Skip to main content

கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து நல்லகண்ணு பிரச்சாரம் (படங்கள்) 

Published on 17/02/2022 | Edited on 17/02/2022

 

தமிழ்நாடு முழுக்க வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. அதன் காரணமாக கட்சி சார்ந்த வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று சென்னை பெருநகர மாநகராட்சி 84வது வட்ட மாமன்ற தேர்தலில் போட்டியிடும் விஜயக்குமாரை ஆதரித்து கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணு  கொரட்டூர் பஸ் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வாக்காளர்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

 

திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சுமார் 30க்கும்  மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தனர். இந்த பிரச்சாரத்தில் சி.பி.ஐ. மத்திய சென்னை மாவட்ட செயலாளர் கருணாநிதி, சி.பி.ஐ. கட்சி மாநில துணை செயலாளர் மு. வீரபாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.பி.ஐ. கண்ணன், பாதுகாப்பு துறை ஏ.ஐ.டி.யு.சி. விஜயசீலன், திமுக வட்டசெயலாளர் லால், மற்றும் விசிக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

 

சார்ந்த செய்திகள்