Skip to main content

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிராக அதிமுக எம்.பி.க்கள் கொந்தளிப்பு! 

Published on 07/01/2019 | Edited on 07/01/2019

 

 

AIADMK MPs



அ.தி.மு.க. எம்.பி.க்கள் கடலூர் அருண்மொழிதேவன், அரக்கோணம் ஹரி, திருச்சி குமார், சிதம்பரம் சந்திரகாசி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் குன்னம் ராமச்சந்திரன், காட்டுமன்னார்கோயில் முருகுமாறன், சிதம்பரம் பாண்டியன், பண்ருட்டி சத்யா பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமு, சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் இன்று (7.1.2019) காலை 10.30 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் கூட்டாகப் பேட்டியளித்தனர்.

 


அப்போது அவர்கள், "சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் ஆகிய இருவரும், மறைந்த முதல்வர் அம்மா அவர்களுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க அமைச்சரவையை கேட்டதாகவும், அதற்கு, அமைச்சரவை ஒப்புக் கொள்ளவில்லை என்றும், இதனை  ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. 

 


இது தொடர்பாக, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், 'மேற்படி இருவரையும் எதிர்வாதியாக விசாரிக்க வேண்டும். யாரையோ காப்பாற்றுவதற்காக இப்படி பொய்யான குற்றச்சாட்டை அமைச்சரவை மீது வீசியிருக்கிறார்' என்று தெரிவித்திருந்தார். 

 

இதற்கு நேரடியாக பதில் சொல்ல முடியாத டாக்டர் ராதாகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் என்ற போர்வையில் கருத்து தெரிவித்து அமைச்சர் சண்முகத்திற்கு எதிராக கண்டன தீர்மானத்தை நிறைவேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சங்கம் பதிவு பெற்ற சங்கமா?" என்று காட்டமாகக்  கேள்வி எழுப்பினர்கள்.


 

AIADMK MPs



தொடர்ந்து பேட்டியளித்த எம்.பி.க்கள், "அம்மா ஜெயலலிதாவால் பத்து வருடங்கள் ஒதுக்கிவைக்கப்பட்ட டி.டி.வி. தினகரன், அம்மா இறந்ததற்குப் பிறகே அரசியலுக்கு வருகிறார். இப்படி இவர்கள் செய்தது அம்மாவின் சாவில் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறது என்பது சாதாரண தொண்டனுக்கும் சந்தேகம் எழுந்திருக்கிறது உண்மை. இந்த  நிலையில்,  சேத்தியாத்தோப்பில் நேற்று (6.1.2019 ) பேசிய தினகரன், ராதாகிருஷ்ணன் நல்ல அதிகாரி என்று சொல்கிறார். இதன்மூலம் அம்மாவின் சாவில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருக்கு தொடர்பிருப்பதை ராதாகிருஷ்ணன் மறைத்து அவர்களுக்கு ஆதரவாக ஆணையத்தில் வாக்குமூலம் கொடுத்து இருப்பதைத்தான் காட்டுகிறது. இதன்மூலம் பூனைக்குட்டி வெளியே வந்துள்ளது. 

 

மூத்த அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்களைப் பற்றி கூட மிகவும் தரக்குறைவாக கேவலமாக அந்த கூட்டத்தில் பேசியிருக்கிறார் தினகரன். ஒரு கட்டத்தில் , கடலூர் அமைச்சர் எம்.சி. சம்பத் இந்த மாவட்டத்தில்தானே இருக்க வேண்டும் . இந்த வழியாகத்தானே கும்பகோணம் வரவேண்டும். எந்த மரத்தையும் விட்டுவைக்காத போராட்டத்தை செய்தவர்கள் அப்படிப்பட்டவர்கள் எம்.சி. சம்பத்தை சும்மா விடமாட்டார்கள் என்று வன்முறையை தூண்டும் விதமாக  பேசியிருக்கிறார் தினகரன். அவர் அரசியல்வாதியோ தலைவரோ அல்ல. இப்படி பேசியிருப்பதன் மூலம் ஒரு பெரிய சமுதாயத்தை "மரம் வெட்டிகளாக" இழிவுபடுத்தியுள்ளார் தினகரன்.  ஆக,  ஒரு பெரிய சமுதாயத்தை கொச்சைப்படுத்தி பேசிய தினகரனை வன்மையாக கண்டிக்கிறோம்.  அ.தி.மு.க. எந்த சாதியையும ஆதரிக்காது. அம்மாவின் சாவில் மர்மம் இருக்கிறது. அது சசிகலா குடும்பமும் தினகரனும் மன்னார்குடி கும்பலும் சேர்ந்த செய்த சதிதான் என்பது கூடிய விரைவில் அம்பலமாகும்" என்று குற்றம் சாட்டியிருக்கிறார்கள். 

