Skip to main content

இதைவிட நமக்கு தலைக்குனிவு இருக்கவே முடியாது: ப.சிதம்பரம் 

Published on 23/02/2019 | Edited on 23/02/2019

 

தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருவான்மியூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டார்.

அப்போது அவர், சமுதாயம் எப்படி சீர்குலைக்கப்படுகிறது. இந்தியாவின் பலம் என்ன? இந்தியாவின் பலம் நம்முடைய பன்மை தன்மை. எல்லோரும் இணக்கமாக வாழுகின்ற நாடு இந்திய நாடு. இங்கு ஜாதி இருந்தது, இருக்கிறது. நான் இல்லை என்று சொல்லவில்லை. அது இந்தியாவுக்கென்று உள்ள சாபக்கேடு. ஆனால் இந்த ஜாதி வேறுபாடுகளை கடந்து இந்தியாவில் ஒரு பன்முகத்தன்மை, பன்மை தன்மை இருந்தது. 

 

p.chidambaram speech


கடைசியாக இந்தியாவை பிரித்து ஆண்டது ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளையர்கள். பாஜக அரசு அதைத்தானே செய்கிறது. பிரிதாளுகிறது. இந்து வேறு, இஸ்லாமியர்கள் வேறு, கிருஸ்துவர்கள் வேறு. இந்தியாவில் பிறந்தவர்களெல்லாம் இந்துக்களாக இருக்க வேண்டும். இது பிரித்தாளும் சூழ்ச்சியா இல்லையா? நரேந்திர மோடி ஏறத்தாழ 35 ஆண்டுகள் பிரச்சாரகராக இருந்தார். அவர் பிரதமராக வந்த பிறகு பேசிய பேச்சுக்கள்தான் உங்களுக்கு தெரியும். அவர் பிரச்சாரகாரராக இருந்தபோது எப்படி பேசினார் என்று தெரிய வேண்டும் என்றால், இப்போது உத்திரப்பிரதேச முதல் அமைச்சராக இருக்கிறாரே யோகி ஆதித்யநாத் என்ன பேசினாரோ அதைத்தான் பேசினார்.
 

35 ஆண்டுகள் மோடி பேசிய பேச்சுக்கள், எப்படிப்பட் பேச்சு, என்ன பேச்சு, என்ன கருத்துக்கள் என்று உங்களுக்கு தெரிய வேண்டும் என்றால் இன்று யோகி ஆதித்யநாத் பேசியதை கேளுங்கள். என்ன சொல்கிறார். இந்த நாட்டிலே ஜாதி வேண்டும். ஜாதிதான் இந்த நாட்டை வழிமுறைப்படுத்துகிறது. இதனால்தான் இந்தியா பிழைத்திருக்கிறது என்று ஒரு முதல் அமைச்சர் சொல்கிறார். இந்த பூமி பெரியாரும், காமராஜரும் பிறந்த பூமி என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த சனாதனா தர்மத்தை யார் ஏற்றுக்கொள்கிறார்கள். பாரதீய ஜனதா கட்சி ஏற்றுக்கொள்கிறது என்பது எனக்கு புரிகிறது.
 

பாஜகவுக்கு அப்பால் தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு அரசியல் தலைவர், ஒரு அரசியல் கட்சி மேடையிலே வந்து பகிரங்கமாக சொல்ல வேண்டும், பெரியார் பிறந்த பூமியில், காமராஜர் பிறந்த பூமியில், அண்ணா பிறந்த பூமியில் நாங்களும் சனாதனா தர்மத்தை ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்லட்டுமே?
 

நான் ஜாதியை மறுப்பவன், எதிர்ப்பவன். ஆனால் என்னுடைய எதிர்ப்பால், என்னுடைய மறுப்பால் ஜாதி ஒழிந்துவிடும் என்று நான் நம்பவில்லை. ஒருவேளை ஜாதி ஒழியும் என்ற நம்பிக்கையிலே ஜாதியை எதிர்க்கிறேன். ஜாதியை மறுக்கிறேன். 
 

