Published on 09/11/2018 | Edited on 09/11/2018
திருவாரூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கணவன் மனைவி படுகாயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கிய இருவரையும் மீட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
![acc](http://image.nakkheeran.in/cdn/farfuture/HjchJtxowoKrylGIoXObRXFpK92c9qligVMmbi3Xweo/1541799970/sites/default/files/inline-images/IMG-20181104-WA0014.jpg)
திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட சாப்பாவூரில் ஜெகஜீவன்ராம் தெருவில் பாண்டித்துரை(50) என்பவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார். இவர் மற்றும் அவரது மனைவி தமிழரசி(37) வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அதிகாலை 2 மணி அளவில் திடீரென்று வீட்டின் சுவர் இடிந்து அவர்கள் மீது விழுந்ததில் விழுந்தது.
![acc](http://image.nakkheeran.in/cdn/farfuture/XfyOuu73BmtAjUtd1nWSe5avmRRhyOUD-zAzsfz7k2A/1541800002/sites/default/files/inline-images/IMG_20181104_133924.jpg)
இதில் படுகாயமடைந்த பாண்டித்துரை மற்றும் அவரது மனைவி தமிழரசி அங்கிருந்து மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.