Skip to main content

மீண்டும் ரசிகர்களை சந்திக்கும் நடிகர் விஜய்

Published on 13/12/2022 | Edited on 13/12/2022

 

Actor Vijay meets fans again

 

நடிகர் விஜய் 5 மாவட்டங்களைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அண்மையில் சந்தித்து இருந்தார். இந்த நிகழ்வின் போது கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வந்ததற்காக நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்திருந்ததாகக் கூட போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அப்படி பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறிய நிர்வாகிகள் சந்திப்பிற்குப் பிறகு இன்று மீண்டும் பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்திக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

 

இன்று காலை அரியலூர் ,பெரம்பலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மூன்று மாவட்ட நிர்வாகிகளை நடிகர் விஜய் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்