Skip to main content

ஆண்டிபட்டியில்.... தங்க தமிழ்செல்வனை  எதிர்த்து களம்  இறங்கப்போகும் ஓபிஎஸ் ஆதரவாளர்

Published on 04/11/2018 | Edited on 04/11/2018
r

 

முதல்வர் எடப்பாடியை  எதிர்த்து டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18பேர் கவர்னரிடம் புகார் மனு கொடுத்ததின் பேரில் சபாநாயகர் தனபால் அந்த 18 எம்.எல்.ஏ.களையும் 
பதவி நீக்கம் செய்தார்.  அதை எதிர்த்து டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் கோர்ட்டுக்கு சென்றும் கூட சபாநாகர் பதவி நீக்கம் செய்தது சரி தான் என டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களுக்கு எதிராக தீர்ப்பு  வந்ததை கண்டு டிடிவி  அதிர்ச்சி அடைந்து விட்டார். அதை தொடர்ந்து மேல்  முறையீடு செய்ய இருந்த டிடிவி திடீரென  தேர்தலை சந்திக்க தயார்  என பின்தங்கி விட்டார்.
  

     இந்த நிலையில் ஆளும் இபிஎஸ் ஓபிஎஸ்  ஆட்சியும் இடைத்தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.  அதுபோல் திமுக உள்பட அனைத்து எதிர்கட்சிகளும் இடைத்தேர்தலில்  குதிக்க தயாராகி வருகிறது.  

 

an


    இந்த நிலையில் தான் பதவி நீக்கம் செய்ய பட்ட டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.கள் 18 பேரும் அந்தந்த தொகுதியில் களம் இறங்க  தயாராகி வருகிறார்கள்.


        இதுபோல் தான் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி தொகுதியில் மீண்டும் டிடிவியின் தீவிர ஆதரவாளரரும், மக்கள்  முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளருமான தங்கதமிழ்செல்வன் களம் இறங்க இருக்கிறார்.
      ஏற்கனவே தங்கதமிழ்செல்வன் அதிமுகவில் இருந்த போது ஓபிஎஸ்சை எதிர்த்து மாவட்டத்தில் அரசியல் பண்ணிக் கொண்டு தனி கோஷ்டியாக செயல்பட்டு வந்தார். அதன் மூலம் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் மாவட்டத்தில் ஆதரவாளர்கள்  இருந்து வந்தனர்.  தற்பொழுது அவர்களில் பெரும்பாலானவர்கள்  தங்கதமிழ்செல்வன் பக்கமே போய்விட்டனர்.  அந்த அளவுக்கு கட்சியையும் உடைத்து இருக்கிறார்.  அதோடு சாதி ரீதியாக உள்ள  கட்சிகாரர்களையும் தன் பக்கம் இழுத்து கொண்டு மாவட்டத்தில் டிடிவி அணிக்கு வலுசேர்த்து வருகிறார். 

 

 இதற்கு எல்லாம் இந்த  இடைத்தேர்தல் மூலம்  ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்  என்ற நோக்கத்தில் தான் துணை முதல்வர் ஓபிஎஸ் தனது தீவிர ஆதரவாளரான மாவட்ட துணை செயலாளர்  முறுக்கோடை ராமரை அதிமுக சார்பில்  களம் இறக்க தயாராகி வருகிறார்.  இந்த முறுக்கோடை ராமர்  ஆரம்பகாலத்திலிருந்து  கட்சியில் இருந்து வருகிறார்.    கடந்த உள்ளாட்சி தேர்தலில் கடமலை மயிலை ஊராட்சி ஒன்றிய தலைவராகவும் இருந்து  இருக்கிறார்.   இந்த ராமர் ஓபிஎஸ் சின் சமூகத்தை சேர்ந்தவராக 
இருந்தாலும் கூட அனைத்து சமூகத்தினருடனும் நெருக்கமாக பழக கூடியவர்.  அதோடு கட்சி பொறுப்பாளர்களையும்  தொண்டர்களையும்  அரவணைத்து போக கூடியவர்.   தொடர்ந்து  ஒவ்வொரு முறையும்  சீட்டு கேட்டு வருகிறார்.  
அதுபோல் இந்த முறையும் சீட்டு கேட்டு வருகிறார்.  

