Skip to main content

மதுபோதையில் காரை ஓட்டி விபத்து; கையும் களவுமாக சிக்கிய காவலர்

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

telangana khammam district police officer car incident   

 

காவலர் ஒருவர் மதுபோதையில் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளார்.

 

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் சத்துப்பள்ளியில் காவலர் ஒருவர் தனது காரில் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். இவரின் கார் சாலையில் சென்ற இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதியுள்ளது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் காவலரின் காரை மடக்கி பிடித்தனர். காரில் இருந்து இறங்கிய காவலர் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தகராறும் செய்யார். அப்போது காவலர் மது போதையில் இருப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

 

அப்போது அங்கிருந்த சிலர் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். மேலும் இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி உள்ளனர். பட்டப்பகலில் போலீஸ் ஒருவர் மது அருந்திய நிலையில் காரை ஓட்டிச் சென்று இருசக்கர வாகனம் மீது மோதிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்