Skip to main content

’’கொள்ளையடித்த ஜெயலலிதா!’’ - மீண்டும் புயலை கிளப்பிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

Published on 19/06/2018 | Edited on 19/06/2018

 

sr


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு அண்ணாதிடலில் காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விளக்கப் பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. இதில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதுதான் தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

அவர் பேசியது: ‘’ஜெயலலிதா வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி, பணத்தைப் போட்டு எங்களை அனைத்து இடங்களிலும் வெற்றி பெறச் செய்ததைப் போலத்தான், 18 பேரையும் எம்எல்ஏவாக்கினார். ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட கேடி, ரவுடிதான் தினகரன். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கேப்பையில் நெய் வடிகிறது என்று கேட்பவனுக்கு எங்கே போச்சு அறிவு என்று கிராமத்தில் சொல்வார்கள். இந்த 18 பேரும் போய் விட்டால் ஆட்சி நாசமாகப் போய்விடுமா?

 

ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை, தினகரன் மூலம் பெற்றுக் கொண்டு, வெற்றி பெற்ற 18 எம்எல்ஏக்களும் இப்போது அதிமுகவிற்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள், மைசூர், அமெரிக்கா என ஜாலியாக சுற்றுப்பயணம் செய்தார்கள். இதைப் பார்த்துக் கொண்டு சும்மாவா இருக்க முடியும். எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எடப்பாடி பழனிச்சாமி. அவர் மீது நம்பிக்கை இல்லை என்று கவர்னரிடம் மனு கொடுத்தார்கள். சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி ஒரு மாதம் வரை அவகாசம் கொடுத்தும், பதில் வராததால்தான், அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்’’

 

ஜெயலலிதா கொள்ளையடித்தார் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக அமைச்சர் ஒருவர் இதுவரை ஜெயலலிதா கொள்ளையடித்ததைப் பற்றி பேசியது இல்லை. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றதைப் பற்றி பேசும்போது கூட, அவர் கொள்ளையடிக்கவில்லை என்றுதான் பேசி வந்தனர். தற்போது அமைச்சர் ஒருவரே ஜெயலலிதா கொள்ளையடித்தார் என்று பேசியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க.வின் ஊழல் அம்பலமாகிவிட்டது” - திண்டுக்கல் சீனிவாசன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
"BJP's corruption exposed through election papers" - Dindigul Srinivasan

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. கூட்டனியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் நெல்லை முகமது முபாரக் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக அ.தி.மு.க. பொருளாளரும் முன்னாள் வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் - முன்னாள் அமைச்சரும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விசுவநாதன் ஆகியோர் தலைமையில் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது திண்டுக்கல் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன். திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் ராஜசேகர்.ஜெ பேரவை செயலாளர் பாரதி முருகன் மற்றும் பகுதி செயலாளர் முன்னிலையில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பல வார்டுகளில் தீவிரமாக பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர். அப்போது பொதுமக்கள் வேட்பாளருக்கு கும்ப மரியாதை எடுத்தும், ஆராத்தி எடுத்தும் வரவேற்றனர்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேசும் போது, “வரலாறு காணாத ஊழலை மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு செய்துள்ளது. தேர்தல் பத்திரம் மூலம் பா.ஜ.க.வின் ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இனியும் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சை தமிழக மக்கள் நம்ப தயாராக இல்லை. திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் முகமது முபாரக்கை அமோக வெற்றிப்பெற செய்வதன் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு நமது நன்றிக் கடனை செலுத்துவோம் என்று கூறினார்.

அதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பேசும் போது, “மகளிர் உரிமைத்தொகையை முறையாக கொடுக்காததால் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டது” என்றார். அவரை அடுத்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் முகமது முபாரக் பேசும் போது, “திண்டுக்கல் தொகுதியில் என்ன வளம் இல்லை. பூட்டுத் தொழில் உள்ளது சுற்றுலாத்தலமான கொடைக்கானல் உள்ளது. வழிபாட்டுத்தலமான பழனி உள்ளது. கைத்தொழிலுக்கு நெசவும், சுங்குடி தொழிலும் உள்ளது. புகழ் பெற்ற சிறுமலை வாழை, பலா உட்பட பல்வேறு தொழில்கள் உள்ளது என்னை வெற்றிபெற வைத்தால் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை தொழில் மிகுந்த நகரமாக மாற்றுவேன்” என்று கூறினார்

Next Story

முத்துராமலிங்க தேவர் தங்கக் கவசம் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைப்பு

Published on 25/10/2023 | Edited on 25/10/2023

 

Dindigul Srinivasan who received the Muthuramalinga Devar Gold Shield

 

கடந்த 2014 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முத்துராமலிங்க தேவர் கோவிலில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்க 3.4 கோடி மதிப்பில் 13 கிலோ எடையில் தங்கக் கவசம் ஒன்றை வழங்கியிருந்தார். அதிமுக மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் சார்பில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, அதிமுக பொருளாளர் பொறுப்பில் தங்க கவசம் வைக்கப்பட்டு வருவது வழக்கம். தேவர் ஜெயந்தி தினங்களில் மட்டும் அந்த தங்கக் கவசம் முத்துராமலிங்க தேவர் சிலை மீது சாற்றப்படும். மற்ற நேரம் அவை மதுரையில் உள்ள வங்கி லாக்கரில் வைக்கப்படும். முன்னர் அதிமுக ஒற்றுமையாக இருந்த காலத்தில் பொருளாளராக இருந்த ஓபிஎஸ் வசம் தங்கக்கவசம் இருந்தது.

 

அண்மையில் அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை தொடர்பாக சிக்கல்கள் ஏற்பட்டு இரு அணிகளாக செயல்பட்டு வரும் நிலையில், அந்த தங்கக் கவசத்தை வங்கி லாக்கரில் இருந்து எடுத்து முத்துராமலிங்க தேவர் சிலைக்கு சாற்ற யார் பொறுப்பேற்பது என்ற சிக்கல் அதிமுகவில் உருவெடுத்தது. தாங்கள்தான் ஒரிஜினல் அதிமுக எனவே தங்க கவசத்தை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தபோது ஓபிஎஸ் தரப்பிலும், எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலும் கடுமையான வாதங்கள் வைக்கப்பட்டது.

 

அதிமுக தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தங்கக் கவசத்தை யாரும் பெறக்கூடாது என உத்தரவிட வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதி, ஏற்கனவே உயர்நீதிமன்றம் அதிமுக குறித்த அனைத்து தெளிவான உத்தரவுகளையும் தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு தற்போது பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே அந்த விதியின் படி திண்டுக்கல் சீனிவாசன் காப்பாளராக செயல்பட்டு தங்கக் கவசத்தை தேவர் சிலைக்கு சாத்திவிட்டு மீண்டும் வங்கியில் ஒப்படைக்கலாம். இதற்கும் உச்சநீதிமன்ற நிலுவைக்கும் சம்பந்தமில்லை என உத்தரவிட்டிருந்தார்.

 

Dindigul Srinivasan who received the Muthuramalinga Devar Gold Shield

 

இந்நிலையில் மதுரை அண்ணாநகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியாவில் இருந்த தங்க கவசத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பெற்றுக் கொண்டார். இதனையடுத்து அவர் இந்த தங்க கவசத்தை நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனா என்பவரிடம் வழங்கினார். அப்போது அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.