Skip to main content

வேலூரில் 9 வயது சிறுமி காவல்துறையினரால் சித்திரவதை: உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த ஆணையிடவேண்டும்! திருமாவளவன் வலியுறுத்தல்

Published on 29/07/2020 | Edited on 29/07/2020
Thirumavalavan

 

“அண்மையில் வேலூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ள, காவல்துறையின் வன்கொடுமையும் பேரதிர்ச்சியை அளிக்கிறது. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவரென காவல்துறையினரால் தேடப்படும் காட்பாடியை சார்ந்த ஜானி என்பவரை கைது செய்ய இயலாத நிலையில், அவரது குடும்பத்தினரை கைது, சிறை, அவமதிப்பு என மிகமோசமான சித்திரவதைகளுக்குள்ளாக்கி வருகிறது வேலூர் - விருதம்பட்டு காவல் நிர்வாகம். 

 

ஜானியின் மனைவி, மகள், தாய், பெங்களூரில் வசிக்கும் சகோதரி, மாமனார், மாமியார் மற்றும் மைத்துனர்கள் உள்ளிட்ட மொத்த குடும்பத்தின் மீதும் வன்முறையை ஏவியுள்ளது காவல்துறை. குறிப்பாக, அவரது மகளான ஒன்பது வயது சிறுமியையும் காவல் அதிகாரிகள் சித்திரவதைக்குள்ளாக்கி வருகிறார்கள் என்பது கடுமையான அதிர்ச்சியை அளிக்கிறது.

 

விருதம்பட்டு காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றும் புகழ் என்பவரின் தலைமையில்தான் இத்தகைய அத்துமீறல்களும், சித்திரவதைகளும் அரங்கேறியுள்ளன. கடந்த மார்ச் மாதம் ஜானியின் மனைவி ஷாலினியை விருதம்பட்டு காவல் அதிகாரிகள் கைது செய்து மூன்று நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர். அவர் மீது எந்த வழக்குமில்லை. ஆனால், அவரைக் கைது செய்து கொடுமை இழைத்துள்ளனர். இந்த சித்திரவதையின்போது, ஒன்பது வயதான அவரது மகள் ஜெனிஷா எனும் சிறுமியும் விருதம்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதைக்கு ஆளாகி இருக்கிறார். கடந்த 2018ல் பதிவான வழக்கொன்றில் ஷாலினியை வேண்டுமென்றே இணைத்து சிறைக்கு அனுப்பி இருக்கிறது விருதம்பட்டு காவல் நிர்வாகம்.

 

நீதிமன்றத்தில் குற்றவியல் நடுவர் முன்னிலையில், தான் சட்டவிரோத காவல் சித்திரவதைகளுக்கு ஆளானதை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். இதனை பொறுத்துக்கொள்ள இயலாத காவல் அதிகாரிகள் ஷாலினியின் மீது மேலும் ஒரு பொய் வழக்கை பதிவு செய்து கைது செய்துள்ளனர். பின்னர், ஷாலினியின் ஒன்பது வயது மகள் ஜெனிஷாவை, அரசு சிறுவர் காப்பகத்தில் வலுக்கட்டாயமாக சேர்த்திருக்கிறார். 43 நாட்களுக்குப்பின்னர்,  உயர் நீதிமன்ற ஆணையின்படி, சிறுமி ஜெனிஷா மீண்டும் தாயிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் இன்னும் அவரும், அவரது குழந்தையும் காவல்துறையினரால் அச்சுறுத்தப்படுவது தொடர்கிறது. காவல்துறையினரின் இத்தகைய அதிகார வரம்பு மீறல்களை- வன்கொடுமைகளை விசிக சார்பில் மிக வன்மையாக கண்டிக்கிறோம்.

 

காவல்துறையின் சித்திரவதைக்கு ஆளாகியுள்ள ஷாலினி மற்றும் சிறுமி ஜெனிஷாவுக்கு நீதிகிட்டும் வகையில், இதனை உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரிக்க தமிழக அரசு ஆணையிட வேண்டுமென விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.