Skip to main content

நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்துப் பதிவிட்டவர் கொலை- விசாரணை தீவிரம்! 

Published on 05/07/2022 | Edited on 05/07/2022

 

nupur sharma speech incident national investigation agency chief meet union minister

 

மகாராஷ்டிரா மாநிலம், அமராவதியில் நடைபெற்ற மருந்துக் கடைக்காரர் கொலை வழக்கு தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமையின் தலைமை இயக்குநர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது, ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் தையல்காரர் கொல்லப்பட்டது தொடர்பான, வழக்கு விசாரணையின் விவரங்களையும், அவர் எடுத்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

தொலைக்காட்சி விவாதத்தில் முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலான கருத்துகளை தெரிவித்த நுபுர் சர்மாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவருக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நுபுர் சர்மாவின் செயலுக்கு எதிராக உச்சநீதிமன்றமும் கருத்தைப் பதிவு செய்துள்ளது. 

 

இந்தச் சூழலில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்துப் பதிவிட்ட மகாராஷ்டிரா மாநிலம், அமராவதியைச் சேர்ந்த மருந்துக் கடைக்காரர் உமேஷ் போன்டே, கடந்த ஜூன் மாதம் 21- ஆம் தேதி அன்று கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக, ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், கால்நடை மருத்துவர் யூசுப் கான், கொலை செய்யப்பட்ட உமேஷ் போன்டேவின் நண்பர் என்பது தெரிய வந்துள்ளது. 

 

இந்த நிலையில், வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான இஃர்பான் கானை காவலில் எடுத்து விசாரிக்க ஜூலை 7- ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய ஆறு பேர் அமராவதி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகள் அமராவதி சென்று விசாரித்து வருகின்றனர். 

 

உதய்ப்பூர் தையல்காரர் கொலைக்கும், இதற்கும் நிறைய ஒற்றுமை இருப்பதால், இவ்விரு கொலைகளில் வெளிநாட்டு அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்த தேசிய புலனாய்வு முகமை தலைமை இயக்குநர் இவ்விரு கொலைகள் தொடர்பான விசாரணை விவரங்களை எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.