Skip to main content

விஜய் மல்லையாவை கைது செய்யமல் போனது தவறு- வருந்தும் சிபிஐ

Published on 14/09/2018 | Edited on 14/09/2018
vijay mallaya


இந்திய வங்கிகள் பலவற்றில் 9000 கோடிக்கு கடனை பெற்றுவிட்டு, அதை திருப்பி அளிக்காமல் லண்டனுக்கு ஓடிய விஜய் மல்லையா, நிதி அமைச்சரை சந்தித்துவிட்டுதான் லண்டன் சென்றேன் என்றார். அதன் பின் ராகுல் காந்தி, அருண் ஜெட்லி அவருக்கு சலுகை வழங்கியுள்ளார் என்று குற்றம் சாட்டினார். இதற்கிடையில் சுப்பிரமணியன் சுவாமி,” எப்படி அவருக்கு அளிக்கப்பட்ட லுக்கவுட் நோட்டீஸ் நீர்த்துப்போனது. அதாவது லுக்கவுட் நோட்டீஸில் அவரது நடமாட்டத்தை கண்காணித்தாலே போதும் என்று எப்படி மாறியது என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.
 

தற்போது இக்கேள்விக்கு விளக்க்கம் தரும் வகையில் சிபிஐ ஒரு பதிலை அளித்துள்ளது. இது பற்றி சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது:- மல்லையாவை கண்காணிக்கப்படும் நபராக அறிவித்தபோது அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை. ஏனெனில் அவர், அப்போது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்தார். மேலும் நாடாளுமன்ற எம்.பி.யாகவும் இருந்தார். அதன் காரணமாகவே அவரை கைது செய்யுமாறு எந்த காவல் அமைப்பிடமும் நாங்கள் வலியுறுத்தவில்லை. ஆனால், அது தவறான முடிவாக மாறிவிட்டது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மல்லையா, நிரவ் மோடி வரிசையில் 8000 கோடி ஏமாற்றிவிட்டு வெளிநாடு பறந்த பிரபல தொழிலதிபர்...

Published on 23/03/2019 | Edited on 23/03/2019

விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோர் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் இந்திய வங்கிகளில் மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பி சென்றனர்.

 

sterling biotech

 

அந்த வரிசையில் குஜராத்தின் வடோதராவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த ஸ்டெர்லிங் குழும நிறுவனத்தின் நிறுவனர்களான நிதின், சேத்தன் என்ற சகோதரர்கள் இந்திய வங்கிகளில் 8,100 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு தப்பியோடினர்.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் 300–க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை பினாமி பெயரில் தொடங்கி அதன்மூலம் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இவ்வாறு அவர்களுக்கு பினாமி நிறுவனங்கள் அமைக்க அவர்களது மைத்துனரான ஹிதேஷ் படேல் உதவியதாக அமலாக்கத்துறை வழக்கு பதிந்தது.

இந்நிலையில் ஒரு வருடமாக தேடப்பட்டு வந்த ஹிதேஷ் படேலுக்கு கடந்த மாதம் ரெட் நோட்டீஸ் கொடுத்தது அமலாக்கத்துறை. இதனை தொடர்ந்து இன்டர்போல் உதவியுடன் ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். முக்கிய குற்றவாளிகளான நிதின், சேத்தன் ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் தலைமறைவாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமலாக்க துறை தெரிவித்துள்ளது.  

 

 

Next Story

தப்பி ஓடிய குற்றவாளி விஜய் மல்லையா- சிறப்பு நீதிமன்றம்

Published on 05/01/2019 | Edited on 05/01/2019

 

vijay mallya


9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, தப்பி ஓடிய குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. பொருளாதார குற்றவாளி என்பதால் மல்லையாவின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்யலாம் எனவும் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.