Skip to main content

சிறுமி பாலியல் வல்லுறவு வழக்கில் 55 ஆண்டு சிறைதண்டனை!! தீர்ப்புக்கு மாதர் சங்கம் வரவேற்பு!!

Published on 23/09/2018 | Edited on 23/09/2018

சிதம்பரம் அருகே 3 வயது சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த கட்டிட தொழிலாளிக்கு 55 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மாதர் சங்கம் வரவேற்று சம்பந்தபட்ட சிறுமியின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியுள்ளனர்.

 

child rape

 

சிதம்பரம் அருகே உள்ள மதுராந்தக நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (34). கட்டிட தொழிலாளியான இவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி சிதம்பரம் அருகே தீர்த்தம் பாளையம் கிராமத்தில் வேலைக்கு சென்றிருந்தார். அப்போது, அந்த கிராமத்தை சேர்ந்த 3 வயது சிறுமி திடீரென மாயமாகி உள்ளார். உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் தேடியபோது அருகில் இருந்த கரும்பு தோட்டத்திலிருந்து அலறல் சத்தம் கேட்டு ஓடி சென்று பார்த்தனர். அப்போது, கட்டிட மேஸ்திரி பழனிச்சாமி சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

 

 

இதையடுத்து கிராம மக்கள் பிடித்து சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இதுதொடர்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை கடலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த வியாழக்கிழமை வழங்கிய தீர்ப்பில் 55 ஆண்டுகள் சிறை தண்டனையும், 11 ஆயிரம் ரூபாய் அபராதமும், மற்றொரு பிரிவில் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த இரு தண்டனையையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.

 

 

இதுகுறித்து அறிந்த இந்திய ஜனநாய மாதர் சங்க கடலூர் மாவட்ட செயலாளர் தேன்மொழி, நிர்வாகிகள் மல்லிகா,அமுதா ஆகியோர் சம்பந்தபட்ட சிறுமியின் வீட்டுக்கு சென்று சிறுமியின் குடும்பத்திற்கு தீர்ப்பின் விபரம் குறித்து விளக்கி கூறி ஆறுதல் கூறினார்கள். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய தேன்மொழி இந்த சம்பவம் நடைபெற்ற போது இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்று மாவட்டம் முழுவதும் கண்டன ஆர்பாட்டம் செய்தோம். தற்போது கொடுக்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கதக்க வகையில் உள்ளது. மாவட்டத்தில் பெண்களுக்கும், பெண்குழந்தைகளுக்கும் ஏற்படும் குற்றசெயல்களை குறைக்க மாவட்ட காவல்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவிலுக்குச் சென்ற போது நேர்ந்த சோகம்; பெண்கள், மாணவிகள் 4 பேர் பலி

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
4 women who went to the temple drowned in the water and passed away

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா( 45) அவரது மகள் லலிதா (22). அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காவியா (18) அவரது 17 வயது தங்கை   உட்பட 4 பெண்கள் இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் அருகே உள்ள வேப்பூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுள்ளனர். வழிபாடு முடிந்த நிலையில் முனீஸ்வரன் கோவிலுக்கு அருகே உள்ள வேப்பூர் ஏரியில் உள்ள தண்ணீரில் நான்கு பெண்களும் இறங்கி உள்ளனர் 

ஏரியில் உள்ள சுழலில் சிக்கி நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கி கூச்சலிட்டுள்ளனர். மேலும் நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கிய நிலையில் அக்கம் பக்கத்தினர் இது குறித்து குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி சரோஜா, லலிதா, காவியா, பிரீத்தா, ஆகிய நான்கு பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரே பகுதியைச் சேர்ந்த அம்மா, மகள் மற்றும் சகோதரிகள் என நான்கு பெண்கள் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

சகோதரிகள் இருவரை 5 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 Police arrested 4 people for misbehaving with two sisters

அருப்புக்கோட்டை - கல்லூரணியைச் சேர்ந்த பெண் ஒருவர், அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், ‘என்னுடைய தங்கை,  அருப்புக்கோட்டை பெர்கின்ஸ்புரத்தில் வசித்து வருகிறார். நாங்கள் இருவரும் குறிஞ்சாங்குளத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில், எனது சம்பளப் பணத்தை வாங்குவதற்காக அருப்புக்கோட்டையில் உள்ள என்னுடைய தங்கை வீட்டிற்குச் சென்றபோது, எங்களுக்கு அறிமுகமான ராஜ்குமார் என்பவர் எங்களிடம், ‘உங்க மாமாவுக்கு ஆக்ஸிடன்ட் ஆயிருச்சு.’ என்று கூறி, எங்களை அழைத்துக் கொண்டு வாழ்வாங்கி காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்றார்.  அங்கு  மறைந்திருந்த  நான்கு பேரும், ராஜ்குமாரை தாக்குவது போல் தாக்கி, அவர் கண் முன்னே எங்கள் இருவரையும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர்.’  எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். டிஎஸ்பி ஜெகந்நாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட காவல்துறையினர், இளம் பெண்களை அழைத்துச் சென்று விசாரணை  நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, சேதுராஜபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 24) என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, ராஜ்குமாரும், இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மற்ற நான்கு பேரும் கூட்டாளிகள் என்பதும், அதிலொருவன் 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து ராஜ்குமார் அளித்த தகவலின் அடிப்படையில், அந்த 17 வயது சிறுவன், ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் (வயது 26), சூரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலாஜி (வயது 26) மற்றும் இளம் பெண்களை அழைத்துச் சென்ற ராஜ்குமார்(24) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். தலைமறைவான பந்தல்குடியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரைத் தேடி வருகின்றனர்.