Skip to main content

உத்தராகண்ட் வெள்ளப்பெருக்கு: 16-வது நாளாக தொடரும் மீட்புப் பணிகள்!

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

JKL


உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில், கடந்த 7 ஆம் தேதி ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவு காரணமாக தெலலிங்கா ஆற்றில் திடீரென கடுமையான நீர்வரத்து ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கிப் பலியான 68 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மேலும், 137 பேரைக் காணவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களையும், தபோவன் சுரங்கத்தில் சிக்கிக்கொண்டவர்களையும் மீட்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
 

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அங்கு மீட்புப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ரிஷிகங்கா ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்ததால் சாமோலி மாவட்டத்தில் மீட்பு நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டதோடு, தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது 16-வது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.


 

 

சார்ந்த செய்திகள்