Skip to main content

ஓடிடி தளத்திற்கு கட்டுப்பாடுகள்; மக்கள் தொகை கொள்கை உருவாக்கப்பட வேண்டும் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு!

Published on 15/10/2021 | Edited on 15/10/2021

 

mohan bhagwat

 

உலகம் முழுவதுமுள்ள இந்து மக்களால் இன்று (15.10.2021) விஜயதசமி விழா கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், விஜயதசமியையொட்டி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பிலும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் இஸ்ரேலிய துணை தூதரகத்தின் ஜெனெரல் கலந்துகொண்டார்.

 

இந்த விஜயதசமி நிகழ்வில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் மோகன் பகவத், நமது எல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். விஜயதசமி விழாவை முன்னிட்டு மோகன் மோகன் பகவத் பேசியது வருமாறு,

 

“பிரிவை அதிகமாக்கும் கலாச்சாரத்தை நாங்கள் விரும்பவில்லை. தேசத்தை ஒன்றிணைத்து அன்பை ஊக்குவிக்கும் கலாச்சாரத்தையே நாம் விரும்புகிறோம். எனவே பிறந்தநாள், பண்டிகைகள் போன்ற சிறப்பான சந்தர்ப்பங்கள் ஒன்றாக கொண்டாடப்பட வேண்டும். இந்தியா முன்னேறுவதாலும், மரியாதையான நிலைக்கு உயர்வதாலும் உலகில் உள்ள சில சக்திகளின் நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படும்.

 

இந்தியாவின் பாரம்பரியங்கள், மதம், தற்போதைய வரலாறு ஆகியவற்றை நிந்திக்கும் முயற்சிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. நாடு பிரிக்கப்பட்டது ஒரு சோகமான வரலாறு. அந்த வரலாற்றின் உண்மையை எதிர்கொள்ள வேண்டும். இழந்த ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் மீண்டும் கொண்டு வர, புதிய தலைமுறை அந்த வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டும்.

 

ஓடிடி தளங்களில் என்ன காண்பிக்கப்படுகிறது என்பதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. கரோனாவிற்குப் பிறகு குழந்தைகளிடம் கூட தொலைபேசிகள் உள்ளன. போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துவருகிறது. அதை எப்படி தடுப்பது? இத்தகைய வணிகங்களின் மூலமாக கிடைக்கும் பணம், தேச விரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

 

மக்கள் தொகை கொள்கை மீண்டும் ஒருமுறை பரிசீலிக்கப்பட வேண்டும். அடுத்த 50 ஆண்டுகளுக்கான கொள்கை உருவாக்கப்பட வேண்டும். அந்தக் கொள்கை சமமாக செயல்படுத்தப்பட வேண்டும், மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு ஒரு பிரச்சனையாகிவிட்டது.

 

udanpirape

 

தலிபான்களின் வரலாறு நமக்குத் தெரியும். சீனாவும் பாகிஸ்தானும் இன்றுவரை தலிபான்களை ஆதரிக்கின்றன. தலிபான்கள் மாறினாலும், பாகிஸ்தான் மாறவில்லை. இந்தியா தொடர்பான சீனாவின் நோக்கங்கள் மாறிவிட்டனவா? நமது எல்லைப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.”

இவ்வாறு மோகன் பகவத் பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகர் அடித்த காலண்டர்; போலீசில் புகாரளித்த இந்து முன்னணி

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
Calendar scored by DMK person; Hindu Front reported to police

ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக உள்ள திமுகவைச் சேர்ந்தவர் காயத்ரி இளங்கோ. இவர் 2024 க்கான மாத காலண்டர் ஒன்றை அச்சிட்டு வெளியிட்டிருந்தார். அதில் குறிப்பாக 2024 ஜனவரி 30 ஆம் தேதி 'ஆர்.எஸ்.எஸ் மதவெறிக்கு உத்தமர் காந்தி படுகொலை' (1948) என்று அச்சிடப்பட்டிருந்தது.  

'காந்தி படுகொலைக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தும் வேண்டுமென்றே உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை விமர்சிக்கும் விதமாக, காழ்ப்புணர்ச்சியுடன் அமைதியை சீர்குலைத்து மதக்கலவரம் ஏற்படுத்தும் விதமாக காலண்டர் அச்சடித்து பொதுமக்களிடம் விநியோகம் செய்து வருகிறார்' என இந்து முன்னணியினர் தெரிவித்து வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கமானது தேசபக்தி மிக்க நல்ல பண்புள்ள மனிதர்களை உருவாக்கும் அமைப்பாகும். இந்த அமைப்பின் நற்பெயரை சீர்குலைக்கும் வகையிலும், மக்களிடம் பிளவு ஏற்படுத்தி கலவரம் உருவாக வேண்டும் என்ற தீய எண்ணத்தில் காலண்டர் அச்சடித்து விநியோகம் செய்யும் காயத்ரி இளங்கோ என்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இந்து முன்னணி ஈரோடு மாவட்ட தலைவர் பா. ஜெகதீசன் தலைமையில் ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

Next Story

சனாதன தர்மம் கெட்ட வார்த்தையா? - ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் விளக்கம்!

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

  RSS Explanation Sanatana Dharma in the meeting!

 

ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் எனப்படும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சீருடை அணிவகுப்பு ஊர்வலம், சேலம் மறவனேரியில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 19) நடந்தது. மாலையில், பொதுக்கூட்டம் நடந்தது. 

