Skip to main content

உத்தரபிரதேச தேர்தல்: பா.ஜ.க.வை வீழ்த்த புதிய வியூகம் வகுத்த காங்கிரஸ்!

Published on 03/02/2022 | Edited on 03/02/2022

 

uttarpradesh assembly election bjp with congress

 

உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரைக் களமிறக்காததால் இரு கட்சிகளிடையே மறைமுகக் கூட்டணி உள்ளதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. 

 

கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது உத்தரபிரதேச மாநிலம். கடந்த 1989- ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் உத்தரபிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு மீண்டும் அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 114 தொகுதிகளில் போட்டியிட்டு 7 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றது. 

 

காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியும் 6.25%- லிருந்து 5.4% ஆக குறைந்தது. இந்த முறை காங்கிரஸ் கட்சி புதிய நம்பிக்கையுடன் தேர்தலை எதிர்கொண்டுள்ளது. உத்தரபிரதேச பா.ஜ.க. மீதான எதிர்ப்பு மனநிலை விவசாயிகள் போராட்டம், பெண் வேட்பாளர்களை முன்னிறுத்தி மேற்கொள்ளும் பரப்புரை போன்றவற்றோடு, சிறுபான்மையினர், பட்டியலினத்தனர்களின் வாக்குகள் தங்களுக்கு கைகொடுக்கும் என நம்புகிறது காங்கிரஸ்.

congress

அதே நேரம், பா.ஜ.க.வுக்கு கடும் சவாலாக இருக்கும் சமாஜ்வாதி கட்சிக்கு மறைமுகமாக உதவி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். கடந்த முறை பா.ஜ.க.வின் வெற்றிக்கு பங்கு வகித்த ஓபிசி பிரிவு தலைவர்கள், அண்மையில் பா.ஜ.க.வில் இருந்து சமஜ்வாதிக்கு தாவியதுப் போது கூட, காங்கிரஸ் கட்சி இதனை விமர்சிக்கவில்லை. 

 

அதேபோல, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் போட்டியிடும் சட்டமன்றத் தொகுதியில், அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரை நிறுத்தவில்லை. கடந்த 2017- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சமாஜ்வாதி- காங்கிரஸ் கூட்டணி 54 இடங்களை வென்றது. கூட்டணி அமைத்து போட்டியிட்டதே தோல்விக்கு காரணம் என்றும், இந்த தேர்தலிலும் அந்த நிலை தொடர வேண்டாம் என்ற எண்ணத்தில் இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிடுவதாகவும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றன. 

 

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு சமாஜ்வாதி கட்சி காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிக்கும் என்றும் கருதப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உ.பி.யில் பரபரப்பு; பாஜக வேட்பாளரை எதிர்த்து அவரது மனைவியே போட்டி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

பாஜக எம்.பியை எதிர்த்து அவரது மனைவியே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் இட்டாவா நாடாளுமன்ற உறுப்பினராக ராம்சங்கர் கத்தேரியா இருந்து வருகிறார். இவர் தற்போது நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் பாஜக சார்பில் இட்டாவா தொகுதியில் போட்டியிடுகிறார். இட்டாவா தொகுதிக்கு நான்காவது கட்டமாக மே 13 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து அவரது மனைவி மிருதுளா கத்தேரியா சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிருதுளா, அவரது கணவர் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். பின்பு தனது வேட்புமனுவை வாபஸும் பெற்றார். இதனைத் தொடர்ந்து ராம்சங்கர் 64,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். இந்த நிலையில் தான் தற்போது மிருதுளா கத்தேரியா மீண்டும் வேட்புமனுவை தாக்கல்செய்துள்ளார்.

wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மிருதுளா, “வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். இந்த முறை வேட்புமனுவை திரும்ப பெற மாட்டேன். தேர்தலில் போட்டியிடுவது எனது ஜனநாயக உரிமை என்று தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு முறையும் வேட்புமனுவை தாக்கல் செய்து பின்பு அதனை வாபஸ் பெறுகிறார். தேர்தலில் போட்டியிடுவது அவரது முடிவு” என்று மிருதுளாவின் கணவர் ராம்சங்கர் கத்தேரி தெரிவித்துள்ளார்.

ஆனால் பாஜக வேட்பாளர் ராம்சங்கரின் வேட்புமனுவில் ஏதாவது சிக்கல் இருந்து அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், பாஜக ஆதரவுடன் ராம்சங்கர் கத்தேரியின் மனைவி மிருதுளா பாஜகவில் போட்டியிட இந்த வேட்புமனு உதவியாக இருக்கும். அதனால் தான் மிருதுளா கத்தேரி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எழுதிய மாணவர்கள்; ஆசிரியர்களின் செயலால் அதிரடி நடவடிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Action by teachers on Students wrote 'Jai Sri Ram' in the answer sheet

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் பகுதியில் வீர் பகதூர் சிங் புர்வன்சால் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பல்கலைக்கழத்தில் பி-பார்ம் பயின்ற முன்னாள் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்கள் எழுதிய தேர்வில் அவர்களை தேர்ச்சி பெற வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பான புகாரை, பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முன்னாள் மாணவர்கள் முதலாமாண்டு தேர்வில் எழுதிய விடைத்தாள்களின் நகலை எடுத்து சரி பார்த்துள்ளார். அதில், ஜெய் ஸ்ரீ ராம் என்றும், ஜெய் ஹனுமான் என்றும், கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா என்ற வார்த்தைகளை மட்டும் எழுதி விடைத்தாள்களை நிரப்பியுள்ளனர். அந்த விடைத்தாள்களுக்கு 56% மதிப்பெண்களை ஆசிரியர்கள் மூலம் பெற்றுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், இந்த விடைத்தாள்களை முறைப்படி மீண்டும் திருத்த சொன்ன போது, அதில் அனைவருக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனையடுத்து, விடைத்தாள்களின் நகலையும், முறைப்படி திருத்தப்பட்ட விடைத்தாள்களையும் எடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், இந்த முறைகேட்டில் 2 ஆசிரியர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. அதன் பேரில், மாணவர்களிடம் பணத்தைப் பெற்று கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைத்த அந்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான், கிரிக்கெட் வீரர்கள் பெயரை மட்டுமே எழுதி வைத்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.