Skip to main content

ரேஷன் கடை சுருட்டல்...... ஊழியரின் மீது நடவடிக்கை எடுத்த அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ!!

Published on 16/06/2021 | Edited on 16/06/2021
Angry people at the ration shop ...... Minister and MLA who took action against the ration shop employee

 

தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களை பொது மக்களுக்கு வழங்கி வருகிறது. அதே போன்று அரசு வழங்கும் சலுகைகளும் ரேஷன் கார்டு அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது கரோனா நிவாரணமாக ஒரு குடும்பத்திற்கு 2000 ரூபாய் பணமும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஒன்றும் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் மக்களுக்கு வழங்கிய மளிகை பொருட்களைக் களவாட ஆரம்பித்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளது.

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த தேவனூர் கிராமத்தில் நேற்று நிவாரண உதவித் தொகை 2000 ரூபாய் மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையும் மக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் மளிகை பொருட்கள் தொகுப்பில் இரண்டு பொருட்களைக் குறைவாக வைத்து அந்த ரேஷன் கடை ஊழியர் வழங்கியுள்ளார். இதைக் கண்டு கோபமடைந்த அப்பகுதி பெண்கள் தொகுதி எம்.எல்.ஏவும் அமைச்சருமான செஞ்சி மஸ்தானிடம் ஃபோன் மூலம் தொடர்புகொண்டு புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அமைச்சர் மஸ்தான், நேரடியாக அந்தக் கிராமத்துக்குச் சென்று ரேஷன் கடை மூலம் மளிகை பொருட்கள் எப்படி வழங்கப்படுகிறது என்பதை ஆய்வு செய்தார். அப்போது உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகிய இரண்டு பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு 12 பொருட்களை மட்டும் மக்களுக்கு வழங்கியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடையின் விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூட்டுறவுத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மஸ்தான் உத்தரவிட்டார்.

 

Angry people at the ration shop ...... Minister and MLA who took action against the ration shop employee

 

அதன்படி அந்த நியாய விலை கடை விற்பனையாளர் கர்ணன் என்பவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். அதே போன்று இன்று விழுப்புரம் நகரில் உள்ள சில ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்களைக் குறைத்து தொகுப்பு பைகளை வழங்கியுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்ப அட்டைதாரர்கள், அந்த தொகுப்பு பொருட்கள் அடங்கிய பைகளைச் சம்பந்தப்பட்ட அந்த கடைக்காரர்களிடமே கொடுத்துவிட்டு எங்களுக்கு எந்த பொருட்களும் வேண்டாம் என்று கோபமாகக் கூறி விட்டு வந்துள்ளனர். இந்தத் தகவல் தொகுதி எம்.எல்.ஏ லட்சுமணனிடம் தெரிவிக்கப்பட்டது. அவர், உடனடியாக சம்மந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்குச் சென்று ஆய்வு செய்து முறையாக அனைவருக்கும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ததோடு பொருட்களைக் குறைத்துக் கொடுத்த ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

 

அதேபோல் விழுப்புரம், மணி நகரில் உள்ள ரேஷன் கடையிலும் இதுபோன்ற புகார் எழுந்தது. அதனை விசாரித்து உடனடியாக, பொதுமக்களுக்கு குறைவாகப் பொருட்களை வழங்கிய ரேஷன் கடை விற்பனையாளர் வேல்முருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

Next Story

விழுப்புரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cm MK Stalin election campaign In Villupuram 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதன்படி, 39 மக்களவை தொகுதிகளில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 135 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இதன் மூலம் 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தமாக 874 ஆண்களும், 76 பெண்களும் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக, கரூர் மக்களவை தொகுதியில் 54 பேர் களம் காண்கின்றனர். குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியிடுகின்றனர். மேலும், தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகள் தேர்தல் ஆணையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (05.04.2024) விழுப்புரத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையொட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். அப்போது விழுப்புரம் மக்களவைத் தொகுதி வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமார் மற்றும் கடலூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து முதல்வர் வாக்கு சேகரிக்க உள்ளார்.