Skip to main content

ஓபிஎஸ் சொந்த ஊர் தொகுதியில்... யாருக்கு சீட்! இடைத்தேர்தல் ஃபைட்!!

Published on 05/01/2019 | Edited on 05/01/2019
o

 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18பேரை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்தது சரிதான் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியதை தொடர்ந்து  காலியாக உள்ள 18 தொகுதிகளோடு சேர்ந்து 20 தொகுதிகளுக்கு கூடிய விரைவில் தேர்தல் கமிஷன்  இடைத்தேர்தலையும்  அறிவிக்க  இருந்தது. இந்த நிலையில் திடீரென திருவாரூர் இடைத்தேர்தலுக்கு மட்டும் ஜனவரி தேர்தல் நடத்த தேர்தல் கமிசன் உத்தரவிட்டுள்ளதைத்தொடர்ந்து திருவாரூரில் தேர்தல் பணி களைகட்ட தொடங்கி இருக்கிறது. ஆனால் 18 தொகுதிகளுக்கு கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய இம்மாதம் கடைசி வரை காலஅவகாசம் இருப்பதால் அதற்கான தேர்தலை தேர்தல் கமிசன் அறிவிக்க காலதாமதம் ஏற்படுத்தி வருகிறது. அதோடு திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. 

கதிர்காமு

k

 

இந்த நிலையில் தான் அரசியல் கட்சிகுள்ளேயே சீட்டுக்கான போட்டிகளும் தொடங்கி விட்டன. துணை முதல்வர் ஓபிஎஸ்-சின் சொந்த  ஊரான  பெரியகுளம் தனி தொகுதியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட  டிடிவி ஆதரவாளரான டாக்டர் கதிர்காமு மீண்டும் அதிமுகவில் அல்லது அம்மா மக்கள் முன்னேற்ற கழகமான டிடிவி கட்சி சார்பில் களம் இறங்க இருக்கிறார். அந்த கதிர்காமுக்கு சீட் வாங்கி கொடுத்து வெற்றிபெற வைத்ததே ஓபிஎஸ் தான்.  அப்படி இருந்தும் கூட டிடிவி அணியில் இருந்துகொண்டு தங்கதமிழ்செல்வனுடன் சேர்ந்து மாவட்டத்தில் ஓபிஎஸ்க்கு எதிராக அரசியல் பண்ணிவருகிறார்.  

தவமணி

ட்

 

அப்படிப் பட்ட கதிர்காமை இந்த தேர்தலில் ஓரம் கட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் தான் ஒபிஎஸ் இருந்து வருகிறார். அதனால்  ஓபிஎஸ்சின் மகன் ரவீந்திரநாத்தின் தீவிர ஆதவாளரான எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணை செயலாளரான வக்கீல் தவமணியை களத்தில் இறக்க ஓபிஎஸ்சும், ரவீந்திரநாத்தும் தயாராகி வருகிறார்கள் இந்த வக்கீல் தவமணி கடந்த இரண்டு முறை தேர்தலின் போது சீட் கேட்டு நேர்காணலில் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு ஓபிஎஸ்-சின் தீவிர ஆதரவாளரான தென்கரை முன்னாள் சேர்மன் பாப்பா இல.முருகன், கள்ளுப்பட்டி சிவக்குமார், வீரபாண்டி பேரூராட்சியின் முன்னாள் சேர்மன் வீரமணி, பாண்டியராஜன், அருள்குமார், முருகன் உள்பட மாவட்ட  பொறுப்பில் உள்ள 19 ர.ர.க்கள்  சீட்டுக்காக ஓபிஎஸ் சிடம் மோதி வருகிறார்கள்.

 

பாப்பா இலமுருகன்

ப்

 இருந்தாலும் வக்கீல் தவமணி அல்லது பாப்பா இலமுருகன் இருவரில் ஒருவருக்கு தான் ஓபிஎஸ் சீட் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என்ற பேச்சு  கட்சிக்காரர்கள் மத்தியிலேயே வெளிப்படையாக  பேசப்பட்டும் வருகிறது.

 

