Skip to main content

உதவி ஆட்சியரை மிரட்டிய அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.  

Published on 27/02/2019 | Edited on 27/02/2019

 

ஆக்ரமிப்பு அகற்றத்தின் போது, வருவாய் ஊழியர்கள், காவல்துறை டி.எஸ்.பி. மற்றும் பொதுமக்கள் முன்னிலையிலேயே உதவி ஆட்சியரை ஒருமையில் மிரட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார் அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர்.
 

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ரவண சமுத்தித்திரத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி சேரன்மகாதேவி உதவி ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் வருவாய்த்துறை ஊழியர்கள் செய்து வந்தனர். இவர்களுக்கு உறுதுணையாக அம்பை சரக துணை கண்காணிப்பாளர் ஜாகிர் உசேன் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். 

 

AIADMK Former MLA


அப்போது அங்கு வருகை தந்த ஆலங்குளம் அ.இ.அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் வந்த வேகத்திலேயே, "சார் உடனே ஆக்ரமிப்பு அகற்றுவதை நிறுத்துங்க. பெரிய இவன் மாதிரி பேசாதீங்க. அத்தனை பேரும் உங்க பெயரை எழுதி வைத்துவிட்டு செத்துபோயிருவாங்க. ஆறடிக்கு மேல் தொட்டாச்சுன்னா (ஆக்கிரமிப்பு 12அடி உள்ளது) இரண்டு பேர் சாவுவாங்க என்று நினைச்சுகோங்க எங்களை என்ன பைத்தியகாரங்கனு நினைச்சிங்களா? நீங்க இன்றைக்கு போய்ருவீங்க உங்களுக்கு ஆறுமாதமோ அல்லது மூன்று மாதமோ. இதை விட்டுட்டுப் போகலைன்னா பஸ் மறியல் செய்து சி.எம். வரை பிரசர் கொடுப்பேன். சட்டப்படி தான் செய்வேன்னா கேரளாவில் போய் செய்யுங்க. (உதவி ஆட்சியர் ஆகாஷ் கேரளாவை சேர்ந்தவர்) ஜேசிபியை தூர எடுத்துட்டுப்போ. இல்லண்ணா அவ்வுளதான்." என அனைவரின் முன்னிலையிலும் மிரட்டல் விடுக்க ஆடிப் போனார் உதவி ஆட்சியர் ஆகாஷ்.

 

AIADMK Former MLA


"உதவி ஆட்சியர் தான் மிரட்டபடும் செயலை வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு,  உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு கண்டும் காணாதுமாய் நகர்ந்துவிடுகிறார். டி.எஸ்.பி.யோ நமெக்கெதுக்கு வம்பு? என நின்றார். நேர்மையாக செயல்பட்டன ஐ.ஏ.எஸ் அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பீ.ஜி.ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து உடனே கைது செய்ய வேண்டும்" என இளையபாரதம் உள்ளிட்ட சமூக அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் மாவட்டத்தில் பதட்டம் நிலவி வருகின்றது.

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக மாஜி எம்.எல்.ஏவின் சகோதரி வீட்டிலும் ரெய்டு

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
 AIADMK ex-MLA's sister's house also raided

அண்மையாக சில மாதங்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி இருந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த சில மாதங்களாக தொடர் சோதனையில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோரது இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

நேற்று முன்தினம் அதிமுக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம் இருந்தபோது டெண்டர் விடுவதில் ரூ.20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். பன்னீர்செல்வம், அப்போதைய நகராட்சி கமிஷனர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், இந்த சோதனை நடைபெற்று முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் குற்றத்தில் தொடர்புடைய ஆவணங்கள், நில மற்றும் சொத்து ஆவணங்கள் 47 கைப்பற்றப்பட்டன. அவற்றின் சொத்து மதிப்பு ரூ.15 கோடியே 64 லட்சத்து 32 ஆயிரத்து 237 என தெரியவந்தது.

 AIADMK ex-MLA's sister's house also raided

இந்நிலையில், இன்று காலை முதல் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவான பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கள்ளக்குறிச்சி எம்எல்ஏவாக இருந்த பிரபு மற்றும் அவரது தந்தை ஐயப்பா ஆகியோருக்கு தொடர்புடைய ஏழு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. தியாகதுருகத்தில் உள்ள பிரபு வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ வின் வீட்டில் நடைபெறும் சோதனையின் தொடர்ச்சியாக விழுப்புரத்தில் உள்ள பிரபுவின் சகோதரி வசந்தி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரியவந்துள்ளது. பிற்பகலுக்கு பின்னர் சோதனையின் முடிவு வெளிவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story

ரெய்டில் சிக்கிய மற்றொரு மாஜி எம்.எல்.ஏ; 7 இடங்களில் சோதனை

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
nn

அண்மையாக சில மாதங்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி இருந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த சில மாதங்களாக தொடர் சோதனையில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி. வீரமணி ஆகியோரது இல்லங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சார்பில் சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

நேற்று முன்தினம் அதிமுக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் நகராட்சி தலைவராக சத்யாவின் கணவர் பன்னீர் செல்வம் இருந்தபோது டெண்டர் விடுவதில் ரூ.20 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

பன்னீர்செல்வம், அப்போதைய நகராட்சி கமிஷனர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில், இந்த சோதனை நடைபெற்று முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் குற்றத்தில் தொடர்புடைய ஆவணங்கள், நில மற்றும் சொத்து ஆவணங்கள் 47 கைப்பற்றப்பட்டன. அவற்றின் சொத்து மதிப்பு ரூ.15 கோடியே 64 லட்சத்து 32 ஆயிரத்து 237 என தெரியவந்தது.

Anti-corruption department raids the house of another AIADMK former MLA

இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவான பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கள்ளக்குறிச்சி எம்எல்ஏவாக இருந்த பிரபு மற்றும் அவரது தந்தை ஐயப்பா ஆகியோருக்கு தொடர்புடைய ஏழு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.