Skip to main content

பூத் வரை இறங்கி அடிக்கும் திமுக! ஐ‌டி பிரிவின் அதிரடி!

Published on 09/04/2018 | Edited on 09/04/2018


உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அனைத்தும் மாறிவரும் சூழலில், அரசியல் கட்சிகளும் தகவல் தொழில்நுட்பத்தை கையில் எடுத்துக்கொண்டு தங்களின் கொள்கைகளை நேரடியாக மக்களிடம் கொண்டுசெல்ல பயன்படுத்துகிறார்கள். அந்தவகையில் கடந்த பல ஆண்டுகளாக தனித்த அணியாக இல்லாமல் செயல்பட்டு வந்த திமுக தகவல் தொழில்நுட்ப அணி, தற்போது முழுமையாக களத்தில் இறங்கியிருக்கிறது.


 
திமுகவின் கொள்கைகள், செயல்பாடுகளை காலத்திற்கு ஏற்றவகையில் அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டுசெல்லும் வகையில் திமுகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு கடந்த ஆண்டு உருவாக்கபட்டது. தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயலாளராக மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி‌.டி.‌ஆர்.பழனிவேல் தியாகராஜனை திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் நியமித்திருந்தார். அதன்பின்னர் மாவட்ட, தொகுதிவாரியான நிர்வாகிகளுக்கான நேர்முகத்தேர்வுகள் நடைபெற்றது. நேர்முகத்தேர்வில் எந்தவிதமான பரிந்துரைகளுக்கும் இடம் அளிக்காமல் பார்த்துக்கொண்டார் பி‌டி‌ஆர். தமிழகம் முழுவதும் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் மாவட்டத்தில் இருக்கக்கூடிய அமைப்பாளர்களுக்கு எந்தவிதமான செலவையும் வைக்கவில்லை. சுதந்திரமாக செயல்பட தலைமையிடம் இருந்து ஒப்புதல் பெற்றார்.  

 

DMK


 
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட, தொகுதிவாரியாக மொத்தம் 439 பேர் தேர்வு செய்யபட்டு பட்டியல் வெளியானது. அதன்பின்னர், கடந்த வாரம் தொழில்நுட்பப் பிரிவின் துணைச்செயலாளராக  தமிழ் பொன்னி, கார்த்திக் மோகன், இசை ஆகியோர் நியமிக்கபட்டனர். இந்நிலையில் திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தொடக்கவிழா கடந்த சனிக்கிழமை சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


பி‌டி‌ஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட பொறுப்பாளர்கள் மத்தயில் பேசியது குறித்து தொண்டர் ஒரு விவரித்தார்...


“கண்ணியமாக செயல்படவேண்டும். சாதிப் பிரச்சனையை தூண்டும் விதமாக பேசக்கூடாது. தற்பெருமை பேசாமல் இருக்கவேண்டும் என்று பி‌டி‌ஆர் வலியுறுத்தி இருக்கிறார். இந்த அணி மீது பி‌டி‌ஆர் மிகப்பெரிய நம்பிக்கையும், உறுதியும் வைத்திருக்கிறார். திமுகவின் சொத்தாக இந்த அணி மாற இருக்கிறது. அந்த அளவிற்கான  பல்வேறு செயல்திட்டங்களை வைத்து இருக்கிறார். பாஜக போன்ற கட்சிகளில் பெரிய தகவல் தொழில்நுட்பப் பிரிவு இருக்கிறது. ஆனால், அவர்களின் வேலை மீம்ஸ் போடுவதும், பொய்ப்பிரச்சாரம் செய்வதும்தான். ஆனால், உள்ளதை அப்படியே சொல்வது, வெளிப்படையாக செயல்படுவது போன்ற நோக்கம் உலகத்தில் இருக்கக்கூடிய வேறு எந்த கட்சிக்கும் கிடையாது. திமுக சார்பில் புதிய செயலி உருவாகிக்கொண்டு இருக்கிறது. அந்த செயலி நிர்வாகிகளுளிடமும்,  அதன்பின்னர் பொதுமக்களிடமும் சென்று சேர இருக்கிறது. மக்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அதில் தெரிவிக்கலாம். தற்போது மாவட்ட, தொகுதிவாரியாக நிர்வாகிகளை நியமித்து இருக்கிறார்கள். இதன்பின்னர் பூத் வரை நிர்வாகிகள் நியமிக்க பட இருக்கிறார்கள். அதன்பின்னர் குறிப்பிட்ட காலத்திற்கு ஆய்வு மேற்கொள்ளப்படும். அப்போது இருக்கும் செயல்பாடுகளை ஆராய்ந்து, அணியில் இருக்கும் தவறுகளை சரிசெய்த பின்னர் மீண்டும் செயல்பட வலியுறுத்தப்படும்’‘  என நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.

