Skip to main content

கார் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4பேர் பலி!

Published on 30/11/2017 | Edited on 30/11/2017
கார் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4பேர் பலி!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தொகுதியில் இருக்கும் போளூரை சேர்ந்த தங்கவேல், அவரது மனைவி சந்திரா கொழுந்தியாள் கோகிலா, மாமியார் மொம்முதாயி, தங்கை ஜோதிமணி ஆகியோர் குடும்பத்தோடு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு காரில் போய்விட்டு இன்று  மதியம் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.



இவர்களுடைய கார் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள லக்கையன் கோட்டை அருகே சென்று கொண்டு இருக்கும்போது பழனியிலிருந்து வந்து  கொண்டு லாரி திடீரென தங்கவேல் ஒட்டிகிட்டு வந்த கார் மீது மோதியதில் சம்பவ  இடத்திலேயே தங்கவேல் துடிதுடித்து இறந்தார். மற்ற நான்கு பேரும் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டடிருந்தனர். இவர்களை ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலல் அளிக்காமல் கோகிலா, மொம்முதாயி, ஜோதிமணி ஆகியோர்  இறந்தனர். இதில் தங்கவேல் மனைவி சந்திரா மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் அரசு  மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வருகிறார். 



இப்படி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  நான்கு பேர் விபத்தில் பலியானதை கண்டு சொந்த ஊரே சோக வெள்ளத்தில் மூழ்கியது. இதை கேள்வி பட்டுதொகுதி எம்.எல்.ஏ.வான  சக்கரபாணி நேரில் சென்று  பாதிக்கப்பட்ட  குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். 
  

-சக்தி

சார்ந்த செய்திகள்