Skip to main content

கர்நாடகாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்!

Published on 23/12/2020 | Edited on 23/12/2020

 

karnataka state night curfew imposed today night

 

கர்நாடகா மாநிலத்தில் இன்று (23/12/2020) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக கர்நாடகா மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கர்நாடகா மாநிலத்தில் இன்று (23/12/2020) முதல் ஜனவரி 2- ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு 10.00 மணி முதல் காலை 06.00 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதால் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

பிரிட்டனில் உருமாறிய கரோனா பரவலைத் தடுக்க மகாராஷ்ட்ரா மாநிலத்தைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்