Skip to main content

தனியார் கரோனா பரிசோதனை ஆய்வகங்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்...

Published on 03/06/2020 | Edited on 03/06/2020
Advice of the Corporation of chennai for Private Corona Testing Laboratories

 

சென்னையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தனியார் ஆய்வகங்களுக்கு சென்னை மாநகராட்சி சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.


அதன்படி, சென்னையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் தனியார் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை செய்ய வருபவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தனியார் ஆய்வகங்கள் பெறவேண்டும். பரிசோதனைக்கு வருபவரிடம் ஆதார் இல்லாவிடில் பரிசோதனை முடிவு வரும்வரை அவரை தனிமைப்படுத்தப்படுத்த வேண்டும். பரிசோதனைக்கு வருவோரின் தொலைபேசி எண்களை உறுதிப்படுத்திய பின்னரே சோதனை மேற்கொள்ள வேண்டும். தங்கள் முழு விவரத்தையும் பெறவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி தனியார் ஆய்வகங்களுக்கு  அறிவுறுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்