Skip to main content

விருத்தாசலத்தை மாவட்டமாக்க வலியுறுத்தி 1 லட்சம் கையெழுத்து இயக்கம் தொடக்கம்! 250 குடியரசு தின கிராம சபைகளில் தீர்மான திட்டம்!

Published on 25/01/2019 | Edited on 26/01/2019

கடலூர் மாவட்டம்  விருத்தாசலத்தில் வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலையம், மண்டல தபால் நிலையம்,  தமிழகத்தின் மையமாக கொண்டு புகைவண்டி சந்திப்பு நிலையம், அதேபோன்று கல்வித்துறை, பத்திரப்பதிவு துறை, மின்சாரத் துறை, ஊரக வளர்ச்சி துறை,  வணிகவரித் துறை போன்ற பல்வேறு துறைகளில் உயர் நிலை அலுவலகங்கள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன.  மேலும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய பீங்கான் தொழிற்பேட்டை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியும் உள்ளன.  தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக விருத்தாசலம் மாவட்டம் துவக்க ஏதுவாக தற்போது விருத்தாசலம் கோட்டத்தில் சார் ஆட்சியர் அலுவலகமும்,  விருத்தாசலம் காவல் துணை மாவட்டத்தில் உதவி கண்காணிப்பாளரும் பதவி வகித்து வருகிறார்கள். இவ்வளவு வசதி வாய்ப்புள்ள  விருத்தாசலம் வட்டம் மற்றும் திட்டக்குடி வட்டம், காட்டுமன்னார்குடி வட்டம், ஸ்ரீமுஷ்ணம் வட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். 

 

1 lakh signature movement

 

இவ்வளவு முக்கியத்துவம் கொண்ட இந்த பகுதி புதிய மாவட்டமாக மாற்றுவதற்கு தகுதியானதாகும். எனவே புதிய மாவட்டம் அமைக்க தமிழ்நாடு அரசை  வலியுறுத்தும் வகையில் விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பில் திரு கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரி முன்பாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.  கல்லூரி முதல்வர் முனைவர் வேலு  தொடங்கி வைத்தார். கார்மாங்குடி வெங்கடேசன் தலைமை தாங்கினார்.  ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தங்க தனவேல், கே.கந்தசாமி, ச.சத்தியராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்க,  செந்தில்குமார் வரவேற்புரை ஆற்றினார். பார்த்தசாரதி நன்றி கூறினார். 

 

1 lakh signature movement

 

நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவிகள்,  மாணவர்கள் பொதுமக்கள், வணிகர்கள்,  அரசியல் பிரமுகர்கள் என பல்வேறு பட்ட அமைப்பினர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.  இந்த கையெழுத்து இயக்கத்தின் மூலம் ஒரு லட்சம் கையெழுத்து பெற்று முதலமைச்சரிடம் ஒப்படைக்க விழிப்புணர்வு இயக்கத்தினர் முடிவெடுத்துள்ளனர்.

 

1 lakh signature movement

 

மேலும் இதே கோரிக்கைக்கு வலிமை சேர்க்கும் விதமாக இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு விருத்தாசலம் மங்களூர், நல்லூர்,  கம்மாபுரம், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்குடி ஆகிய  ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 250  ஊராட்சிகளிலும்  நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில்  அனைத்து கட்சியினரும், விவசாயிகளும்,  பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டு விருத்தாசலம் மாவட்ட கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒழுங்கா பணத்தை எடு..” -  மிரட்டி மாமூல் வசூலிக்கும் அதிமுக கவுன்சிலர் 

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

AIADMK councillor Virudhachalam extorting money from shopkeepers by threatening them

 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும். இந்த பகுதியில் பழக்கடை, பூக்கடை, துணிக்கடை என ஏராளமான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, இங்குள்ள சாலையோர பகுதிகளில் தள்ளுவண்டிகளில் சிற்றுண்டிகள், உணவுப் பொருட்கள் விற்பனை செய்வது என ஏழை எளிய மக்கள் வயிற்றுப் பிழைப்புக்காக ஒரு சில கடைகளை நடத்தி  வருகின்றனர்.

