Skip to main content

காவிரி பிரச்சன்னைக்கு நாளை இறுதி தீர்ப்பு

Published on 15/02/2018 | Edited on 15/02/2018

 

kaveri


காவிரி சம்பந்தமான அனைத்து வழக்குகளுக்கும்  நாளை தீர்ப்பு என தகவல். நாளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.காவிரி வழக்கில் இறுதி தீர்ப்பு 2007 ஆம் ஆண்டு நடுவர் நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் காவிரி நீர் ஆண்டுதோறும் தமிழகத்திற்கு192 டி.எம்.சி ,கர்நாடகாவிற்கு 270 டி.எம்.சி, கேரளாவிற்கு 30 டி.எம்.சி ,பாண்டிச்சேரிக்கு 7 டி.எம்.சி என பிரித்து வழங்கப்பட்டது. ஆனால் நடுவர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழகம் உட்பட 4 மாநிலங்கள் மேல் முறையீடு செய்தன . நாளை தீர்ப்பு என்ற அறிவிப்பு கர்நாடக,தமிழக எல்லைகளில் பரபரப்பான சூழ்நிலை  நிலவ  வாய்ப்புள்ளது.  தமிழகம் மற்றும் கர்நாடகத்திற்கு இடையேயான காவிரி பிரச்சன்னைக்கான தீர்வு நாளை கிட்டிவிடும்.

சார்ந்த செய்திகள்

Next Story

காவிரி நதி நீர் விவகாரம்; மறு ஆய்வு செய்ய கர்நாடக அரசு கோரிக்கை

Published on 04/09/2023 | Edited on 04/09/2023


 

Karnataka government request for re-examination about Cauvery water issue

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22 ஆவது ஆலோசனைக் கூட்டம் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் எனத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கோரிக்கைகளை எடுத்து வைத்தனர். இதையடுத்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

 

அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு காவிரியில் நீர் திறந்து விடக்கோரி தமிழக அரசு சார்பில் கடந்த 14 ஆம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த 25 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை நடத்தி ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், இந்த வழக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

 

அதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது. அப்போது காவிரியில் இருந்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கூட்டத்தில் கர்நாடக அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் காவிரி நீர் திறப்பது குறித்து காவிரி ஒழுங்காற்று குழு பிறப்பித்திருந்த பரிந்துரையைக் காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்றுக்கொண்டது. அதன்படி தமிழகத்திற்கு காவிரியில் இருந்து ஆகஸ்ட் 29 ஆம் தேதி காலை முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரையிலான 15 நாட்களுக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடகா அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.

 

இதனையடுத்து காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகாவுக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் எதிராக தமிழக அரசு சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது அந்த மனுவில், ’மழைப்பொழிவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்திற்கு தேவையான நீரை திறந்து விட கோரி’ மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.  இது தொடர்பான மனு நாளை மறுநாள் (06-09-23) உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. 

 

இந்த நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா அரசு தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், “கர்நாடகா மாநிலத்தில் போதிய மழை இல்லாததால் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதனால், தமிழ்நாட்டுக்கு வரும் 12 ஆம் தேதி வரையில் வினாடிக்கு 5000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவை ஆணையம் மறு ஆய்வு செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

Next Story

காவிரி வழக்கு; அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை!

Published on 18/08/2023 | Edited on 18/08/2023

 

TN govt has requested to hear the Cauvery case as an urgent case Supreme Court

 

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22வது ஆலோசனைக் கூட்டம் ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில்  கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. அதில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் எனத் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் கர்நாடக அரசு தரப்பிலான அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.

 

இதையடுத்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதன்படி காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்திருந்த உத்தரவில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி என 38 டி.எம்.சி தண்ணீரைத் திறக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தற்போது, 10 ஆயிரம் கன அடி நீரை கர்நாடக அரசு தமிழகத்திற்குத் திறந்துவிட்டு வருகிறது. 

 

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், தமிழகத்திற்குக் காவிரியிலிருந்து 15 நாட்களுக்கு 10 ஆயிரம் கன அடி திறந்துவிடும் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு காவிரி மேலாண்மை ஆணையத்திற்குக் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் கர்நாடகத்தில் கடும் வறட்சி பஞ்சம் நிலவுவதால், தமிழகத்திற்கு நீர் திறக்க இயலாது எனவும் தெரிவித்திருந்தார்.

 

இதனிடையே காவிரியில் வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீரைக் கர்நாடகா மாநிலம் திறந்து விட உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.