Skip to main content

தனது குடும்ப சொந்தங்கள் அரசியலுக்கு வந்தால் சவுக்கடி அடிப்போம் என... அன்புமணி பதில்

Published on 25/02/2019 | Edited on 25/02/2019

 

சென்னை தி.நகரில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
 

கேள்வி: டாக்டர் ராமதாஸ் ஜீனியர் மோடி. அவர் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. தனது குடும்ப சொந்தங்கள் அரசியலுக்கு வந்தால் சவுக்கடி அடிப்போம். அதேபோல் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று வாக்குறுதி அளித்தார். இந்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை என்று இளங்கோவன் விமர்சனம் செய்திருக்கிறாரே?

 

anbumani


 

பதில்: நாங்கள் என்றைக்கு ஆண்டோம். நாங்கள் ஆளும் கட்சியில் இருக்கிறோமா? இதற்கு முன்பு ஆண்டோமா? வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு. பொதுமக்கள் வாக்குறுதியை சொல்லிக்கொண்டிருக்கிறோம். அதை நிறைவேற்றவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். 
 

கேள்வி: அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் இனிமேல் பாமக ஊழலைப் பற்றி பேச முடியாது என உங்கள் கட்சியில் இருந்து விலகிய ராஜேஸ்வரி ப்ரியா கூறியிருக்கிறாரே?
 

பதில்: அது அவருடைய கருத்து அவ்வளவுதான். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்