Skip to main content

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் - பேச்சுவார்த்தையின்போது காங்கிரஸ், பாஜக வெளிநடப்பு

Published on 15/11/2018 | Edited on 15/11/2018
walks outs

 

 

சபாிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கப்படும் என்ற கேரளா அரசின் நிலைப்பாட்டை கண்டித்து ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து காங்கிரஸ் பா.ஜ.க வெளியேறியதால் சபாிமலை விவாகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.

 

மண்டல மகர பூஜைக்காக சபாிமலை நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. நாளை மறுதினத்தில் இருந்து பக்தா்கள் சபாிமலையில் அனுமதிக்க பட உள்ள நிலையில் உச்சநீதிமன்றம் தீா்ப்பின் படி அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கேரளாைஅரசின் நிலைப்பாடு குறித்து இன்று முதல்வா் பினராய் விஜயன் தலைமையில் அனைத்து கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

 

இதில் தேவசம் போா்டு மந்திாி கடகம் பள்ளி சுரேந்திரன், எதிா்கட்சி தலைவா் (காங்கிரஸ்) ரமேஷ் சென்னிதல, காங்கிரஸ் மாநிலதலைவா் முல்லம்பள்ளி ராமசந்திரன், பா.ஜ.க மாநில தலைவா் ஸ்ரீதரன் பிள்ளை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

இதில் உச்சநீதிமன்றம் உத்தரவை கேரளா அரசு அமல் படுத்த உள்ளது என்றும் மேலும் சபாிமலைக்கு வர விரும்பும் அனைத்து வயது பெண்களுக்கும் முறையான அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்க தயாராக இருக்கிறது என்றும் இதே போல் பெண்களின் பாதுகாப்புக்காக பெண்  போலிசாரும் சபாிமலையில் பணி அமா்த்த பட இருப்பதாவும் பினராய் விஜயன் கூறினாா்.

 

இதற்கு காங்கிரஸ் மற்றும் பாஜக உச்சநீதி மன்றம் மறுசீராய்வு மனு மீதான விசாரணையை ஜனவாி 22-ம் தேதிக்கு தள்ளி வைத்திருப்பதால் இந்த மண்டல காலத்தில் குறிப்பிட்ட வயது உடைய அந்த பெண்களை அனுமதிக்க கூடாது என்றும் சீராய்வு மனு மீதான தீா்ப்புக்கு பிறகு அரசு அடுத்த நடவடிக்கை எடுக்க வேணடும் என்று கூறினாா்கள்.

 

இதற்கு பினராய் விஜயன் முடியாது என்றும் அல்லது பெண்கள் ஓரு குறிப்பிட்ட நாட்களில் மட்டும் செல்லும் வகையில் அதை உறுதி படுத்துவோம் என்றாா். அரசு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கிறது என்று காங்கிரஸ், பாஜக கூறியது. ஒருமதத்தின் ஆச்சாரங்களிலும் விசுவாசத்திலும் தலையிடுவதற்கு அரசுக்கு உாிமையில்லை என்று கூறி அரசின் நிலைபாட்டிற்கு எதிா்ப்பு தொிவித்து காங்கிரசும் பாஜகவும் கூட்டத்தில் இருந்து வெளியேறியது. 

 

இதனால் கூட்டம் பாதியிலேயே நின்றது. இந்த நிலையில் சபாிமலை விவகாரம் மீண்டும் ஓரு பதட்டத்தை தொற்றி கொண்டிருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உ.பி.யில் பரபரப்பு; பாஜக வேட்பாளரை எதிர்த்து அவரது மனைவியே போட்டி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

பாஜக எம்.பியை எதிர்த்து அவரது மனைவியே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் இட்டாவா நாடாளுமன்ற உறுப்பினராக ராம்சங்கர் கத்தேரியா இருந்து வருகிறார். இவர் தற்போது நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் பாஜக சார்பில் இட்டாவா தொகுதியில் போட்டியிடுகிறார். இட்டாவா தொகுதிக்கு நான்காவது கட்டமாக மே 13 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து அவரது மனைவி மிருதுளா கத்தேரியா சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிருதுளா, அவரது கணவர் ராம்சங்கர் கத்தேரியாவை எதிர்த்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். பின்பு தனது வேட்புமனுவை வாபஸும் பெற்றார். இதனைத் தொடர்ந்து ராம்சங்கர் 64,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். இந்த நிலையில் தான் தற்போது மிருதுளா கத்தேரியா மீண்டும் வேட்புமனுவை தாக்கல்செய்துள்ளார்.

wife contest against husband ramshankar katheria in bjp candidate lok sabha election

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மிருதுளா, “வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். இந்த முறை வேட்புமனுவை திரும்ப பெற மாட்டேன். தேர்தலில் போட்டியிடுவது எனது ஜனநாயக உரிமை என்று தெரிவித்துள்ளார். “ஒவ்வொரு முறையும் வேட்புமனுவை தாக்கல் செய்து பின்பு அதனை வாபஸ் பெறுகிறார். தேர்தலில் போட்டியிடுவது அவரது முடிவு” என்று மிருதுளாவின் கணவர் ராம்சங்கர் கத்தேரி தெரிவித்துள்ளார்.

ஆனால் பாஜக வேட்பாளர் ராம்சங்கரின் வேட்புமனுவில் ஏதாவது சிக்கல் இருந்து அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், பாஜக ஆதரவுடன் ராம்சங்கர் கத்தேரியின் மனைவி மிருதுளா பாஜகவில் போட்டியிட இந்த வேட்புமனு உதவியாக இருக்கும். அதனால் தான் மிருதுளா கத்தேரி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.