Skip to main content

விஜய் தான் மாஸ்... மற்றவர்களெல்லாம் அப்புறம் தான்; எம்.எல்.ஏ பரபரப்பு பேச்சு...

Published on 13/02/2019 | Edited on 13/02/2019

 

dfdgdf

 

நடிகர் விஜய் தான் கேரளாவில் தற்போது பெரிய நடிகர் என கேரள எம்.எல்.ஏ ஜார்ஜ் பேசியுள்ளது அங்குள்ள ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அவர் கலந்துகொண்டு பேசும்போது, “கேரள தியேட்டர்களில் விஜய்க்கு மிகப்பெரிய கட் அவுட்கள் வைக்கப்பட்டு, அவரது ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்வதை நான் உள்பட பலரும் பார்த்து இருக்கிறோம். கேரளாவில் உள்ள முன்னணி மலையாள நடிகர்களை விட விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்” என கூறினார். மம்மூட்டி, மோகன்லால் படங்களை விட விஜய் படங்களுக்கு வர்த்தகம் அதிக அளவு உள்ளது எனவும் கூறினார். அவரது இந்த கருத்துக்கு மலையாள சினிமா ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விஜய்க்கு ரசிகர்கள் இருப்பது உண்மைதான், ஆனால் மம்மூட்டி, மோகன்லால் அளவுக்கு இல்லை என கூறி எம்.எல்.ஏ ஜார்ஜுக்கு எதிராக மலையாள ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரசிகர்களுக்கு நடிகர் விஜய் திடீர் அறிவிப்பு! 

Published on 14/09/2019 | Edited on 14/09/2019

ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாம் என திரைப்பட நடிகர் விஜய் தன் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
 

Vijay instructs to fans

 

சென்னை பள்ளிக்கரணையில் அரசியல் பிரமுகர் வைத்திருந்த திருமண வரவேற்பு பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் விபத்துக்குள்ளாகி இறந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்கள் கட்சியினருக்கும், தொண்டர்களுக்கும் இனி வரவேற்பு பேனர்கள் வைக்க கூடாது என்று அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய்யும் தனது ரசிகர் மன்றங்களுக்கு ஒரு அறிவிப்பு ஒன்றை கொடுத்துள்ளார். அதில்,

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க கூடாது. பேனர்கள் வைக்கப்படவில்லை என்பதை அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

 

 

Next Story

ஒரு விரல் புரட்சி உண்மையில் சாத்தியமா? - சர்கார் குறித்து திருமுருகன் காந்தி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

Published on 10/11/2018 | Edited on 13/11/2018

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்து, அதிமுகவினரின் எதிர்ப்பால் பரபரப்பாகியிருக்கிறது சர்கார் திரைப்படம் . அதில் 'இலவசங்களால் மக்கள் முட்டாளாக்கப்பட்டிருக்கிறார்கள்.அதனால் அதனை ஒழிப்போம்' என்ற வகையில் காட்சிகளும் இலவச பொருட்களை தீயிலிட்டு எரிப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அதே சமயம் இங்கு இருக்கும் எந்த அரசியல் தலைவர்களும் ஒழுங்கில்லை. அதனால் சமூக செயற்பாட்டாளர்களை தேர்ந்தெடுத்து அதிகாரத்தில் அமர வையுங்கள் அப்போதுதான் உங்களுக்கான ஆட்சி கிடைக்கும் என்ற கருத்தும் கூறப்பட்டுள்ளது. அப்படி உண்மையில் சமூக செயற்பாட்டாளர்கள் அரசியலுக்கு வருவார்களா, அப்படி வந்தால் அவர்களின் எண்ணம் என்ன, வாக்கு அரசியல் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை எல்லாம் தெரிந்துகொள்ள மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தியிடம் பேசினோம்... அவர் நமது கேள்விகளுக்கெல்லாம் அவரின் பார்வையில் பதில்களைச் சொன்னார்.

