Skip to main content

ஊரடங்கு நேரத்தில் குதிரையில் சென்ற எம்எல்ஏ மகன்... கண்டனத்துக்குள்ளான புகைப்படம்!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020

 

h


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 43 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 2000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 74,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.


பொதுமக்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்ற அந்தெந்த மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ள நிலையில், கர்நாடக மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவருடைய மகன் இந்த ஊரடங்கு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் குதிரையில் சென்ற சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏ நிரஞ்சன் குமார் கூறுகையில், "எங்கள் பகுதி பசுமை மண்டலத்தில் தான் உள்ளது. நான் நேற்று ஊரில் இல்லை. இதுபற்றி எனக்குத் தெரியாது. என்னுடைய மகன் குதிரையில் சென்றதில் எந்தத் தவறும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இது பற்றி நான் அவரிடம் பேசுவேன்" என்று தெரிவித்துள்ளார்.


 

 

சார்ந்த செய்திகள்