Published on 19/03/2020 | Edited on 19/03/2020
காரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேல் கூடுவதற்கு டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
![delhi corona virus precaution](http://image.nakkheeran.in/cdn/farfuture/HlZm7Zm0pJjUf08G2Itg2jL80ORZtSluZid8zBwO1pw/1584602088/sites/default/files/inline-images/dbhxfhbf.jpg)
சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்து தற்போது உலகம் முழுவதும் சுமார் 165 நாடுகளில் பரவியுள்ள கரோனாவால் 2,00,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதனால் பலியானோர் எண்ணிக்கை 9000 ஐ நெருங்கி வருகிறது. இந்த வைரசால் இந்தியாவில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், 168 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கரோனா அச்சுறுத்தலால் டெல்லியில் 5 பேருக்கு மேல் கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி காவல்துறை அறிவித்துள்ளது.