கமலும் இந்து தீவிரவாதிதான் என்பதற்கு காலம் பதில் சொல்லும் என்று இயக்குநர் கவுதமன் கூறியுள்ளார்.

அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரத்தின்போது மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ‘‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’’ என்று பேசினார். கமலின் இந்த பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது. இதுகுறித்து பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியபோது, ‘‘ஒரு இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது’’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் கவுதமன், கமலை தலைவராக வளர்க்க வேண்டும் என்பதற்காகவே கமல் கருத்துக்கு நரேந்திர மோடி பதில் கூறியிருக்கிறார். விவசாயிகள் போராட்டத்தை மறைக்கவே கோட்சேவை இந்து தீவிரவாதி என கமல் கூறினார். கோட்சேவை இந்து தீவிரவாதி என கமல் கூறியது பிக்பாஸை போலவே அதுவும் ஒரு நாடகம்தான். இவ்வாறு கூறினார்.