சட்டமன்றம் நடந்து வரும் நிலையில், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் இத்தகைய குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

பிரச்சாரத்திற்கு செல்லும் வழியில் மாரடைப்பு! - அதிமுக எம்பி முகமது ஜான் திடீர் மரணம்!

Published on 23/03/2021 | Edited on 23/03/2021

 

admk rajya sabha mp election campaign incident

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

அதன் தொடர்ச்சியாக, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான், அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (23/03/2021) தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். பின்னர் மதிய உணவு சாப்பிடுவதற்காக முகமது ஜான் காரில் வீட்டிற்குச் சென்றார். பின்னர், மீண்டும் பிரச்சாரத்திற்காக காரில் புறப்பட்ட அவருக்கு வழியில் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக வாலாஜாவில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே உயிர் பிரிந்ததாகத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, முகமது ஜான் எம்.பி.யின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

 

கடந்த 2011- ஆம் ஆண்டில் நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், ராணிப்பேட்டை தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் முகமது ஜான் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். அதைத் தொடர்ந்து, 2019- ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

 

இன்னும் நான்கு ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கும் நிலையில் முகமது ஜான் எம்.பி. காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

நிர்வாண சாமியாரை தரிசித்தது ஓ.பி.ரவீந்திரநாத்குமார் எம்.பி. அல்ல! -வலைத்தள புரளிக்கு முற்றுப்புள்ளி!

Published on 12/03/2020 | Edited on 12/03/2020

பாவம் ஒரு பக்கம்.. பழி ஒரு பக்கம்.. எனச் சொல்வார்கள் அல்லவா? அதுபோல, தேனி எம்.பி., ரவீந்திரநாத்குமார் விஷயத்தில் நடந்திருக்கிறது.

சென்னையை அடுத்து தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தை கொரோனா ஆய்வகமாக மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திரமோடிக்கும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கும் ரவீந்திரநாத்குமார் நன்றி தெரிவித்தபடி இருக்கிறார். ஓ.பி.எஸ். ஆதரவாளர்களோ, தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் ஆய்வு மையம் அமைக்க அனுமதி பெற்று தந்த தளபதி ஓ.பி.ஆர். எம்.பி. அவர்களுக்கு நன்றி என, வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.

 

Rumors in social media about admk mp

 

இது பொறுக்காமலோ என்னவோ,  ரவீந்திரநாத் எம்.பி. தன்னுடைய மனைவியையும் அழைத்துச்சென்று நிர்வாண சாமியார் ஒருவரைத் தரிசித்தார் என புரளி பரப்பியதோடு,  போட்டோ ஒன்றையும் வெளியிட்டிருக்கின்றனர், நெட்டிசன்கள்.  அந்த போட்டோவில், தாடி வைத்துள்ள ஒருவரின் பக்கத்தில் அமர்ந்துள்ள பெண், இரு கைகளாலும் கண்களை மூடிக்கொண்டிருக்க, சாமியாரின் நிர்வாணத்தைச் சகித்துக்கொள்ள முடியாமல்தான், அவர் அப்படி நடந்துகொண்டார் என்று  ‘கமெண்ட்’ வேறு போட்டுள்ளனர்.

 

Rumors in social media about admk mp


அந்த போட்டோவில் உள்ளது கர்நாடக மாநில பா.ஜ.க.அமைச்சர் சி.டி.ரவி எனவும், ரவீந்திரநாத் கிடையாது என்றும் எம்.பி. தரப்பில் விளக்கம் அளித்து ஓய்ந்துவிட்டனராம்.