Skip to main content

பட்ஜெட்டிற்கே ஒப்புதல் இல்லை - கூட்டத்தொடர் ஒத்திவைப்பு!

Published on 10/08/2022 | Edited on 10/08/2022

 

puducherry assembly budget session union government not approved

 

புதுச்சேரி அரசின் நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காத சூழலில், அம்மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரைக்கு பின் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

 

புதுச்சேரியின் 15வது சட்டப்பேரவையில் இந்தாண்டுக்கான முழுமையான முதல் கூட்டம் என்பதால், துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் உரையாற்றினார். புதுச்சேரியில் தனிநபர் வருமானம் அதிகரித்திருப்பதாகக் கூறிய அவர், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நிதியில் 94% செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

 

புதுச்சேரி மாநில சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் உரையாற்றினார். கருப்புச் சட்டை அணிந்து பேரவைக்கு வந்திருந்த தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் உரை தொடங்கியதும் வெளிநடப்பு செய்தனர். 

 

புதுச்சேரிக்கு தேவையான நிதி கிடைக்கவும், மாநில அந்தஸ்து கிடைக்கவும் நடவடிக்கை எடுக்காமல் மாநில வளர்ச்சிக்கு தடையாக அரசியல் செய்து கொண்டிருப்பதாக ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மீது அவர்கள் குற்றம்சாட்டினர்.

 

இதனிடையே, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக புதுச்சேரி சபாநாயகர் அறிவித்தார். பட்ஜெட் கூட்டத்தொடர் என்ற போதிலும், பட்ஜெட்டிற்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்காததே பேரவை ஒத்திவைக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.