Skip to main content

திலீப்பின் உள்ளே வெளியே! மிரளும் மல்லுவுட்!

Published on 22/07/2018 | Edited on 27/08/2018
mm

 

சூழல்களின் யதார்த்தத்தையும், மக்களின் பன்முகத்தன்மையையும், நிறம் மாறாமல் திரையில் பதிவு செய்கிற மலையாள சினிமா உலகம், திலீப்பின் மிரட்டலான என்ட்ரியால் கிலி பிடித்தும் போய்க் கிடக்கிறது.

 

குறிப்பாக மல்லுவுட் உலகின் நடிகர்கள் நடிகைளைக் கொண்ட அமைப்பான ’அம்மா’வின் உறுப்பினர்கள், தங்களின் வாழ்வாதாரம், தொழில் பற்றிய எதிர் காலச் சிந்தனையில் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள்.

 

கடந்த வருடம், கேரள முன்னணி நடிகையான பாவனாவைக் கடத்தி பாலியல் வன்கொடூரத் தனமாக வீடியோ பதிவு செய்த சினிமா உலக டாண், பல்சர் சுனிலின் அட்ராசிட்டியின் பின்னணியில் நடிகர் திலீப் செயல்பட்டதை ஆதாரத்துடன் மடக்கிய கேரள போலீஸ் அவரை உள்ளே வைத்தது. 85 நாட்கள் சிறை வாசத்திற்குப் பின்பு டாப்லெவல் வழக்கறிஞர்களின் வாதம் காரணமாக ஜாமீனில் வெளிவந்திருக்கிறார் திலீப். நடிகை பாவனா கடத்தல் விவகாரத்தில் திலீப் கைது செய்யப்பட்ட உடனேயே கொச்சியிலுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் வீட்டில் சினிமா அமைப்பான ’அம்மா’ சங்கத்தின் தலைவரான நடிகரும், எம்.பி.யுமான இன்னோசன்ட்டின் தலைமையில் அவசர அவசரமாகக் கூட்டப்பட்ட செயற்குழுவில் ’அம்மா’வின் பொருளாளரான நடிகர் திலீப்பை அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கித் தீர்மானம் நிறைவேற்ற, ’அம்மா’ விலிருந்து திலீப் வெளியேற்றப்பட்டார்.

 

di

 

1991களில் சாதாரண மிமிக்கிரி கலைஞராக மேடை ஏறிய திலீப், சினிமா உலகில் நுழைந்து, ஒரு அசிஸ்டண்ட் டைரக்டரின் உதவியாளராகி பின்னர், நடிகராக உயர்ந்தவர். திரை உலகால் தன்னிடம் சேர்ந்த கொளுத்த பணத்தைக் கொண்டு தொழில் நிறுவனம், ரியல் எஸ்டேட் என வளர்ந்து பாதுகாப்பிற்காக அல்லக்கைகளை வைத்துக் கொண்ட திலீப், சர்வ வல்லமை கொண்டவராக மாறியிருக்கிறார். அதன் வலுவான பின்னணியின் காரணமாக மலையாள சினிமா அமைப்பான அம்மாவின் சக்தி கொண்ட பொருளாளர் பதவியையும் கைப்பற்றினார்.

 

பார்ப்பதற்கு மனிதர் பரமசாது போன்றிருந்தாலும், உள்ளுக்குள் எத்தனை பெரிய மனிதரானலும் வீழ்த்தி விடக் கூடிய வல்லமை கொண்டவர் திலீப் என்கிறார்கள் அவரது நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனிக்கிறவர்கள்.

 

