Skip to main content

அன்புமணி ராமதாஸின் அரசியல் பாணி என்ன...?

Published on 28/11/2018 | Edited on 28/11/2018

தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் அமைப்பு சார்பில் ‘அன்புமணியிடம் கேளுங்கள்’ என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தினார்கள்.  அதில் தகவல் தொழிநுட்பத் துறையில் இருக்கும் ஜுனியர் முதல் சீனியர்கள் வரை பங்கு கொண்டார்கள். அதில் ஒருவர் “ஐம்பது வருட திராவிட அரசியல், மாநிலத்தை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றதா, நீங்களும் திராவிட அரசியல் வழியை பின்தொடர்வீர்களா. அல்லது வேறு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறார்களா. மேலும் எம்ஜிஆர் நிறைய ஊழல்வாதிகளை உருவாக்கியிருக்கிறார் என்று சொன்னது எதனால்” என்று கேட்டார். அதற்கு அன்புமணி ராமதாஸ், தனது பதிலை பதிவு செய்தார். 

 

 

aa

 

 

"திராவிட அரசியலை நான் பின்தொடரமட்டேன். மேலும் திராவிட அரசியல் முற்றிலும் தோற்றுபோன ஒன்று. திராவிட அரசியலின் நோக்கம் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் அவ்வளவுதான். எங்கள் நோக்கம் அடுத்த தலைமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதே. தமிழ்நாடு பீஹாரைவிட எவ்வளவோ உயர்ந்திருக்கிறது என்று சொல்வார்கள். ஆனால், நான் வளர்ந்த நாடுகளான சிங்கபூர் போன்ற நாடுகளுடன் ஒப்பிட விரும்புகிறேன். இருபத்தியைந்து வருடத்திற்குமுன் ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது அவர்கள், படிப்பு, வேலை வாய்ப்பு, மருத்துவம், சினிமா என்று அனைத்திற்கும் இங்கு வந்தார்கள். ஆனால், இன்று நாம் ஹைதராபாத் செல்கிறோம். இதில் நமது வளர்ச்சி எங்கு இருக்கிறது.      

 

எம்ஜிஆர் நிறைய ஊழல்வாதிகளை உருவாக்கினார் என்று ஏன் சொன்னேன் என்றால், 1969-ல் கலைஞர் ஆட்சிக்கு வருகிறார் அபோதுதான் நிறைய ஊழல்கள் நடைபெற ஆரம்பிக்கிறது. அவர்கள்தான் அறிவியல் ரீதியான ஊழல் என்பதை அறிமுகம் செய்கிறார்கள். அதற்காக பஞ்சாப்பின் தலைமை நீதிபதி சர்க்காரியா தலைமையில் சர்க்காரியா கமிஷன் அமைத்து அதனை ஆராய்வதற்கு குழு அமைத்தார்கள். அவரும் எவ்வளவோ ஆராய்ந்தார். அவருக்கு ஊழல் நடந்திருக்கிறது என்பது தெரிகிறது. ஆனால், இறுதிவரை அவரால் ஊழல் எங்கு நடந்திருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் எம்ஜிஆர் ஊழல் அற்ற ஆட்சியை கொடுக்க வேண்டும் என்று திமுகவில் இருந்து வெளியேறி புதிதாக, நல்ல நோக்கத்துடன் கட்சியை அமைத்து பதிமூன்று வருடங்கள் ஆட்சி நடத்தினார். அதன் பிறகு அவரின் கட்சியில் இருந்துவந்த ஜெயலலிதா, சசிகலா, ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமகளால் ஆயிரக்கணக்கான ஊழல்வாதிகள் உருவெடுத்துவிட்டார்கள். இதானால் எம்ஜிஆர்-ன் நோக்கம் சிதைந்து, இலட்ச கணக்கான ஊழல்வாதிகளை அவர் உருவாக்கி சென்றியிருக்கிறார் என்று சொன்னேன்” என்று பதில் அளித்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.