Skip to main content

பெங்களூரு சிறைத்துறைக்கு சசிகலா கடிதம்... தமிழக அரசியலில் பெரும் விவாதம்... 

Published on 24/09/2020 | Edited on 24/09/2020

 

Sasikala'

 

சிறையிலிருந்து, தான் விடுதலையாவது தொடர்பான எந்த ஒரு தகவல்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டம்  மூலம் மூன்றாம் நபருக்கு வழங்கக் கூடாது என பெங்களூரு சிறைத்துறைக்கு சூப்பிரடெண்ட்டுக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார். 

 

சொத்துக்குவிப்பு வழக்கில், கடந்த 2017 பிப்ரவரியில் சிறைக்குச் சென்ற சசிகலாவின் சிறைவாசம் 2021, ஜனவரியில் முடிவடையவுள்ளது. சசிகலா சிறையில் இருந்து எப்போது வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பு அரசியல் கட்சிகளிடத்தில் உள்ளது. மேலும் சசிகலா சிறையில் இருந்து வெளியேறுவது தொடர்பான  செய்திகளும்  ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன.  

 

இந்நிலையில், தான் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவது தொடர்பான எந்த ஒரு தகவல்களையும் ஆர்.டி.ஐ மூலம் வழங்கக் கூடாது என பெங்களூரு சிறைத்துறை உயரதிகாரிக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார். 

 

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், "தன்னை விடுதலை செய்யும் தேதி தொடர்பாக அறிந்துகொள்ள பலரும் சிறைத்துறைக்கு தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம் பதிவு செய்துள்ளதை நான் அறிவேன். அவர்கள் அரசியல் காரணங்களுக்காகவும் விளம்பரம் தேடுவதற்காகவுமே, தான் சிறையில் இருந்து விடுதலையாகும் தேதி குறித்து கோரியுள்ளனர். ஆனால் தனிமனித ரகசியம் என்பது ஒருவரின் அடிப்படை உரிமை. எனவே தனது விடுதலை தொடர்பான செய்திகள் தனது அனுமதியின்றி மற்றவர்களுக்கு வழக்கப்படக்கூடாது. 

 

Ad


சிறைத்துறையிடம்  கேட்டுக்கொள்வது என்னவெனில், தான் விடுதலையாகும் தேதி குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் விண்ணப்பித்துள்ளவர்களுக்கு அது தொடர்பான தகவல்களை வழங்கக்கூடாது" என தெரிவித்துள்ளார். 

 

அவர் எழுதியுள்ள அந்தக் கடிதம் அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகியிருக்கிறது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சட்டை பட்டன் போடாவிட்டால் அனுமதி இல்லை? மெட்ரோ நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
The injustice done to the person who came without buttoning the suit in bangalore metro rail

கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி ராஜாஜி நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில், முதியவர் ஒருவர் அசுத்தமான ஆடைகளுடன் மெட்ரோ ரயிலில் பயணிக்க, முறையான பயணச்சீட்டு வைத்துக் கொண்டு வந்துள்ளார். அப்போது பாதுகாப்பு மேற்பார்வையாளர் ஒருவர், அங்கு வந்திருந்த ரயில் பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அவர், அசுத்தமான ஆடைகளுடன் முதியவர் வந்ததால், அவரை ரயிலில் பயணிக்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைக் கண்ட சக பயணிகள், பாதுகாப்பு மேற்பார்வையாளரிடம், முறையான பயணச்சீட்டு வைத்திருந்த போதும், முதியவர் ரயிலில் அனுமதிக்கப்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது. மேலும், பெங்களூரு மெட்ரோ ரயில் ஊழியருக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம், முதியவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு மேற்பார்வையாளரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், அந்த சம்பவத்தை போல் மீண்டும் ஒரு சம்பவம் பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக மாநிலம், தொட்டகல்லாசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று (09-04-24) கசங்கிய நிலையில் அணிந்திருந்த சட்டையும், சில பட்டன்கள் போடாமலும் ஒரு நபர் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது, அவரைத் தடுத்து நிறுத்திய மெட்ரோ அதிகாரிகள், ‘சட்டையின் பட்டனை தைத்து மாட்டிக்கொண்டு சுத்தமான ஆடை அணிந்துவர வேண்டும், இல்லையென்றால் ரயில் நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்’ என்று கூறியதாகக் கூறப்படுகிறது.

இதனைக் கண்ட அங்கிருந்த சக பயணிகள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளில் ஒருவர், இந்த சம்பவத்தை தனது செல்போன் மூலம் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, அங்கு நடந்த சம்பவத்தை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Next Story

150 அடி தேர் கவிழ்ந்து விபத்து; வெளியான பரபரப்பு காட்சி

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
150 feet chariot overturned accident; Exciting scene released

திருவிழாவில் பக்தர்களால் வடம் பிடித்து இழுத்துச் செல்லப்பட்ட 150 அடி உயரம் கொண்ட தேர் சாய்ந்து விழும் பரபரப்பு வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஹூஸ்கூர்  என்னும் கிராமத்தில் தேர் திருவிழா இன்று நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் கோவில் திருவிழாவில் இரண்டாவது நாளான இன்று தேர் திருவிழா நடைபெற்றது. சுமார் 150 அடி உயரம் கொண்ட அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக தேர் சாய்ந்து விழுந்தது. தேர் சாய்ந்து விழுவதை சுதாரித்துக்கொண்ட பக்தர்கள் உடனடியாக அங்கிருந்து ஓடியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் இதில் ஏராளமான பக்தர்கள் காயத்துடன் மீட்கப்பட்டு அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், 150 அடி தேர் சாய்ந்து விழுந்த இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.