Skip to main content

எதைக் கொண்டு வந்தோம் இழப்பதற்கு... சொல்கிறார் ஓ.பி.எஸ். 

Published on 15/02/2018 | Edited on 15/02/2018
O. Panneerselvam



சென்னை ராயப்பேட்டையில் அம்மா பேரவை ஆலோசனை கூட்டம் இன்று நடைப்பெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பி.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் பங்கேற்றனர். 
 

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், ஜெ. பிறந்தநாளன்று நலத்திட்டங்களை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது என்று தெரிவித்தார். 

 

aiadmk office


முதல்வர் பதவியிலிருந்து விலகி ஒரு வருடம் ஆனதில் வருத்தம் உள்ளதா என்ற கேள்விக்கு, எதைக் கொண்டு வந்தோம் இழப்பதற்கு என பதிலளித்தார். மக்கள் கருத்து எங்களுக்கு எதிராக இல்லை. தமிழகத்திலிருந்து கிடைக்கும் வரி வருவாயில் உரிய பங்கை வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். தமிழக அரசின் சுகாதார திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என கூறினார்.
 

பயங்கரவாதிகளின் பயிற்சி மையமாக தமிழகம் மாறிவிட்டது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று கூறியிருந்தார். இதற்கு ஜமுக்காளத்தில் வடிக்கட்டிய பொய் என ஓ.பி.எஸ். பதிலளித்தார்.
 

படங்கள்: அசோக்குமார்
 

சார்ந்த செய்திகள்

Next Story

தாயைப் பற்றி பேசினால் கொதிக்கும் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை பார்த்து அந்த வார்த்தையை கூறலாமா..? - கொதிக்கும் பெங்களூர் புகழேந்தி!

Published on 27/10/2021 | Edited on 27/10/2021

 

fh

 

சிறையிலிருந்து விடுதலையான சசிகலா, கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி அதிமுக பொன்விழாவை முன்னிட்டு ஜெயயலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினார். அடுத்தடுத்த நாட்களில் அரசியல் தொடர்பாக கருத்து தெரிவித்ததோடு, கழக பொதுச்செயலாளர் சசிகலா என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டை திறந்து எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு மேலும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் தந்தார். இந்நிலையில், பன்னீர்செல்வமும் அவருக்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ள நிலையில், இதுதொடர்பாக அதிமுக முன்னாள் செய்தித்தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 


கடந்த சில நாட்களுக்கு முன் மதுரையில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், மக்கள் ஏற்றுக்கொள்வதைப் பொருத்து அவர்களின் வெற்றி இருக்கும். சசிகலா அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவரா என்பதைக் கட்சியில் கூடி பேசி முடிவு செய்வோம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ்தான் சசிகலாவை நீக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினார். எனவே சசிகலாவை அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியிருந்தார். இருவரின் மாறுபட்ட கருத்தை எப்படி பார்க்கிறீர்கள்? 

 

அண்ணன் பன்னீர்செல்வம் அவர்கள் அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருப்பவர். அவருக்கு அனைத்து விதமான அதிகாரங்களும் இருக்கிறது. திருமதி வி.கே. சசிகலா அவர்கள் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப்படுவரா என்ற கேள்விக்கு அவர் பெருந்தன்மையாக பதிலளித்துள்ளார். அவர் நினைத்திருந்தால் அதிமுகவில் அவர் சேர்த்துக்கொள்ளப்படுவார் என்று நேரடியாக அறிவித்திருக்கலாம். ஆனால், மிக நாகரீகமாக கட்சி நிர்வாகிகள் கூடி அவர் அதிமுகவில் சேர்வது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று தெளிவாக கூறியிருக்கிறார். அதிலிருந்தே அவரின் அரசியல் நிலைப்பாட்டை நாம் புரிந்துகொள்ள முடியும். இந்த ஜெயக்குமார் போன்றவர்களுக்கு ஏதோ பெரிய பிரச்சனை இருக்கிறது. அதனால்தான் தொடர்ந்து அவர் இவ்வாறு பேசி இருக்கிறார். பன்னீர்செல்வம் அவர்களின் பேட்டிக்குப் பின்னால் ஏதோ பேசப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன். 

 

விரைவில் குரு பூஜை வர இருக்கிறது. அதில் கடந்தமுறை எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டபோது பேனர் உள்ளிட்டவை கிழிக்கப்பட்டு பல இடங்களில் பிரச்சனை ஏற்பட்டது. இந்தமுறை அதில் மேலும் சிக்கல் எழுந்துள்ளது. கடந்த தேர்தலில் திமுக முன்னாள் அமைச்சர் ஆ. ராசா தன் தாயைப் பற்றி தவறாக கூறிவிட்டார் என்று கூறி தேர்தல் நேரத்தில் அனைத்து இடங்களிலும் பிரச்சாரம் செய்தார். ஆனால் சசிகலா பற்றிய கேள்விக்கு, "சூரியனைப் பார்த்து... அதற்கு மேல் நீங்களே புரிந்துகொள்ளுங்கள்" என்று எடப்பாடி பழனிசாமி பேசுகிறார் என்றால் அவருக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அப்படி என்றால் சசிகலாவை நாயோடு அவர் ஒப்பிட்டு பேசியிருக்கிறார். இது அவர் சார்ந்த சமூகத்தில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அனைத்தும் குரு பூஜையில் எதிரொலிக்கும். எடப்பாடி பழனிசாமி தனது தாயைப் பற்றி பேசினால் அழுது ஆர்ப்பரிப்பார், ஆனால் அடுத்தவர்களை நாய் என்ற தொணியில் பேசுவார் என்றால் இதை தென்தமிழக மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள். நிச்சயம் அவருக்கு அங்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். 