 

DMK


 
தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் தேர்வின்போது பல விமர்சனங்கள் எழுந்தன. ‘கட்சிக்காக பல ஆண்டுகளாக சமூகவலைதளத்தில் உழைத்துவருகிறேன். எங்களை தேர்வு செய்யவில்லை’ எனவும், பலரும் பல நிர்வாகிகளிடம் பரிந்துரை செய்யச்சொல்லி கேட்டும் இருக்கிறார்கள்.

 

இதற்காக விளக்கம் தரும் அவர், ‘சமூக வலைத்தளங்களில் பல ஆயிரக்கணக்கான ஃபாலோவர்களை வைத்து இருப்பவர்களே பிரபலமானவர்கள். அவர்கள் இந்த அணிக்குள் வந்துதான் அங்கீகாரம் பெறவேண்டும் என்பது இல்லை. தொடர்ந்து கட்சி வேலையை செய்யுங்கள். அத்தனை பேரையும் வைத்து இருக்கும் நீங்களே தனியாக இயங்கலாமே. அதன் பிறகு எதற்கு அணியில் வரவேண்டும் என நினைக்கிறீர்கள். இது சமூக வலைதளங்களுக்கான பிரிவு கிடையாது. அதற்கான வேலை என்பது சிறிய அளவுதான். இங்கு பிரதானமே களப்பணிதான்.  இங்கு யாரும் யாருக்கும் கடமைப்பட்டவர்கள் கிடையாது. இத்தனை காலமாக மாணவர் மற்றும் இளைஞர் அணி பிரபலமாக இருந்திருக்கும். இனி தகவல் தொழில்நுட்பப் பிரிவும் பிரபலமாக பேசப்படும்”  என்றார் உறுதியாக.


 

DMK

 


தகவல் தொழில்நுட்பப்பிரிவு மாவட்ட, தொகுதிவாரியான தேர்வின்போது நிர்வாகிகளின் பேஸ்புக் பக்கங்களின்  முந்தைய பதிவுகளை ஆராய்ந்து இருக்கிறார்கள். சமூகவலைத்தளங்களில் போடப்பட்ட பதிவு எப்படி இருந்தது. அந்த கருத்துகள் கட்சிக்கு எந்தளவில் பயனாக இருக்கிறது என்பதையும் பார்க்கிறார்கள். அதன் பின்னரே நேர்காணல் நடத்தபட்டு இருக்கிறது. நேர்காணல் முடிந்த பின்னர் மாவட்ட செயலாளர்களிடம்  கட்சியின் செயல்பாடுகளில் நிர்வாகிகளின் நிலைப்பாடு என்ன? என்பதை விசாரித்த பின்னரே நியமித்து இருக்கிறார்கள்.

 


இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பேராசிரியர் அன்பழகனும் கலந்துகொண்டது, நிர்வாகிகள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதே உற்சாகத்தையும், உத்வேகத்தையும் உடன்பிறப்புகள் களத்திலும் காட்டுவார்களா என்பதை காலம்தான் உணர்த்தும்.

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.