Published on 19/07/2018 | Edited on 19/07/2018

நடிகர் கார்த்தி புதுக்கோட்டைக்கு வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர்,
கடைகுட்டி சிங்கம் திரைப்படம் வெற்றிபடமாக அனைத்து திரையரங்கிலும் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தை பார்த்து விட்டு துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு பாராட்டி கடிதம் எழுதி உள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
நடிகை ஸ்ரீரெட்டி எந்தவித ஆதராமில்லாமல் தினமும் ஒரு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். அவரிடம் ஆதாரம் இருந்திருந்தால், போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்து இருப்பார். ஆதாரமில்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இதில் பாதிக்கப்பட்டவர்களும், நடிகர் சங்க உறுப்பினர்களும், தென்னிந்திய நடிகர் சங்கத்திடம் புகார் மனு அளித்தால், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.