Skip to main content

சீனாவுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

ladak situation defence minister explain rajya sabha

 

 

சீனாவுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறல் தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கமளித்தார்.

 

மாநிலங்களவையில் அவர் கூறியதாவது; "ஒப்பந்தங்களின் அடிப்படையில் சீனா செயல்பட்டால் எல்லையில் அமைதியை நிலைநாட்ட முடியும். நமது நாட்டை யாரையும் ஆக்கிரமிக்க விட மாட்டோம். எல்லையில் அத்துமீறல் முயற்சிகளை சீனா கைவிடாவிட்டால் இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தயங்காது. எத்தனை வலிமையான எத்தனை பெரிய நடவடிக்கைகளையும் எடுக்க இந்தியா தயங்காது. லடாக்கில் 38,000 ச.கி.மீ., அருணாச்சலப்பிரதேசத்தில் 90,000 ச.கி.மீ., வரையும் சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்