 

 

tt

 

 

சர்கார் படத்தில் 'ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளுமே, இங்கு மக்களுக்கான பணிகளை செய்யவில்லை, அரசியல்வாதிகள் அனைவரும் ஊழல்வாதிகள். அதனால் அதற்கு மாறாக சமூக செயற்பாட்டாளராக இருக்கும் ஒருவரை தேர்ந்தெடுத்து அவரை அதிகாரத்தில் அமர வைக்கவேண்டும்' என்று கூறப்படுகிறது. அதேபோல் 'அவர்கள் அதை விரும்ப மாட்டார்கள், அதனால் இளைஞர்களே நீங்கள் அவர்களை விட்டுவிடாதீர்கள்' என்பதும் ஒரு வசனம்.  நீங்களும் சமூக செயற்பாட்டாளராக இருக்கிறீர்கள், இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

 

 

அவர்களின் விருப்பத்தையும், அதனுள் இருக்கும் ஆசையையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அடிப்படை அப்படி இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல்வாதிகள் ஒருபக்கம், அதேசமயம் தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகள் மற்றொருபக்கம். இதில்  தேர்ந்தெடுக்கப்படாத அதிகாரிகள்தான் நீண்டகாலம் பணி செயகிறான். அந்த அதிகாரிகளை நம்மால் தேர்ந்தெடுக்கவும் முடியாது, தண்டிக்கவும் முடியாது, பதவியைவிட்டு இறக்கவும் முடியாது. நீதிபதி, தாசில்தார், ஆட்சியர் யாராக இருந்தாலும் அவ்வளவுதான். சட்டத்தை இயற்றக்கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத்துறை ஒரு பக்கம், அந்தச் சட்டத்தை நிர்வகிக்கும் நம்மால் தேர்ந்தெடுக்கப்படாத நிர்வாகத்துறை மற்றொருபக்கம், மூன்றாவதாக மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் கட்டமைப்பு இருக்கிறது. உதாரணத்திற்கு கட்சியில் இருக்கும் ஒருவரை குறை கூறினால் ஒட்டுமொத்த கட்சியும் எதிர்க்குரல் கொடுக்கும், இப்போது சர்காருக்கு பேசுவதுபோல். அதேபோல் நீதிபதியை பற்றி பேசினால் நேரடியாக அந்த நீதிபதி குறைகூறுபவரை தண்டித்துவிடுவார், காவல்துறையைப் பற்றி பேசினால் உடனடியாக வழக்கு பதிந்துவிடுவார்கள், ஒரு தாசிலதாரைப் பற்றி பேசினால் அவர்களின் சங்கம் பேசும். இப்படி அவர்கள் அனைவரும் ஒன்றாக நிற்கிறார்கள். ஆனால் மக்கள் ஒன்றாக நிற்கிறார்களா என்றால் இல்லை. 

 

இவர்கள் மக்களின் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்கிறார்கள் ஆனால், உண்மையில் அவர்கள் மக்களைப் பிரதிநிதித்துவம்  செய்வதில்லை. அவர்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது அவர்களுக்கும் தெரியாது. அவரைகளை ஏன் தேர்ந்தெடுத்தோம் என்பது மக்களுக்கும் தெரியாது. இங்கே அரசியல் படுத்தப்படாத அதிகாரிகளும், அரசியல் படுத்தப்படாத அதிகாரிகள்தான் இருக்கிறார்கள். இவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது? 

 

 

'ஒரு விரல் புரட்சி' என்பதுபோல் நூறு சதவிகிதம் வாக்களித்துவிட்டால் இங்கு மாற்றம் நிகழ்ந்துவிடாதா?

 

உடலில் நோய் இருக்கிறது என்பதை உணர்ந்தால்தான் மருத்துவரை தேடி செல்லுவோம், அதுபோல் சமூகத்தில் இருக்கும் நோயைப்பற்றி தெரிந்தவர்கள்தான் அதைத் தீர்க்கக்கூடிய நபரை தேர்ந்தெடுக்க முடியும். இங்கே சமூகத்தைப்பற்றி தெரிந்துகொள்ள தேவையான கல்வி ஏதாவது கொடுக்கப்படுகிறதா? நீங்கள் கணக்கு, அறிவியல் போன்றவை எல்லாம் படிக்கிறீர்கள். டெலஸ்கோப் வைத்து நிலவை பார்க்கிறீர்கள். ஆனால் என்றாவது உங்கள் சமூகத்தை பார்த்திருக்கிறீர்களா? சமூகத்தின் குறைகள் உங்களுக்கு சொல்லப்படுகிறதா, அதற்கான சட்டவிதிகள் பற்றி சொல்லித் தரப்படுகிறதா? ஒவ்வொருவருக்கும் என்ன அதிகாரங்கள் இருக்கிறது என்பது சொல்லித் தரப்படுகிறதா? அந்த அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினால், அதை எதிர்த்து கேள்விகேட்க சொல்லித்தரப்படுகிறதா அல்லது சட்டங்களை பற்றியாவது என்றாவது சொல்லி கொடுத்திருக்கிறார்களா?

