Skip to main content

அடுத்த அப்டேட் கொடுத்த ஆதித்யா எல் - 1 விண்கலம்!

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
The next update was the Aditya L-1 spacecraft

இந்தியா சார்பில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி (02.09.2023) காலை 11.50 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்பட்டது.

இந்நிலையில் ஆதித்யா எல் 1 விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. ஆதித்யா எல் 1 விண்கலத்தில் உள்ள புறஊதா கதிர் மூலம் இயங்கும் தொலைநோக்கியில் எடுத்த புகைப்படங்கள் முதல் முறையாக இஸ்ரோ சார்பில் அதிகாரப்பூர்வமான வெளியிடப்பட்டுள்ளன. மேலும் சூரியனைச் சுற்றியுள்ள குரோமோச்பியர் மண்டலத்தை வெவ்வேறு அலைநீளத்தில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக ஆதித்யா எல்1 விண்கலம் சூரிய அனல் குழம்பில் இருந்து வெளியாகும் அதிதிறன் கொண்ட எக்ஸ் கதிர்களை முதல் முறையாக படம் எடுத்து அனுப்பிய படத்தை இஸ்ரோ கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி வெளியிட்டிருந்தது. ஆதித்யா எல்1 விண்கலத்தில் உள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் என்ற கருவி இதனை பதிவு செய்துள்ளதாகவும், இந்த பதிவு எலக்ட்ரான் முடுக்கத்தை ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்களுக்கு உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்