 

அண்ணன் பன்னீர்செல்வம் அவர்கள் குரு பூஜையில் எதிர்ப்பு வரக் கூடாது என்ற காரணத்திற்காக இதைச் சொல்லியிருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். அவ்வாறு சொல்லியிருந்தால் அது பெரிய தவறு. அவர் இதை மனப்பூர்வமாக கூறியிருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். அவர் தலைமை பொறுப்பில் இருக்கிறார், அவருக்கு உரிமை இருக்கிறது. தற்போது பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஜெயக்குமார் போன்றவர்கள் அறிவுரை வழங்குகிறார்கள். அவர் எடப்பாடி பழனிசாமி அரசை ஊழல் அரசு என்று கூடத்தான் விமர்சனம் செய்தார். ஆனால் அவரை ஏன் சேர்த்துக்கொண்டீர்கள். பழைய கதையைப் பேசிக்கொண்டிருந்தால் எதிர் தரப்பில் உள்ளவர்களும் பேசுவார்கள். அடுத்து கே.பி. முனுசாமி, அதிமுகவில் சசிகலா வந்தால் செத்துவிடுவேன் என்றெல்லாம் பேசியிருக்கிறார். அவர் ஐந்தரை ஆண்டுகள் நாடாளுமன்ற மாநிலங்களவை பதவி இருக்கும்போதே சட்டமன்றத் தேர்தலில் நின்று அந்த இடத்தை திமுகவுக்கு தாரை வார்த்தவர். தற்போது அவர் சட்டமன்ற உறுப்பினராக உள்ள தொகுதியிலும் இடைத்தேர்தல் வந்தால் அந்த மக்கள் தாங்குவார்களா? அவர் நீண்ட நாட்கள் வாழ வேண்டும். இன்னும் நடக்கிருக்கின்ற அரசியல் கூத்துகளை அவர் பார்க்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.

 

 

Next Story

ஒரு நிமிடம் கூட ஆட்சியில் இருப்பதற்கு அதிமுகவுக்கு தகுதி இல்லை? - நாஞ்சில் சம்பத் பேட்டி!

Published on 01/02/2021 | Edited on 01/02/2021

 

Admk doesn't deserve to be in power even for a minute - Interview with Nanjil Sampath

 

2021 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆளும் அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. மேலும் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு உள்ளிட்டவை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. 

 

இந்தநிலையில் திமுகவுக்கு ஆதரவாகத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் நாஞ்சில் சம்பத். "திமுக ஏன் ஆட்சிக்கு வரவேண்டும்?" என்ற கேள்வியை எழுப்பினோம். 

 

அதற்கு அவர், தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் காவு கொடுத்திருக்கிற அதிமுக ஒரு நிமிடம் கூட ஆட்சியில் இருப்பதற்குத் தகுதியற்றது. எல்லாத் துறைகளிலும் கோடிக் கணக்கில் முறைகேடுகள் செய்து, இந்தியாவில் ஊழல் ஆட்சி நடைபெறுகிற ஒரே மாநிலம் என்று பெயர் பெற்றிருக்கிற இவர்கள், பதவியில் இருந்து இறக்கப்பட வேண்டும். 

 

தூத்துக்குடியில் அறம் சார்ந்த போராட்டத்தை நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி, 13 பேரை கொலைசெய்த இந்த கும்பல், கோட்டையில் இனி குடியேறக்கூடாது. சாத்தான் குளத்தில் கரோனா காலத்தில் கடை திறந்து வைத்திருக்கிறார் என்ற காரணத்திற்காக தகப்பனையும் மகனையும் கொன்று முடித்த இந்த கொலைகார ஆட்சி, நீடிப்பதற்கு எந்தத் தகுதியும் இல்லை. 

 

யாரும் தொடமுடியாத அளவிற்குத் தமிழகத்தில் விலைவாசி உயர்ந்திருக்கிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு துரும்பைக் கூட தூக்கிப்போடாத இவர்கள் ஆட்சிக்கு நிச்சயமாக வரக்கூடாது. அதையும் தாண்டி, தமிழ்நாட்டில் பெண்களுடைய உயிருக்கும், உடைமைக்கும் இன்று பாதுகாப்பு இல்லை. ஆணவக் கொலைகள் நாளும் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டிருக்கிறது. 

 

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் புதிய ஆட்சி வரவேண்டும். வேலையில்லாத இளைஞர்களுக்காக வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தருகிற ஆட்சியாக அவர்களுடைய ஆட்சிதான் இருக்க முடியும். உள்ளாட்சித் துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் எந்த ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் ஒரு தலைசிறந்த நிர்வாகி என்று பாராட்டப்பெற்ற ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும்.