தேனி ஜீவா

ட்


        அதுபோல் திமுக சார்பில் கடந்த முறை தோல்வியை தழுவிய முன்னாள் பேரூராட்சி தலைவர் அன்பழகன் மீண்டும் சீட் கேட்டு வருகிறார்.   இந்த அன்பழகன் முன்னாள் மாவட்ட செயலாளர் மூக்கையாவின் ஆதரவாளர் என்பதால் கடந்த முறை மூக்கையா ஆசியோடு சீட் கிடைத்தது.  ஆனால் தற்பொழுது மூக்கையா ஓரம் கட்டப்பட்டு மாவட்ட செயலாளராக கம்பம் ராமகிருஷ்ணன் இருக்கிறார்.  இருந்தாலும் அன்பழகன் சீட்  கேட்டு வருகிறார்.  அதோடு சிபிஐ யில் பத்து வருடங்களாக மாவட்ட செயலாளராக இருந்த தேனி ஜீவா கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது தேனி வந்த  தலைவர் ஸ்டாலின் முன்னிலையில்  ஆயிரம் பேருடன் திமுகவில் ஐக்கியமாகி கட்சி பணி ஆற்றிவந்ததின் மூலம் கழக துணைபொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி பரிந்துரையின் பேரில்  விவசாய தொழிலாளர் அணியின் மாவட்ட அமைப்பாளராக  பொறுப்புக்கு வந்த தேனி ஜீவா கடந்த நான்கு வருடங்களாக கட்சி பணியாற்றி கொண்டு தொண்டர்களையும் அரவணைத்து வருகிறார். அதோடு ஐ.பி. மற்றும் மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணனின் ஆசியும் இருந்து வருகிறது அதோடு  கடந்த தேர்தலின் போதே சீட் கேட்டு இருந்தவர் இந்த முறையாவது  சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறார் அதோடு பெரியகுளம் ஒன்றிய குழு உறுப்பினர் காமராசர், நகர உயர் மட்ட குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் உள்பட பத்துக்கு மேற்பட்ட பொருப்பில் உள்ள உ.பிகளும் சீட்டுக்காக மோதி வருகிறார்கள்  இருந்தாலும் தேனி ஜீவா அல்லது அன்பழகன் இருவரில் ஒருவருக்கு தான் சீட் கிடைக்கும் என்ற பேச்சு உ.பி.கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டும் வருகிறது.

 

அன்பழகன்

அன்

     

 ஆனால் இந்த பெரியகுளம் தொகுதி பொது தொகுதியாக இருந்த போது  ஓபிஎஸ் வெற்றி பெற்று முதல்வராகவும் இருந்து இருக்கிறார். அதனால் ஓபிஎஸ்சின்  சொந்த ஊர் தொகுதி என்பதால் எப்படியும் இந்த இடைத்தேர்தலில் தனது ஆதரவாளரை களத்தில் இறக்கி வெற்றி பெற வைத்து கதிர்காமை அரசியலில் இருந்து ஓரம் கட்ட முடிவு செய்து வருகிறார்.   அதன் எதிரொலியாகத் தான் இப்பவே ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தும் தொகுதியில் களம் இறங்கி டிடிவி  ஆதரவாளர்களை பணத்தாலும். செயின், மோதிரத்தாலும் தங்கள் பக்கம் இழுத்து வருகிறார் என்ற பேச்சு ர.ர.க்கள் மத்தியிலேயே  பேசப்பட்டு வருகிறது.

 

ரவீந்திரநாத்

ர்

 

ஆனால் டிடிவி ஆதரவாளர்கள் சிலரிடம் கேட்டபோது... எங்களை ஓபிஎஸ்சும், அவருடைய மகன் ரவீந்திரநாத்தும் விலை கொடுத்து எல்லாம் வாங்க முடியாது.  இந்த தொகுதியில் மீண்டும் கதிர்காமு தான் வெற்றி பெறுவார். அந்த அளவுக்கு டிடிவி ஆதரவாளர்கள் இத்தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.  அதோடு தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மத்தியில் ஓபிஎஸ் மேல் ஒரு அதிருப்தியும் இருந்து வருவதால் இந்த  இடைத்தேர்தல் மூலம் ஓபிஎஸ்க்கு சரியான பாடம் புகட்டுவோம் என தெம்பாகவே பேசி வருகிறார்கள்.  ஆக இப்பவே ஓபிஎஸ்சின் சொந்த ஊரான பெரியகுளம் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான சீட்டுக்கு கரைவேஷ்டிகளும் மோதி வருகிறார்கள்!

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் பா.ஜ.க., அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Announcement of constituencies contested by BJP and its allies in TN

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்தவகையில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளருமான அருண் சிங் 3 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (21.03.2024) வெளியிட்டிருந்தார். அதன்படி சென்னை தெற்கு - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகி யுள்ளது. அதன்படி திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. அதே சமயம் தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி தொகுதியிலும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளன.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பட்டாளி மக்கள் கட்சி காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

Next Story

இரட்டை இலை சின்னம் வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Madras High Court action decision on double leaf symbol case

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. 

அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. 

அப்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், “பொதுக்குழு தொடர்பான பிரதான சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே எந்த தடையும் விதிக்கக் கூடாது” என வாதிடப்பட்டது. இதனையடுத்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில், அ.தி.மு.க. கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் எனவும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகி நிவாரணம் பெற ஓ. பன்னீர்செல்வத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த 4 ஆம் தேதி (04.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்னமும் தன்னை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது. அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஒருவர் இன்னமும் தன்னை ஒருங்கிணைப்பாளராக கூறி வருகிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமியின் தரப்பு வாதம் நிறைவடைந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (18-03-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், ‘அதிமுக இரட்டை இலை சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், தற்போது நிரந்தர தடை விதித்திருப்பது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.