இந்த சூழலில் கடந்த மாதம் ’அம்மா’வின் தலைவரான இன்னோசன்ட்டின் பதவிக்காலம் முடிந்ததால் புதிய தலைவராக சூப்பர் ஸ்டார் மோகன்லால் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைப் பொறுப்பாளராக மம்முட்டியும் அவருடன் கைகோர்த்தார். இந்தச் சந்தர்ப்பத்தின் போது பெயிலில் வந்த திலீப், வாய்ப்பைப் பயன்படுத்தி மறுபடியும் ’அம்மா’வில் உறுப்பினராவதற்கான முயற்சிகளை மேற் கொண்டிருக்கிறார்.  ஏனெனில் மறுபடியும் ’அம்மா’வில் நுழைந்தால் தான் தனக்கான சினிமாவாய்ப்புகளைத் அந்தஸ்துகளைத் தக்க வைத்துக் கொள்வதோடு தன்னுடைய வழக்கில் தனக் கெதிராகச் செயல்பட்ட திரையுலக நடிக நடிகரையும் தட்டி வைக்கவும் இயலும் என்பது அவரது கணக்கு. அதனால் தனது மன ஒட்டத்தை அவர் அவரே வெளியேற்றுவதாக இருக்கக் கூடாது என்பதற்காக தனது அல்லக்கை நடிகையான வயதான கேரக்டர்களில் நடிக்கிற ஊர்மிளாவைக் கிளப்பி விட்டு அவர் மூலம் தனது வாய்சை அழுத்தமாகச் சொல்ல வைத்திருக்கிறார்.

 

திலீபின், மீது போலீஸ் தானே குற்றம் சாட்டியுள்ளது. அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டதா?. பிறகெப்படி அவரை அமைப்பிலிருந்து நீக்கலாம். குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்காதவரை அவர் தொடர்பில்லாதவர் என்று தான் அர்த்தம். அதனால் அவரை மீண்டும் அமைப்பில் சேர்த்தே ஆக வேண்டும் என்று, நீ்ட்டி முழக்கிய, நடிகை ஊர்மிளா, நீதிமன்றத் தீர்ப்பு அவருக்குப் பாதகமாக வந்தால் தாரளமாக நீக்கி விடுங்கள். ஆட்சேபனை இல்லை என்று குரலை உயர்த்தி வியாக்யானம் செய்திருக்கிறார்.

 

அம்மா அமைப்பின் நிர்வாகிகளின் முதல் கூட்டத்தில் ஊர்மிளா கிளப்பிய இந்த விவகாரம், அவரால் கிளப்பப்படவில்லை. அது திலீப்பின், தயாரிப்பு, டைரக்ஷ்ன், வாய்ஸ் என்பதை தலைவர் மோகன்லாலும், மம்முட்டியும் நன்றாகவே அறிந்தவர்கள் தான். ஆனாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாதவர்கள், மறுப்பு சொல்லாமலும், உறுப்பினர்களின் கருத்தையறியாமலும் ஊர்மிளாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு திலீபை மறுபடியும் ’அம்மா’வின் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டதை தலைவர் மோகன்லால் அறிவித்திருக்கிறார்.

 

இந்த விவகாரத்தை செயற்குழுவின் விவாதத்திற்கு உட்படுத்தாமல் தலைவர் மோகன்லாலும், முக்கிய நடிகரான மம்மூட்டியும் ஏற்றுக் கொண்டதின் பின்னணியில் திலீப் பற்றிய பயமும் பீதியும் ஒளிந்திருக்கிறது. மோகன்லாலும், மம்மூட்டியும் நடிப்பில், புகழில் வேண்டுமானாமால் சிகரத்திலிருக்கலாம் ஆனால், கண்டம் விட்டுக் கண்டம் பாயக்கூடியவர் திலீப். அவரைப், பகைத்துக் கொள்ளக் கூடாது. அவரை எதிர்த்து நிற்கவும் முடியாது என்பதை சூப்பர் ஸ்டாரும். மெகா ஸ்டாரும் தெளிவாகவே உணர்ந்திருப்பதோடு தங்களின் பலம், பலவீனம் போன்ற மைனஸ்களையும் அறிந்தவர் திலீப் என்பதால் வேறு வழியில்லாமல் அவரை மறுபடியும் ’அம்மா’வில் ஏற்றியிருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிடுகின்றனர். திரையுலகப் புள்ளிகள்.

 

திலீப், ரீஎன்ட்ரி ஆனதால் ’அம்மா’வில் தீ பற்றியது. சூப்பர் ஸ்டார்களே எதிர்பார்க்காத அளவுக்கு நடிகைகள் தரப்புகளிலிருந்து பூகம்பமே கிளம்பியது கடுமையாக எதிர்த்தார்கள். அம்மாவிலிருந்து இருபது நடிகைகள் வெளியேறினார்கள். எதிர்த்தவர்களில் முக்கிய நடிகைகளான ரேவதி, மேனகா, கீது மோகன்தாஸ், பாவனா, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் போன்றவர்கள் கடும் கண்டனத்தைக் கிளப்பினார்கள். நம்மில்  ஒரு நடிகையைக் காட்டுத் தனமாகக் கடத்திக் கொண்டு போய் வக்கிரத்தனமாக வீடியோ செய்ததில் தொடர்புடையவரை எப்படி மீண்டும் அனுமதிக்கலாம் என்றெல்லாம் கேள்விகளில் அனல் பறந்தன.