 

இதனால், இந்த கடை வீதியில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதால், அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுவதும் வழக்கம். அந்த வகையில், விருத்தாசலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், அதிமுக கட்சியைச் சார்ந்தவர். மேலும், அவர் விருத்தாசலம் நகர மன்ற ஐந்தாவது வார்டு உறுப்பினராகப் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், கவுன்சிலராகவும் கட்சி பொறுப்பிலும் இருக்கும் ராஜேந்திரன், அங்குள்ள சாலையோர கடைகளில் தொடர்ந்து  மாமூல் கேட்டு வசூல் செய்துள்ளார்.

 

அப்போது, அவர் கேட்ட பணத்தைக் கொடுக்காத ஏழை மக்களிடம், "நான் கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால், இனிமேல் நீங்கள் இந்த இடத்தில் தொழில் செய்ய முடியாது" என மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. ஒருகட்டத்தில், ராஜேந்திரனால் பாதிக்கப்பட்ட மக்கள் அவர் கேட்கும் பணத்தைக் கொடுத்து வந்தனர். அப்போது, இதனைப் பயன்படுத்திக்கொண்ட ராஜேந்திரன் சாலையோர கடைகளில் தொடர்ந்து மாமூல் வசூலித்து வந்துள்ளார். மேலும், அந்த பகுதியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வந்தது.

 

இந்நிலையில், வழக்கம்போல் விருத்தாசலம் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்குச் சென்ற ராஜேந்திரன், அங்குள்ள தள்ளுவண்டியில் தொழில் நடத்தும் பிரியாணி கடையில் மாமூல் கேட்டுள்ளார். அப்போது, அங்கிருந்த கடை உரிமையாளர், பணமெல்லாம் கொடுக்க முடியாது" எனக் கூறியுள்ளார். இதனால், கோபமடைந்த ராஜேந்திரன் "சீக்கிரமா கடைய எடு.. பொருள் எல்லாம் எடுத்து உள்ள வை.. இனிமே இங்க தொழில் செய்யக் கூடாது” என மிரட்டியுள்ளார்.

 

ஆனால், அதற்கெல்லாம் பணியாத கடை உரிமையாளர், "எதுக்குணா கடை போட கூடாது. நீங்க காசு கேட்டு கொடுக்கலைன்னா கடை போடக் கூடாதா? நீங்க யாரு முதல்ல? நான் எதுக்கு உங்களுக்கு காசு கொடுக்கணும்" என எடுத்தவுடனே ஹை வால்டில் எகிறினார். இதனால் பம்மிய ராஜேந்திரன், “தம்பி பப்ளிக் பா" என நாசூக்காக கூறினார். ஆனால், அப்போதும் விடாத கடை உரிமையாளர், "என்ன சும்மா நூறு ரூபாய் கொடு நூறு ரூபாய் கொடுன்னு கேக்குறீங்க? இனிமே இந்த வேல வெச்சிக்காதிங்க" எனக் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

மேலும், இந்த சம்பவத்தை அங்கிருந்த ஏராளமான மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர், அதிமுக கவுன்சிலர் மிரட்டுவதைத் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அதன்பிறகு, அந்த விடியோவை சோசியல் மீடியாவில் லீக் செய்துள்ளார். தற்போது, இந்த வீடியோ பொதுமக்களிடையே அதிகம் பகிரப்படுகிறது.

 

- சிவாஜி

 

 

 

Next Story

தமிழகத்தில் 25 வட்டங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அரசிதழில் வெளியீடு 

Published on 21/07/2023 | Edited on 21/07/2023

 

Gazette 25 taluk as drought affected areas in Tamil Nadu

 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் குறைந்த மழைப் பொழிவினால் 33 சதவிதத்திற்கும் அதிகமாக பயிர்ச்சேதம் ஏற்பட்ட பகுதிகளை வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. புதுக்கோட்டை,சிவகங்கை,ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள 25 வட்டங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய இரு வட்டங்களும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை, இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை ஆகிய 4 வட்டங்களும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள போகலூர், கடலாடி, கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், நயினார்கோவில், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடானை ஆகிய 11 வட்டங்களும் வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 

மேலும், தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 6 வட்டங்களும், தூத்துக்குடி  மாவட்டத்தில் உள்ள ஆள்வார்திருநகரி வட்டமும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  நரிக்குடி, திருச்சுழி  என இரு வட்டங்கள் என மொத்தம் 25 வட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் வேளாண் வறட்சியால் பாதிப்புக்குள்ளான பகுதிகளாக அறிவித்து தமிழக அரசு சார்பில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.