Skip to main content

சட்டமன்றத்தில் புளூ பிலிம் பார்த்தவர்களுக்கெல்லாம் பாஜகவில் சீட் கொடுத்துள்ளனர் : அமமுக புகழேந்தி பேட்டி

Published on 28/04/2018 | Edited on 28/04/2018

 

pugal

 

குட்கா ஊழலுக்கு பொறுப்பேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அமமுக மாநில செயலாளர் புகழேந்தி கூறினார்.

 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாநில செயலாளர் புகழேந்தி இன்று (28/4/2018) சேலம் வந்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

 ‘’பதினெட்டு எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வரும் என்று நாடு முழுவதும் எதிர்பார்ப்பு நிலவியது. 18 எம்எல்ஏ க்களின் தொகுதிகள் காலியாக உள்ளன. அதனால் அதற்கு முன்னுரிமை கொடுத்து தீர்ப்பு அளித்து இருந்தால் எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வந்திருக்கும். 

ஆனால், 11 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தீர்ப்பு கிடைத்திருக்கிறது. சபாநாயகருக்கு மட்டும்தான் கட்டுப்பட வேண்டும். மூன்றில் ஒரு பங்கு என்ற விதியெல்லாம் தேவையில்லை என்ற நிலையை இந்த தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது. சபாநாயகரின் தீர்ப்பில் தலையிட முடியாது என்று தீர்ப்பு சொல்வதற்கு, இவ்வளவு மாதங்கள் காத்திருக்கத் தேவையில்லை. இந்தத் தீர்ப்பு அவர்களை மீண்டும் குளிர்காய வைத்துவிட்டது.

 

எந்த எம்எல்ஏவும் எதை வேண்டுமானாலும் செய்யலாம். சபாநாயகரை அட்ஜஸ்ட் செய்து கொண்டால் போதும் என்கிற ரீதியில் உயர்நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது. இந்தத் தீர்ப்பே விசித்திரமாக இருக்கிறது. இதே பன்னீர்செல்வம் மனது வைத்து, எடப்பாடிக்கு எதிர்ப்பாக இந்த 11 பேரும் திருப்பியும் வாக்களிக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?.

 

குட்கா ஊழலில் டிஜிபி ராஜேந்திரன் ஈடுபட்டிருக்கிறார். இந்த வழக்கை, சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் எப்போது தீர்ப்பு அளித்ததோ, அப்போதே அதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராஜிநாமா செய்திருக்க வேண்டும். 

 

தார்மீக அடிப்படையில் அவர் முதல்வராக தொடர்வதற்கு எந்த நியாயமும் இல்லை. முதல்வரும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் ராஜிநாமா செய்ய வேண்டும். இந்தியாவில் வெட்கங்கெட்ட அரசு என்றால் அது எடப்பாடி பழனிசாமி அரசுதான்.

 

திவாகரன்&டிடிவி தினகரன் மோதல் என்பது தேவையற்ற சர்ச்சை. இப்பிரச்னையில் திவாகரன் பொறுமை காத்து அவர் வழியில் செல்ல வேண்டும். சிறிய சர்ச்சைகள் என்பது சரியாகி விடும். அதை பெரிதுபடுத்தத் தேவையில்லை.

 

எங்கள் அணியில் உள்ள 18 எம்எல்ஏக்களில் ஒருவர்கூட எங்கேயும் செல்ல மாட்டார்கள். ஆளும் தரப்பில் 40 எம்எல்ஏக்கள் எங்களுடன் இப்போதும் தொடர்பில் இருக்கின்றனர். சில அமைச்சர்கள்கூட எங்களுடன் இணைய தயாராக இருக்கிறார்கள். 

 

சபாநாயகர் தவறு செய்யும்போது நீதிமன்றம் தலையிடலாம் என்று இருக்கிறது. இன்னும் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை  வைத்திருக்கிறோம். 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் குறித்த வழக்கில் எங்களுக்கு நிச்சயமாக சாதகமான தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். 

 

எடப்பாடி பழனிசாமி அரசை இனிமேலும் யாரும் மிரட்ட முடியாது. இந்த அரசு எல்லாவற்றுக்கும் துணிந்துவிட்டது. கொள்ளை அடிப்பதில் வல்லமை படைத்தவர்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது. ஊடகங்களையும் மிரட்டுகின்றனர். 

 

ஜெயலலிதாவும், சசிகலாவும் சிறை செல்வதற்கு எங்களது தலைசிறந்த வக்கீல்கள்தான் காரணம். நவநீதகிருஷ்ணன் போன்ற 'வண்டுமுருகன்' மாதிரியான வக்கீல்களை வைத்திருந்தோம். அதுதான் அவர்கள் சிறைக்குச் செல்ல காரணம்.

 

கர்நாடகா தேர்தலில் பாஜக வெற்றி பெறாது. அங்கு மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. சட்டமன்றத்தில் புளூ பிலிம் பார்த்தவர்களுக்கெல்லாம் பாஜகவில் சீட் கொடுத்துள்ளனர். பாஜகவுக்கு எதிராக வாக்களியுங்கள் என்று நாங்களும் பிரச்சாரம் செய்வோம். இவ்வாறு புகழேந்தி கூறினார்.

பேட்டியின்போது முன்னாள் எம்எல்ஏக்கள் எஸ்.கே.செல்வம், வெங்கடாசலம் உடனிருந்தனர்.

 

- சேலம் இளையராஜா

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்