Skip to main content

மோடிக்கு எதிராக ராகுல் காந்தி உருவாக்கும் மெகா கூட்டணி - அதிர்ச்சியில் பா.ஜ.க.

Published on 13/04/2023 | Edited on 13/04/2023

 

- தெ.சு.கவுதமன்

 

 Rahul Gandhi's mega alliance against Modi- BJP in shock

 

இன்றைய தினம் (ஏப்ரல் 13, 2023) காங்கிரஸ் தலைவர்களும், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர்களும் சந்தித்துப் பேசியது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது! 2024ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு பா.ஜ.க.வை எதிர்கொள்வதில் இணக்கமான சூழல் வரவில்லை. ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் ஈகோ இருக்கிறது. பிரதமர் பதவி மீது எந்த ஆசையுமில்லாமல், 'பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டும்... அதற்கான கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமையேற்க வேண்டும்' என்று தமிழ்நாடு முதல்வர் எழுப்பும் குரலுக்கு, மற்ற தலைவர்களிடமிருந்து சரியான வரவேற்பு இல்லை. இப்படியாகத்தான் எதிர்க்கட்சிகள் சிதறு தேங்காயாக இருப்பதால், பா.ஜ.க.வின் வெற்றி இம்முறையும் எளிதாகக் கிடைக்குமென்றே தெரிந்தது.

 

இந்த நிலவரத்தை மாற்றும் முனைப்போடு, இம்முறை எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ராகுல் காந்தி களமிறங்கியுள்ளார். முதலில் தங்களோடு ஓரளவு ஒத்த சிந்தனையோடிருக்கும் தலைவர்களை ஒருங்கிணைக்கும் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளார். அதன் காரணமாக இன்று டெல்லியில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி, சல்மான் குர்ஷித், ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி பேரங்களைத் தாண்டி பா.ஜ.க.வுக்கு எதிரான மதச்சார்பற்ற கூட்டணியை முன்னெடுக்க வேண்டிய அவசியம் குறித்து மனந்திறந்து பேசினார்கள்.

 

பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணியை விரிவுபடுத்துவதை கூடுமானவரை சாத்தியப்படுத்திவிட்டால் அதன்பின்னர் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் மத்தியில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டுமென்றும், மிகப்பெரிய கூட்டணி பலத்தோடு 2024 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தால், மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் மோசமான செயல்பாடுகளைக் கடுமையாக எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வீழ்த்துவது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்றும் நம்பிக்கையோடு பல்வேறு வகை ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.

 

 Rahul Gandhi's mega alliance against Modi- BJP in shock

 

கூட்டம் நேர்மறை உணர்வுகளோடு முடிந்த கையோடு, பத்திரிகையாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, "இது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். வரவுள்ள தேர்தலை எதிர்கொள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் நோக்கத்தோடு சந்தித்துப் பேசியுள்ளோம்" என்று தெரிவித்தார். ராகுல் காந்தி கூறுகையில், "நாங்கள் இங்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளோம். இக்கூட்டத்தில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து, ஒற்றுமையுடன் வரும் தேர்தலை எதிர்கொள்வதாக முடிவெடுத்துள்ளோம்" என்று அறிவித்தார்.

 

கூட்டம் முடிவடைந்ததும் சூட்டோடு சூடாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நிதிஷ்குமாரும், தேஜஸ்வி யாதவும் சந்தித்துப் பேசினார்கள். அதன்பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், "நிதிஷ்குமாரும் தேஜஸ்வி யாதவும் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் மிக முக்கியமான பணியில் ஈடுபட்டுள்ளனர். நாங்களும் இவர்களோடு இணைந்து செயல்படவுள்ளோம்" என்று தெரிவித்தார். இதன்மூலம் இம்முறை எதிர்க்கட்சிகளின் முன்னெடுப்பு நம்பிக்கைக்குரிய திசையில் பயணிப்பதாகத் தெரிகிறது. இது பா.ஜ.க. தலைமைக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.