Skip to main content

5 கும்கி யானைகள்... 7 நாள் போராட்டம்... சிக்கினான் உடைந்த கொம்பு சங்கர்! 

Published on 13/02/2021 | Edited on 13/02/2021

 

 5 Kumki elephants .. 7 day struggle ... broken horn Shankar!

 

வனத்துறையினரின் 7 நாள் போராட்டத்திற்குப் பிறகு பிடிபட்டுள்ளது உடைந்த கொம்பு சங்கர் யானை.

 

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே மூன்றுபேரைக் கொன்ற காட்டுயானையான உடைந்த கொம்பன் சங்கரைப் பிடிக்கக் கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி கடந்த மாதம் உடைந்த கொம்பு சங்கரை பிடிக்க வனத்துறையினர் முயற்சித்தபோது யானையானது அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. அதனையடுத்து உடைந்த கொம்பு சங்கரை பிடிக்கும் பணி கைவிடப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து அண்மையில் மீண்டும் நீலகிரியின் சேரம்பாடி பகுதிக்கு வந்த உடைந்த கொம்பனால் அப்பகுதியில் அச்சம் நிலவியது. அதனைத் தொடர்ந்து உடைந்த கொம்பு சங்கர் யானையைப் பிடிக்க வனத்துறை சார்பில் பல்வேறு கும்கி யானைகள் ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கடந்த ஏழு நாட்களாக வனத்துறையினர் யானையைப் பிடிக்க போராடி வந்த நிலையில், நேற்று (12.02.2021) நீலகிரியின் 10 லைன் வனப்பகுதி என்ற இடத்தில் கும்கி யானைகள் உதவியுடன் சங்கர் பிடிக்கப்பட்டது. 

 

கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கப்பட்ட சங்கர் யானை, கயிறுகள் மூலம் கட்டப்பட்டு 5 கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டு முதுமலை யானைகள் காப்பகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு மரக் கூண்டில் அடைக்கப்பட்டது. உடைந்த கொம்பன் சிக்கியதால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் சேரம்பாடி மக்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராகுல் காந்தி பயணித்த ஹெலிகாப்டரில் சோதனை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Rahul Gandhi's helicopter was tested

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள், அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி இன்று (15.04.2024) நீலகிரி மாவட்டம் பந்தலூர் வந்தடைந்தார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர். ஹெலிகாப்டர் தளத்தில் இருந்து தேவாலயம் செல்லும் ராகுல் காந்தி அங்குள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார். கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு செல்லும் வழியில் பந்தலூர் பகுதிக்கு ராகுல் காந்தி வருகை புரிந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நீலகிரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக ஹெலிகாப்டர் மூலமாக உதயநிதி ஸ்டாலின் நேற்று (14.04.2024) நீலகிரி வந்திருந்தார். அப்போது அவர் வந்த ஹெலிகாப்டரையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

உதயநிதி சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
Udayanidhi's helicopter flying force test

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள், அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நீலகிரியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆர.ராசாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக ஹெலிகாப்டர் மூலமாக உதயநிதி ஸ்டாலின் நீலகிரி வந்திருந்தார். இந்நிலையில் அவர் வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.