Skip to main content

கரையை கடக்கத் தொடங்கியது ஃபோனி... 10 ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

Published on 03/05/2019 | Edited on 03/05/2019

வங்க கடலில் உருவான ஃபோனி புயல் தீவிர புயலாக வலுப்பெற்று ஒடிஷா நோக்கி நகர்ந்து வருகிறது. கோபால்பூர் மற்றும் புரி தெற்கே உள்ள சந்பாலி  இடையே இன்று காலை புயல் கரையை கடக்க தொடங்கியது.

 

bnbnbnb

 

இந்நிலையில் ஆந்திராவில் ஃபோனி புயல் கரையை கடப்பதால் துறைமுகங்களில் 10 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு  ஏற்றப்பட்டுள்ளது. கலிங்கபட்டினம், பீமுனிபட்டினம் துறைமுகங்களில் 10 எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.விசாகப்பட்டினம், கங்காபுரம் துறைமுகங்களில் எட்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்