Skip to main content

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

Published on 02/08/2022 | Edited on 02/08/2022

 

Admission date notification for arts and science colleges!

 

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதியைக் கல்லூரி கல்வி  இயக்ககம் அறிவித்துள்ளது.

 

தமிழகத்தில் வரும் கல்வியாண்டிற்கான கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 5 தேதி முதல் தொடங்கும் எனக் கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வரும் ஆகஸ்ட் 5 முதல் கலந்தாய்வு தொடங்க உள்ளது. 12 ஆம் வகுப்பில் எடுக்கப்பட்ட மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். 163 கலை, அரசு அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1.3 லட்சம் இடங்களில் சேர 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் ,சில நாட்களுக்கு முன்பு தரவரிசை பட்டியல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அதிலும் இந்த கலந்தாய்வு ஆன்லைன் முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்