 

amm

 

அம்மாவில் இணைக்கப்பட்டதைக் கண்டித்தும் நடிகைகளுக்கு. ஆதரவாகவும் கேரள அரசியல் கட்சிகள் குரல் கொடுக்கத் தொடங்கின குறிப்பாக ஆளும் கட்சியான சி.பி.எம்.மைச் சேர்ந்தவர்கள் திலீபின் கொடும்பாவியை எரித்தனர்.

 

நடிகைகளின் விலகலால் அப்செட்டான மோகன்லால் அவர்களை சமாதனபடுத்த முயன்றார். விலகியது விலகியது தான். ஆனால் நாங்கள் சினிமாவின் மற்றொரு அமைப்பான உமன் இன் சினிமா கலெக்ட்டிவ்வின் உறுப்பினர்களாகவே நீடிக்கிறோம் என்றனர்.

 

மல்லுட்டின் ஒவ்வொரு தொழில் நுட்பப் பிரிவிற்கும் ஒரு சங்கம் உண்டு. அதில் வித்தியாசமாக, பெண்களைக் கொண்ட இந்த அமைப்பில் அனைத்துக் கலைஞர்களும் இதில் உறுப்பினராக இணைந்துள்ளனர். இதன் தலைவர் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சுவாரியர் ’அம்மா’வில் திலீப் மறுபடியும் சேர்க்கப்பட்டது. தொடர்பாக எந்தவிதமான கருத்தையும் சொல்லாமல் மௌனம் காத்திருக்கிறார். வாய் திறக்கவில்லை. அம்மாவை எதிர்த்து ஆவேசக் குரலெழுப்பி விட்டு வெளியேறிய நடிகைகளுக்கு ஒரு விஷயத்தில் கிலி பிடித்துக் கொண்டது. திலீப் பலம் பொருந்தியவர். அம்மா வைப் பகைத்தால் சினிமா வாய்ப்புகள் கிட்டாமல் தங்களின் எதிர்காலம். சூன்யமாகிவிடும் என்கிற பதை பதைப்பால் மஞ்சுவாரியர் உள்பட சில நடிகைகள் வாய் மூடி மௌனியானார்கள். அம்மா வுக்கு எதிராகக் கிளம்பியவர்கள், வுமன் இன் சினிமா கலெக்ட்டிவ்வில் நீடிப்பதில் சூப்பர் ஸ்டார்களுக்குச் சம்மதமில்லாததையும், அவர்கள் தன் மீது அதிருப்தியிலிருப்பதையும் தெரிந்து கொண்ட திலீபின் மாஜி மனைவி மஞ்சுவாரியர், அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து விலகிய தோடு அதனை வெளிப்படையாக அறிவித்ததில் அதிருப்தி நடிகைகளுக்கு அதிர்ச்சி.

 

முரண்டு பிடித்ததால் திலீபின் அடியாட்கள் மிரட்டினார்கள். அம்மா, சங்கத்தில் புகார் கொடுத்தேன். அம்மா கண்டுக்கல அந்த அளவுக்கு ’அம்மா’வில் திலீப் பவர் ஃபுல். இங்கே எதிர்த்தால் எதிர்காலம் சட்னி தான் என பெயர் சொல்ல விரும்பாத நடிகை புலம்புகிறார் இப்படி.

 

தன்னை அம்மாவில் சேர்த்ததால் நடிகைகளின் விலகல், ஏற்பட்ட விவகாரங்களைத் தொடர்ந்து, நான் அம்மாவில் இருந்து விலகி விட்டேன். என்னால் பிரச்சினை வேண்டாம். நான் என்னுடைய காரியங்களைப் பார்த்துக் கொள்கிறேன் என்று அறிவித்திருக்கிறார் திலீப்.

 

உள்ளே போனாலும், வெளியே வந்தாலும் சிங்கம், சிங்கமாகத் தானிருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Police register cheating case against producers of Manjummel Boys

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

ad

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. லாபம் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் வுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் மரடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.