 

t

 

 தற்பொழுது ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பதால் ராமருக்கு தான்  ஓபிஎஸ் சீட்டு கொடுத்து அதன் மூலம் தங்க. தமிழ்ச்செல்வனை ஓரம் கட்ட ஓபிஎஸ்  இப்பவே தயாராகி வருகிறார் என்ற பேச்சு கட்சி பொறுப்பாளர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.   இருந்தாலும்  தங்கதமிழ்செல்வன் முக்குலத்தோரில் உள்ள  பிரமலைக்கள்ளர்  சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அதே சமூகத்தை சேர்ந்த ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளரும்  ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான லோகிராஜனையும் தங்க தமிழ் செல்வனுக்கு எதிராக களம் இறக்கவும் ஓபிஎஸ்  தயாராகி வருகிறார்.

 

  இப்படி  இரண்டு  ஆதரவாளர்களான முறுக்கோடை ராமர்  அல்லது லோகிராஜன் இருவரில் ஒருவரை ஓபிஎஸ்  களத்தில்  இறக்கி  இந்த  இடைத்தேர்தல் மூலம் தங்கதமிழ்செல்வனை படு தோல்வி அடைய வைத்து  அரசியலை விட்டே  விரட்ட ஓபிஎஸ்  தயாராகி வருகிறார்  என்ற பேச்சு கட்சி பொறுப்பாளர்கள் மத்தியில் பேசப்பட்டும் வருகிறது.   


இந்த நிலையில் தான்  தங்கதமிழ்செல்வனும் தேர்தலுக்கான பணிகளை உசிப்பி விட்டு கட்சிகாரர்களை  ஒருங்கிணைத்து வருகிறார்.    இருந்தாலும்  கடந்த  இரண்டு வருடங்களாக  மேல்மட்டட அரசியலில்  தங்கதமிழ்செல்வன்  குதித்தால் தொகுதிக்கும் சரிவரபோகவில்லை.  இதனால் தொகுதி மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும்  நிவர்த்தி செய்ய வில்லை  என்ற பேச்சும் இப்பவே தொகுதி மக்கள் மத்தியில் பரவலாக  எதிர் ஒலித்தும் வருகிறது .

 

சார்ந்த செய்திகள்

Next Story

வந்ததா.. வந்ததா..? அ.தி.மு.க.வேட்பாளர் அதிரடி நடவடிக்கையால் வாக்காளர்கள் அதிர்ச்சி! கட்சியினர் அதிருப்தி!!

Published on 14/04/2021 | Edited on 14/04/2021

 

Aandipatti ADMK Candidate farmed team and investigated about money for vote

 

ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரின் அதிரடி நடவடிக்கையால் வாக்காளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளது மட்டுமின்றி, அதிமுக கட்சியினரும் வேட்பாளர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

 

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி தொகுதியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக லோகிராசன், திமுக வேட்பாளராக மகாராசன், அமமுக வேட்பாளராக ஜெயக்குமார் உட்பட மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி என மொத்தம் 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குப் பதிவுக்கு சில நாட்களுக்கு முன்பு அதிமுகவினரால் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா பகிரங்கமாக நடத்தப்பட்டது. 