 

மாநில செயற்குழு உறுப்பினர் விவேகானந்தன் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், “ஒரு சமுதாயம், தான் யார் என்பதை மறந்து போனால் அந்த சமுதாயம் அழிந்து போய்விடும். நம்முடைய முன்னோர் யார்? நம் மொழி என்ன? உணவுப் பழக்கம், கலாச்சாரம் ஆகியவற்றை மறந்து விடக்கூடாது. 

 

  RSS Explanation Sanatana Dharma in the meeting!

 

நம் நாட்டில் எத்தனையோ பண்பட்ட மொழிகள் இருந்தும், பள்ளியில் குழந்தைகளுக்கு ஆங்கிலம் என்ற அந்நிய மொழியைத்தான் கற்றுக் கொடுக்கிறோம். நாம் நம்முடைய சொந்த மொழியை மறந்து கொண்டிருக்கிறோம். மேலாண்மையைக் கற்றுக்கொள்ள நாம் அமெரிக்காவின் மேலாண்மை புத்தகங்களை பயில வேண்டிய தேவை இல்லை. பகவத் கீதையிலும், மஹாபாரதத்திலும் மேலாண்மைக் கோட்பாடுகள் நிறைய உள்ளன. இப்படி நம் நாட்டில் எல்லாமே இருக்கிறது. 

 

சனாதன தர்மம் இப்போது பெரிய சர்ச்சை ஆகிவிட்டது. சனாதன தர்மம் இந்த தேசத்துடன் பிறந்தது. அதனோடு வளர்ந்தது. சனாதன தர்மத்தை பாரதம், உலகத்திற்கே அளிக்க வேண்டும் என்றார் அரவிந்தர். நாம் நம் வாழ்க்கையில் செய்ய வேண்டிய கடமைகளைக் கூறுவதுதான் சனாதன தர்மம். 

 

  RSS Explanation Sanatana Dharma in the meeting!

 

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொன்னார் அவர் இந்துதான். இன்றைக்கு இருக்கும் கொந்தளிப்பான நிலையில் இருந்து மீண்டு பாதுகாப்பான வாழ்க்கையை அளிப்பதற்கு சனாதன தர்மம்தான் தேவை. அது எப்போதைக்கும் பொருத்தமானது. 

 

மகாத்மா காந்தி ஆர்.எஸ்.எஸ்.க்கு மிகவும் நெருக்கமானவர். அவரை ஏதோ நமக்கு வேண்டாதவர் போல் சிலர் சித்தரிக்கின்றனர். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த அன்று அவர் இருந்த இடம் கொல்கத்தா. அன்று நடந்த கலவரங்களால் அவர் மனம் வெறுத்துப் போய், சுதந்திரத்தைக் கொண்டாடாமல் உண்ணாவிரதம் இருந்தார்.

 

அங்கிருந்து டெல்லிக்கு வந்தார் காந்தி. அங்கும் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது காந்தியின் உதவியாளர் ஒருவர் வந்து, பக்கத்துல முஸ்லிம் லீக் ஆட்கள் நடமாட்டம் இருக்கு. அதனால் காந்தியின் உயிருக்கு ஆபத்து நேருமோ என்று பயமாக இருக்கிறது என்று கூறினார். அதையடுத்து, ஸ்வயம் சேவகர்கள் ராத்திரியும், பகலுமாக காந்திக்கு பாதுகாப்பு கொடுத்தார்கள். 

 

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட காந்தி, பேச்சை துவங்கும்போதே, நான் ஒரு சனாதனி ஹிந்து என்று சொல்லித்தான் பேசத் தொடங்கினார். சனாதனி என்பதை இன்றைக்கு ஏதோ கெட்ட வார்த்தை போல பேசுகிறார்கள். அப்போது, சனாதனி என்று கூறிய காந்தி கெட்டவரா? அரவிந்தர் கெட்டவரா? சனாதனம் என்பதை தப்பானது போல இங்கு சிலர் கருத்துருவாக்கம் செய்ய முயலுகின்றனர். எக்காலத்திற்கும் பொருத்தமான கருத்துகளைச் சொல்வதுதான் சனாதன தர்மம்” என்றார் விவேகானந்தன்.  

 

திடீர் சர்ச்சை: 


ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டம் சேலம் - ஆத்தூர் நெடுஞ்சாலையில் மறவனேரி பகுதியில் சாலையை முற்றாக ஆக்கிரமித்து நடத்தப்பட்டது. அரசியல் கட்சியினர், இதர சமூக இயக்கங்கள் இதுபோன்ற நெடுஞ்சாலைகளில் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறையினர் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. கூட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மறவனேரி சாலையில், வழக்கத்திற்கு மாறாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு மட்டும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளித்திருப்பது பொதுப் பார்வையாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

 

இக்கூட்டத்தையொட்டி, நிகழ்ச்சி நடந்த சாலையில் பகல் முழுவதும் பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாகச் செல்ல வேண்டிய பேருந்துகள், வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. 

 

  RSS Explanation Sanatana Dharma in the meeting!

 

இது ஒருபுறம் இருக்க, மாநகர நுண்ணறிவுப் பிரிவு, கியூ பிராஞ்ச், எஸ்.ஐ.யூ., எஸ்.பி.சி.ஐ.டி. ஆகிய அனைத்து வகை உளவுப்பிரிவு காவல்துறையினரும் ஆர்.எஸ்.எஸ். சீருடை அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை முழுமையாக வீடியோ கேமராவில் பதிவு செய்தனர். 

 

வரும் காலங்களில் இதர அமைப்புகளுக்கும் அந்த சாலையில் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதிக்குமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.