 

அல்ஜிப்ராவை பற்றி சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அது நம் வாழ்வில் எப்பொழுதுமே பயன்படுவது கிடையாது. ஆனால் நாம் சட்டத்தின் கட்டமைப்பில்தான் இருக்கிறோம் அதைப் பற்றி என்றாவது சொல்லிக் கொடுத்திருக்கிறார்களா? 

மிகப்பெரிய சாஃப்ட்வேர் கம்பனியில் பணிபுரிபவராக இருந்தாலும் அவருக்கு சமூகத்தைப் பற்றிய அறிவை எடுத்துப்பார்த்தால் பூஜ்யமாகத்தான் இருக்கிறது. அவர்கள் இங்கிருக்கும் பத்திரிகைகளையும் திமுக அதிமுக அரசைபற்றியும் தெரிந்துவிட்டால் அரசியல் தெரிந்துவிடும் என்று பேசுகிறார்கள். ஆனால், சமூகவியலைப் பற்றியோ, பொருளாதாரத்தை பற்றியோ, அரசியல் விஞ்ஞானத்தை பற்றியோ படித்திருக்கிறார்களா என்றால் இல்லை. படிக்காத ஏழை எளிய கிராமத்தார் எப்படி ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுக்கிறாரோ அதுபோலவேதான் சாஃப்ட்வேர் துறையில் இருக்கும் பெரிய இடத்தில் இருப்பவரும் தேர்ந்தெடுக்கிறார். காரணம் இரண்டு பேருக்கும் சமூக அறிவே கிடையாது. அப்போ சமூக அறிவே இல்லாத மக்கள் யாரை தேர்ந்தெடுப்பார்கள்? சமூக அறிவே இல்லாத எம்எல்ஏ-வைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அந்த சமூக அறிவு இல்லாத எம்எல்ஏ-க்கள் என்ன செய்வார்கள்? சமூகத்திற்குத் தேவையற்ற திட்டத்தைத்தான் கொண்டுவருவார்கள். அதை யார் நிறைவேற்றுவார்கள்? சமூக அறிவே இல்லாத தாசில்தார், ஆட்சியர் போன்றவர்கள்தான் நிறைவேற்றுவார்கள். இப்படி ஒட்டுமொத்த கும்பலில் நாங்கள் மட்டும் அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு இந்த மக்களை பற்றியும், இந்த சமூகத்தை பற்றியும் தெரியாத அதிகாரிகளை வைத்துதான் வேலை பார்க்க வேண்டும். 

 

tt

 

 

அப்படியென்றால் அரசியல் மாற்றத்தை எப்படி நிகழ்த்த முடியும்?

முதலில் மக்களை அரசியல்படுத்துங்கள். இன்று இருக்கும் மக்களுக்கு அவர்களின் தேவை என்னவென்பது தெரிகிறதா? அவர்களின் தேவையென்ன, உரிமையென்ன, அதிகாரமென்ன என்று அவர்களும் மக்களின் முக்கியத்துவத்தை அதிகாரிகளும் அறிய வேண்டும். பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதோடு அரசியல் முடிந்துவிடாது. அதில் அவர்கள் பங்கேற்கவேண்டும். இங்கு கேள்வி கேட்க இடம் இருக்கிறதா? இங்கு எல்லாருக்கும் கோபம் இருக்கிறது. ஆனால், அனைவரும் ஒன்றாக நிற்க தளம் இருக்கிறதா? நாங்கள் யாருக்கும் சார்பான ஆட்கள் கிடையாது, மக்களுக்கு சார்பான ஆட்கள். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு எதிர் கட்சி இயக்கங்கள்தான்.