சபரிமலை தீர்ப்புக்கு எதிராக கேரள அரசாங்கம் எந்த மறுசீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்படாது. சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு தேவையான உதவிகளியும், பாதுகாப்பையும் அளிப்போம் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மேலும், கேரளாவைச் மற்றும் அண்டை மாநில பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுவார்கள். இவர்கள் பெண்களுக்கான சட்ட ஒழுங்கு கேடாமல் இருக்க பணி அமர்த்தப்படுவார்கள். சபரிமலைக்கு வரும் பெண்கள் எங்கும் தடுத்து நிறுத்தப்பட மாட்டார்கள் என்று உறுதியளித்தார்.
நேற்று சபரிமலைக்கு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஆயிரக்கணக்கான பெண்கள் பேரணியில் ஈடுபட்டது குறிப்பிட்டது.