Skip to main content

தி.மு.க.வில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.!

Published on 09/05/2021 | Edited on 09/05/2021

 

admk leader and former mla join with dmk party

 

காட்சிகள் மாறி கொண்டே இருக்கும், என்பதற்கு இந்த சட்டமன்றத் தோ்தல் ஒரு முன்னோட்டம். அதிலும் தி.மு.க. பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதில் அ.தி.மு.க.வுக்குள் தொடர்ந்து இழுபறியும், இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடையே வாக்குவாதமும், மோதலும் நிலவுகிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சிவகாம சுந்தரி வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில் கடந்த 2016- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் எம்.எல்.ஏ. கீதா மணிவண்ணன் இன்று (09/05/2021) தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து அவருக்கு வாழ்த்து கூறி, தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார். இது கரூர் மாவட்ட அ.தி.மு.க.வினடரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்