 

வாக்கு பதிவு அன்று ஏராளமானோர் தங்களுக்குப் பணம் கிடைக்கவில்லை என்று அதிமுக நிர்வாகிகளை நச்சரிக்கத் தொடங்கினர். இது ஆண்டிபட்டி தொகுதியின் நகர்புறத்தில் தொடங்கி கிராமபுறங்கள் வரை எதிரொலித்தது. இதனால் கலக்கம் அடைந்த அதிமுக வேட்பாளர், நேரடியாக களத்தில் இறங்கி பணப்பட்டுவாடா செய்தார். ஆனால், வெற்றிக்கான வாக்குகள் தனக்கு கிடைக்கவில்லை என்று ஆதங்கம் அடைந்தார். 

 

தொடர்ந்து கட்சியின் கிளைச் செயலாளர் முதல் அனைத்து பொறுப்பாளர்கள் மீதும் சந்தேகமடைந்து ஏகவசனத்தில் திட்டி தீர்த்துவந்தார். திடீரென்று ஒரு குழுவை அமைத்து, தெருக்கள் தோறும் வீடு வீடாகச் சென்று ஒட்டுக்குப் பணம் வந்ததா? எத்தனை பேர் பணம் பெற்றுள்ளனர் என்று புள்ளிவிவரங்களை சேகரித்தார். இதனால், வாக்காளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதிமுக வேட்பாளரின் இந்தச் செயலால் கிளைச் செயலாளர், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைத்து தரப்பினரும் கடும் அதிருப்தி அடைந்தது மட்டுமின்றி, வேட்பாளர் மீது வெறுப்பும் கோபமும் அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் எந்த ஒரு அதிமுக வேட்பாளரும் செய்யாத செயலை ஆண்டிபட்டி வேட்பாளர் லோகிராசன் செய்திருப்பது மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

ஓ.பி.எஸ். பிரச்சாரத்தின்போது தேம்பித் தேம்பி அழுத அதிமுக வேட்பாளர்!

Published on 05/04/2021 | Edited on 05/04/2021

 

AIADMK candidate cries during OPS campaign


தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் ஓ.பி.எஸ். இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அதிமுக வேட்பாளர் லோகிராஜன் தேம்பித் தேம்பி அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டியில் அதிமுக வேட்பாளர் லோகிராஜனை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பி.எஸ். நேற்று இறுதிக்கட்டப் பிரச்சாரம் செய்தார். இதற்காக நகரில் உள்ள பாலக்கோம்பை பிரிவில், அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கூட்டத்தைக் கூட்டினர். அங்கு பேசிய ஓ.பி.எஸ்., “லோகிராஜன் பாவம்யா; அப்புராணி அவருக்கு இந்த முறையாவது ஓட்டுப் போட்டு ஜெயிக்க வையுங்க” என்றார். 

 

அப்போது அருகில் இருந்த பொதுமக்களைப் பார்த்துக் கும்பிட்டபடி திடீரென உணர்ச்சிவசப்பட்டு தேம்பித் தேம்பி அழுதார் அத்தொகுதி வேட்பாளர். அவரை தேற்றி சமாதானம் செய்து பிரச்சாரத்தை முடித்தார் ஓ.பி.எஸ். மாவட்டம் முழுவதும் அதிமுகவினருக்கு உள்ள எதிர்ப்பால் வேட்பாளர் கலங்கி இருக்கலாம் என்று கட்சியினர் தெரிவித்தனர். 

 

ஆண்டிபட்டியில் பாலக்கோம்பை பிரிவில் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காக பெரியகுளம் வழியாக ஓ.பி.எஸ்., ஆண்டிபட்டி வந்தார். முன்னதாக பாலக்கோம்பை பிரிவுக்கு முன்னால் இருக்கும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார் ஓ.பி.எஸ். அங்கு கூட்டத்தைக் காண்பிப்பதற்காக அதிமுக நிர்வாகிகள், பிரச்சாரத்திற்குக் கூடிய மக்களை எம்.ஜி.ஆர். சிலைக்கு அழைத்துவந்தனர். பின்னர் பிரச்சாரப் பகுதிக்கு அதே மக்களை அதிமுகவினர் அழைத்துச் சென்றனர்.