



Published on 03/04/2019 | Edited on 03/04/2019
மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பாலை ஆதரித்து அக்கட்சியின் அன்புமணி ராமதாஸ் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சூளைமேடு பகுதியில் செவ்வாய்க்கிழமை பிரச்சாரம் செய்தனர்.
இந்த பிரச்சாரத்தின்போது ஒலிபெருக்கி சரிந்ததில் மூதாட்டி ஒருவரின் காலில் விழுந்தது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். அப்போது அருகில் இருந்த அமைச்சர் ஜெயக்குமார் பிரச்சார வேனில் இருந்து இறங்கி வந்து மூதாட்டியின் காலை பிடித்துவிட்டு, துண்டால் மூதாட்டியின் காலை கட்டி முதலுதவி செய்தார். வலி தாங்க முடியாமல் அந்த மூதாட்டி கதறியதால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தனது கட்சியினரிடம் கூறி, அனுப்பி வைத்தார்.