ஆனால் ஜாதி வேண்டும், ஜாதி வேற்றுமைதான் இந்த நாட்டை வழிமுறைப்படுத்துகிறது, ஜாதி வேறுபாடுதான் இந்த நாட்டை ஒழுங்குமுறைப்படுத்துகிறது என்று சொல்லக்கூடிய ஒரு கட்சி தமிழ்நாட்டில் காலூன்றி விட்டால், அதைவிட நமக்கு தலைக்குனிவு இருக்கவே முடியாது. தமிழகத்திலும் காலூன்ற முயற்சி செய்கிறார்கள். அந்த முயற்சிக்கு துணை போகிறது அதிமுக. அதைவிட கேவலம் அந்த முயற்கிகு துணைபோகிறது பாமக. இவ்வாறு பேசினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கர்நாடக முதல்வர் சித்தராமையா போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Karnataka Chief Minister Siddaramaiah struggle

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று (23.04.2024) போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகிறது என கார்நாடக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து கர்நாடக மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா கூறுகையில், “காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் கர்நாடக விவசாயிகளை வெறுக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மத்திய அரசுக்கு வறட்சி குறித்து குறிப்பாணை (memorandum) கொடுத்தோம். பிறகு மத்திய குழு வந்தது.  அதன் பின்னர் மாநிலத்தின் 223 தாலுகாக்களில் வறட்சி நிலவி வருவதை அமித் ஷா ஆய்வு செய்தார். இதுவரை காலதாமதமாக விவசாயிகளுக்கு 650 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவுக்கு உரிய நிவாரணம் வழங்காததற்கு நிர்மலா சீதாராமனும், நரேந்திர மோடியும் தான் காரணம்” எனத் தெரிவித்தார். 

Next Story

தமிழக அரசு சார்பில் தொல்காப்பியர் உருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Flower salutation program for Tolkappiyar statue

தொல்காப்பியம் காலப்பழைமையும் கருத்துச் செழுமையும் கொண்ட ஒரு கருவூலமாகும். பழைமையான நூல் இலக்கணப் பனுவலாக தமிழ்மொழிக்கு வாய்த்திருப்பது பெரும் பேறாகும். தொல்காப்பியத்துக்கு முன்னரே இலக்கிய இலக்கண நூல்கள் பலவாக இருந்தன. முன்பு நூல் கண்டு உரைப்பட எண்ணி புலன் தொகுத்தார் என்றே பாயிரம் சொல்கிறது. எழுத்து, சொல், பொருள் என அமைத்துக்கொண்டு ஒன்பது இயல்கள் என்ற ஒழுங்கினதாய் இருபத்தேழு இயல்களாக, 1610 நூற்பாக்கள் கொண்டு தொல்காப்பியத்தைத் தொல்காப்பியர் படைத்தார். தொல்காப்பியம் முழுமையும் முதற்கண் 1891- இல் பதிப்பித்த பெருமை யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையைச் சாரும்.

தொல்காப்பியத்துக்குப் பின்னர் இருபதுக்கு மேற்பட்ட இலக்கண நூல்கள் பிறந்தன. தொல்காப்பியம் வழங்கிய தொல்காப்பியரே தமிழுக்கு ஆதி பகவன் என்று சொல்வது மிகையாகாது. ஒப்பில்லாத முயற்சியாலும், தமிழ் வளர்ச்சித் துறையின் பெருந்துணையாலும் 7 அடி உயர பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள வெண்கலச்சிலையால் தொல்காப்பியரின் பெருமை ஒல்காப் புகழ் பெறுகிறது.

இந்நிகழ்ச்சி சித்திரை முழுமதி நாளான இன்று (23.04.2024) காலை 10.00 மணிக்கு சென்னை மெரினா எதிர்புறம் சென்னைப் பல்கலைக்கழக இணைப்பு கட்டட வளாகத்தில் (திருவள்ளுவர் சிலை எதிர்புறம்) அமைந்துள்ள தொல்காப்பியரின் திருவுருவச் சிலைக்கு அரசு செயலாளர், தமிழறிஞர்கள். பொதுமக்கள், எழுத்தாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுச் சிறப்பிக்க உள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.