்கிறார்கள். அப்படி பல துறைகளிலும் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சாதனை புரிந்த தமிழர்களைக் கவுரவிக்க, தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விழா நடத்தி விருது வழங்குகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான அயலகத் தமிழர் விருது வழங்கும் விழா 2024 ஜனவரியில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.  மூன்றாம் ஆண்டாக நடைபெற்ற இந்த அயலகத் தமிழர் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிவியல், தொழில், சமூக சேவை, விளையாட்டு என 8 பிரிவுகளின் கீழ் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 14 அயலகத் தமிழர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதில் 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 218 உலகத் தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த அயலகத் தமிழர்கள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விருதுபெற்ற 14 அயலகத் தமிழர்களில், அவர்களில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள குதிரைகுத்தி கிராமத்தைச் சேர்ந்த முனைவர் குருசாமி ராமன் தனித்த சிறப்புடையவர். இவருக்கு விளையாட்டில் சாதனை புரிந்த தமிழர் பிரிவில், தமிழ்நாடு அரசின் கணியன் பூங்குன்றனார் விருது, தங்கப் பதக்கத்துடன் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.

Korean Tamil wins cycling competition

முனைவர் குருசாமி ராமன், கொரியாவில் 1857 கிலோமீட்டர் தூரமுள்ள சைக்ளிங் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் வெற்றிபெற்ற முதல் இந்தியத் தமிழர் என்ற பெருமையைப் பெற்றவர். இதன்மூலம், தமிழ்நாட்டுக்கும், கொரியாவில் வசிக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.குதிரை குத்தி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி – மாரியம்மாள் தம்பதியின் மகனாக, பின்தங்கிய கிராமத்தில் பிறந்த முனைவர் ராமன் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலைக்கழகத்தில் ஜினோமிக்ஸ் பிரிவில் ஆராய்ச்சியாளராகவும் உதவி பேராசிரியராகவும் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலையில் கடந்த பத்து வருடங்களாக பணிபுரிகிறார். முனைவர் ராமன், மனைவி பொன் அருணா மற்றும் மகள் அதிராவுடன் தென் கொரியாவில் வசித்து வருகிறார்.

Next Story

“பள்ளிவாசல், தர்காக்களுக்கு மானியத் தொகை ரூ.10 கோடியாக உயர்வு” - முதல்வர் அறிவிப்பு

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Rs. 10 crore increase in grant to schools, dargahs says CM stalin

சென்னை தலைமை செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த பின் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஒன்றிய அமைச்சர் ஒருவர் திராவிட மாடல் தான் பிரிவினையை தூண்டுவதாக கூறியிருக்கிறார். எல்லோருக்கும் எல்லாம் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. திராவிட மாடல் பிரிவினையை தூண்டுவதாக கூறுவதைவிட நகைச்சுவை வேறு ஏதும் இருக்க முடியாது. இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க சட்ட இயற்றியது திராவிட மாடல். பள்ளி கல்லூரிகளில் படிக்கும் இஸ்லாமிய பெண்களுக்கான விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன. இஸ்லாமிய மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு மேம்பாட்டுக் கழகம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

பள்ளிவாசல், தர்காக்களுக்கு வழங்கப்படும் மானியத்தொகையை ரூ.10 கோடியாக உயர்த்தப்பட்டது. உலமா ஓய்வூதியம் பெறுவோர் இறந்தால் அவரது குடும்பத்தினருக்கு குடும்பம் ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.5.45 கோடி செலவில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. திமுக அரசு பதவியேற்றதும் முதல்முறையாக மின் மோட்டார் வசதியுடன் கூடிய ஆயிரம் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் பயணம் செய்வோருக்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது” என்றார்.